India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதிக்க உத்தரவிடக்கோரிய வழக்கை இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரித்தது. அப்போது, “பசும்பொன் செல்வதற்கான வாகன அனுமதியில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை; எந்த வாகனத்தை அனுமதிக்க வேண்டும் எதை அனுமதிக்கக்கூடாது என்பது மாவட்ட நிர்வாகத்திற்குதான் தெரியும்; இம்மனு குறித்து ராமநாதபுரம் ஆட்சியர் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(அக்.25) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. வரும் அக்.30க்குள் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பாலத்தை ஆய்வு செய்து சான்று வழங்க உள்ளார். இதன் பின் நவ.20க்குள் புதிய பாலம் திறப்பு விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். பிரதமர் ஹெலிகாப்டரில் வந்திறங்க அரியாங்குண்டில் தனியார் பள்ளி மைதானத்தை தேர்வு செய்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச்சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இன்று (அக்.24) கைது செய்தனர். இந்நிலையில் இராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்களையும் 2 மீன்பிடி படகுகளையும் உடனடியாக மீட்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.
ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் போலீசார் இருவரை மடக்கி சோதனையிட்டனர். அவர்களிடம் 300 கிராம் ஐஸ் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் இருந்ததை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தேவிபட்டினம் சின்னப்பள்ளி வாசல் தெரு முகமது ஹாரிஸ் (29), ராமநாதபுரம் நேரு நகர் ஜெகதீஷ்(29) ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
மண்டபம் கடலோரப் காவல் படையினரால் வருகிற(அக்.28) அன்று காலை 7 மணிமுதல் நண்பகல் 1 மணிவரை இராமேஸ்வரத்தின் வடகிழக்கு & தனுஷ்கோடி பகுதியில் உள்ள கடல் பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சி நடத்தப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவரத்தை சுங்க கட்டுப்பாட்டிற்குட்பட்ட விசைப்படகு மட்டும் நாட்டு படகு உரிமையாளர்களுக்கு மண்டபம் மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தொண்டி அருகே சோழகன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல்லா. இவரது வீட்டில் திடீரென சுமார் 5 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனைக் கண்டதும் வீட்டில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். தீயணைப்பு நிலைய அலுவலர் சிவகுருநாதன் & தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று வீட்டிற்குள் பதுங்கி இருந்த பாம்பை உயிருடன் பிடித்து அப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் விட்டுச்சென்றனர்.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சுரேந்திரன் மகன் கனி(27). கார் ஓட்டுநரான இவர் நேற்று(அக்.23) 3 பேரை ராமேசுவரத்துக்கு காரில் அழைத்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, சத்திரக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் எதிரே வந்த லாரியுடன் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் ஓட்டுநர் கனி உயிரிழந்த நிலையில், மற்ற 3 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இது குறித்து சத்திரக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
இன்று(அக்.23) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர் & அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ள அட்டவணையை இராமநாதபுரம் காவல்துறை வெளியிட்டுள்ளது. சிவராமன் IPS அவர்கள் தலைமையில் இன்று ரோந்து பணி நடைபெறும். வேறு எதாவது தகவல் தேவைப்பட்டால் எண் 100 ஐ டயல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரை எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீனவர்களின் 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு, மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கைது செய்யப்பட்ட 16 மீனவர்களும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் நாளை(அக்.24) ஒப்படைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.