India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மார்கழி முதல் நாள் டிச.16 முதல் ஜன.13 வரை 29 நாட்கள் ராமேஸ்வரம் கோயிலில் மார்கழி மாதம் பூஜை நடக்கும். அதன்படி கோயில் நடை அதிகாலை 3:30 மணிக்கு திறக்கப்பட்டு 4:30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடக்கும். மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணிக்கு பள்ளியறை பூஜை நடக்கும். மார்கழி மாத உற்சவத்தில் சுவாமி புறப்பாடு நாளில் பூஜை நேரங்கள் மாறுதலுக்கு உட்பட்டவை என கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2025ல் 6 நாள் தொடர் முறை வருகிறது. ஜன.11 இரண்டாவது சனி, ஜன 12 ஞாயிறு, ஜன 13 ஆருத்ரா தரிசனம் (உள்ளூர் விடுமுறை, இதற்கு ஜன 25ல் ஈடுகட்டும் பணி ), ஜன.14 பொங்கல், ஜன 15 உழவர் திருநாள், ஜன 16 திருவள்ளுவர் தினம் என 6 நாட்கள் விடமுறையாக வருகிறது.
தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று(டிச.12) காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அரசு ஐடிஐ.,யில் ஈராண்டு அனைத்து தொழிற்பிரிவுகளுக்கும் 2024-2025ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை டிச.31 வரை நடைபெற்று வருகிறது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 14-40 வயதினர் இப்பயிற்சியில் சேர www.skilltraining.tn.gov.in இணையத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு அலைபேசி எண் 94868 88176-இல் தொடர்பு கொண்டு பயனடையலாம் என ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
கனமழை காரணமாக ராமநாதபுரத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ராமநாதபுரத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பரமக்குடி.மணி நகரைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். இவர் தனது டூவீலரில் இன்று ராமநாதபுரம் வந்தார். அச்சுந்தன்வயல் வந்தபோது மதுரையில் இருந்து வந்த அரசு பஸ் டூவீலரின் பின்புறம் மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பாண்டியராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ராமநாதபுரம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உத்திரகோசமங்கை ஸ்ரீமங்களநாதசுவாமி கோயில் ஆருத்ரா தரிசனம் திருவிழா 13.01.2025ல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஜன.13 2025 அன்று இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளித்து அதனை ஈடு செய்யும் பொருட்டு 25.01.2025 அன்று சனிக்கிழமை வேலைநாளாக அறிவித்து ராமநாதபுரம் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. காற்றின் வேகம் 55.கி.மீ வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு மீன்வளத்துறை சார்பாக தடை விதித்துள்ளது.எனவே மீனவர்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம். SHARE IT
ராமநாதபுரம் மாவட்டத்தில் சமீபத்திய பெய்த தொடர் மழையால் மக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்த்தொற்று வராமல் இருக்க மருத்துவ முகாம், கொசு ஒழிப்பு புகை மருந்து பணி கடந்த 2 வாரமாக நடைபெற்று வருகிறது . இதை தொடர்ந்து கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவுப்படி 43 இடங்களில் கொசு ஒழிப்பு பணி, மருத்துவ முகாம் நாளை (டிச.11) நடைபெற உள்ளது என மாவட்ட சுகாதார அலுவலர்கள் அர்சுன்குமார் தெரிவித்துள்ளனர்.
இந்திய வானிலை ஆய்வு மைய சென்னை மண்டல அறிவிப்பு படி இந்திய கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. ராமநாதபுரம் மாவட்ட கடலில் காற்று வேகம் 35 45 கிமீ, அதிகபட்சம் 55 கிமீ வரை வீச கூடும். மறு அறிவிப்பு வரும் வரை படகுகள் தொழிலுக்கு செல்ல வேண்டாம். நாளை(டிச.11) வட கடல் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கப்படமாட்டாது என மண்டபம் மீன் வளத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் அறிவித்துள்ளார்
Sorry, no posts matched your criteria.