India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 55 வயது மதிக்கத்தக்கவருக்கு திசுசார் கோமா புற்றுநோயும், 47 வயது பெண்ணுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய், 65 வயது முதியவருக்கு மலக்குடல் புற்றுநோய் கண்டறியப்பட்டு புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் கணேஷ் பாபு, புற்றுநோயியல் கதிர்வீச்சு நிபுணர்கள் பிரியதர்ஷினி, முனிஸ்வரபாண்டியன், செபி கிருஷ்ணன் அடங்கிய மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (பிப்.11) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

ராம்நாடு மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? <

ராம்நாடு மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 22 – 37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப். 19க்குள் <

மதுரை – பரமக்குடி நான்கு வழிச்சாலை கடந்த 2015ல் ரூ.934 கோடியில் துவங்கி 2018 முதல் அமலுக்கு வந்தது. தொடர்ந்து பரமக்குடியில் இருந்து இராமநாதபுரம் வரை 46.7 கீ.மீ தூரம் நான்கு வழிச்சாலை யாக மாற்ற திட்டம் வகுக்கப்பட்டு நில எடுப்பு பணிகள் நிறைவடைந்து, ரூ.1853 கோடி மதிப்பீட்டில் இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் தற்போது அரியனேந்தல் பகுதியில் பணிகள் துவங்கியதுள்ளன.

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, முத்துசெல்லாபுரம், நான்கு வழிச்சாலை அருகே கார் – பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் சென்ற முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். அவரிடம் இருந்த ஆதார் கார்டின் அடிப்படையில் இறந்தவர் ஆறுமுகம் கந்தன், எனவும் ஊர் உறையூர் என தெரியவந்துள்ளது.

உங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக உள்ளது பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம். இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதவர்கள் இந்த <

கடலாடி அருகே சிக்கல் மேற்கு தெருவைச் சேர்ந்த சரத்பாபு–நதியாதேவி தம்பதியின் மகன் அர்னிஷ்(2.5) திங்கள்கிழமை மாலை வீட்டருகே பெட்டிக்கடை முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது, கடை சரிந்து அவர் மீது விழுந்தது. பலத்த காயமடைந்த சிறுவனை கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து சிக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் R.S.மங்கலம் பகுதியில் வயதானவர்களை குறிவைத்து வழிப்பறி சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த வெள்ளைச்சாமி மற்றும் அய்யப்பன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் அவர்களின் செயல்கள் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கருதி குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம் R.S.மங்கலம் பகுதியில் வயதானவர்களை குறிவைத்து வழிப்பறி சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த வெள்ளைச்சாமி மற்றும் அய்யப்பன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் அவர்களின் செயல்கள் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கருதி குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
Sorry, no posts matched your criteria.