Ramanathapuram

News February 12, 2026

ராம்நாடு அரசு மருத்துவக்கல்லூரி சாதனை

image

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 55 வயது மதிக்கத்தக்கவருக்கு திசுசார் கோமா புற்றுநோயும், 47 வயது பெண்ணுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய், 65 வயது முதியவருக்கு மலக்குடல் புற்றுநோய் கண்டறியப்பட்டு புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் கணேஷ் பாபு, புற்றுநோயியல் கதிர்வீச்சு நிபுணர்கள் பிரியதர்ஷினி, முனிஸ்வரபாண்டியன், செபி கிருஷ்ணன் அடங்கிய மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

News February 11, 2026

ராம்நாடு மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (பிப்.11) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

News February 11, 2026

ராம்நாடு: ரூ.300 கேஸ் மானியம் பெற? இதை பண்ணுங்க!

image

ராம்நாடு மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? <>இங்கு க்ளிக்<<>> செய்து (Bharatgas, indane, HP) எந்த நிறுவனம் என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், ஐஎப்எஸ்சி கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் CREDITED குறுஞ்செய்தி வரும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News February 11, 2026

ராம்நாடு: ரூ.1,05,280 சம்பளத்தில் வங்கி வேலை! உடனே APPLY

image

ராம்நாடு மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 22 – 37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப். 19க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.48,480 – 1,05,280 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை அனைவருக்கும் SHARE IT.

News February 11, 2026

ரூ.1853 கோடியில் பரமக்குடி – இராமநாதபுரம் 4 வழிச்சாலை

image

மதுரை – பரமக்குடி நான்கு வழிச்சாலை கடந்த 2015ல் ரூ.934 கோடியில் துவங்கி 2018 முதல் அமலுக்கு வந்தது. தொடர்ந்து பரமக்குடியில் இருந்து இராமநாதபுரம் வரை 46.7 கீ.மீ தூரம் நான்கு வழிச்சாலை யாக மாற்ற திட்டம் வகுக்கப்பட்டு நில எடுப்பு பணிகள் நிறைவடைந்து, ரூ.1853 கோடி மதிப்பீட்டில் இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் தற்போது அரியனேந்தல் பகுதியில் பணிகள் துவங்கியதுள்ளன.

News February 11, 2026

பரமக்குடியில் விபத்து; சம்பவ இடத்திலேயே பலி!

image

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, முத்துசெல்லாபுரம், நான்கு வழிச்சாலை அருகே கார் – பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் சென்ற முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். அவரிடம் இருந்த ஆதார் கார்டின் அடிப்படையில் இறந்தவர் ஆறுமுகம் கந்தன், எனவும் ஊர் உறையூர் என தெரியவந்துள்ளது.

News February 11, 2026

இராம்நாடு: சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்

image

உங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக உள்ளது பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம். இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதவர்கள் இந்த <>லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் மாவட்டத்திற்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அலுவலரை (04567230630) அணுகலாம். *நண்பர்களுக்கும் பகிரவும்*

News February 11, 2026

இராமநாதபுரம்: 2.5 வயது குழந்தை பலியான சோகம்!

image

கடலாடி அருகே சிக்கல் மேற்கு தெருவைச் சேர்ந்த சரத்பாபு–நதியாதேவி தம்பதியின் மகன் அர்னிஷ்(2.5) திங்கள்கிழமை மாலை வீட்டருகே பெட்டிக்கடை முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது, கடை சரிந்து அவர் மீது விழுந்தது. பலத்த காயமடைந்த சிறுவனை கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து சிக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News February 11, 2026

ராம்நாடு: ஒரே நாளில் இருவர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

இராமநாதபுரம் மாவட்டம் R.S.மங்கலம் பகுதியில் வயதானவர்களை குறிவைத்து வழிப்பறி சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த வெள்ளைச்சாமி மற்றும் அய்யப்பன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் அவர்களின் செயல்கள் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கருதி குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

News February 11, 2026

ராம்நாடு: ஒரே நாளில் இருவர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

இராமநாதபுரம் மாவட்டம் R.S.மங்கலம் பகுதியில் வயதானவர்களை குறிவைத்து வழிப்பறி சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த வெள்ளைச்சாமி மற்றும் அய்யப்பன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் அவர்களின் செயல்கள் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கருதி குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!