Ramanathapuram

News November 30, 2024

பாம்பனை சேர்ந்த மீனவ மகன் சாதனை

image

பாம்பனை சேர்ந்த மீனவ தம்பதி அனிஸ்டஸ் – மென்லின் ப்ளோரா. இவர்களது மகன் ஏ.நிபில் கிப்சன்(20). ஐப்பானில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தில் இருந்து இந்திய அணி சார்பில் கைப்பந்து போட்டியில் விளையாடினார். தொடர்ந்து ஈரானில் நடக்கும் சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டியில் இந்திய அணியில் விளையாட உள்ளார். மாணவனை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உள்ளிட்ட அதிகாரிகள் பாராட்டினர்.

News November 30, 2024

விரைவில் புதிய பாம்பன் பாலம் திறப்பு

image

தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறியதாவது, பாம்பன் பாலம் குறித்து மக்களுக்கு எவ்வித சந்தேகமும் வேண்டாம். ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏற்கனவே அனுமதி அளித்துவிட்டார். ஒரிரு வாரத்திற்க்குள் பாம்பன் பாலம் வழியாக ரயில்கள் இயக்கப்படும். பாம்பன் பாலம் ஒரிரு வாரத்திற்குள் திறக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படும் என்றார்.

News November 30, 2024

இராமநாதபுரம் இரவு ரோந்து அதிகாரியின் விவரம் வெளியீடு

image

இன்று (29.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரண்டு பிரிவுகளாக இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ள அட்டவணையை இராமநாதபுரம் காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேரங்களில் மக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் இதில் குறிப்பிட்டுள்ள எண்கள் அல்லது 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 29, 2024

வன உயிரின காப்பாளர் பணியிட மாற்றம்

image

ராமநாதபுரம் மாவட்ட வன உயிரின காப்பகம் காப்பாளர் பகான் ஜக்தீஸ் சுதாகர் (ஐ.எப்.எஸ்.,) ஓசூருக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் திருநெல்வேலி மாவட்ட வன அலுவலர், உயிரின காப்பாளர் ஆர்.முருகன் (ஐ.எப்.எஸ்.,) ராமநாதபுரம் வன உயிரின காப்பகம் காப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பகான் ஜக்தீஸ் சுதாகர் பல்வேறு விருதுகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 29, 2024

ஹாக்கி போட்டிக்கு ரூ.3.60 லட்சத்திற்கு தேர்வான மாணவர்‌

image

ஹாக்கி இந்தியா 2024-2025 கான லீக் போட்டிகள் டிச.28 முதல் நடக்கவுள்ளது. விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ராமநாதபுரம் விளையாட்டு விடுதியில் தங்கி பிளஸ் 2 படிக்கும் மாணவர் அருண் (17), தமிழ்நாடு டிராகன்ஸ் அணியில் விளையாடுவதற்காக ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்திற்கான ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.3 கோடி முதல் பரிசு வழங்கப்பட உள்ளது.

News November 29, 2024

ராமநாதபுரம் நாட்டுப்புற கலைஞர்களுக்கு அரிய வாய்ப்பு

image

கலைப் பண்பாட்டு துறையின் கீழ் 2025 ஜனவரி பொங்கல் பண்டிகை அன்று மதுரையில் சங்கமம் நம்ம ஊரு திருவிழா நடைபெற உள்ளது. அதற்கு ராமநாதபுரத்தைச் சேர்ந்த நாட்டுப்புற கலை குழுக்கள் கலந்து கொள்ளலாம். www.artandculture.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தங்களது திறமைகளை 5 நிமிட வீடியோவாக எடுத்து சிடி அல்லது பென்டிரைவில் விண்ணப்பத்துடன் படத்தில் காணும் முகவரிக்கு அனுப்ப வைக்க வேண்டும்.

News November 29, 2024

ராமநாதபுரம் விசைப்படகு மீனவர்களுக்கு நிவாரண நிதி

image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று  தமிழ்நாடு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து 51 விசைப்படகுகள் மற்றும் 7 நாட்டுப்படகுகளுக்கான மீனவர்களுக்கு ரூ.3.20 கோடி மதிப்பீட்டில் நிவாரண நிதிக்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் பங்கேற்றார்.

News November 29, 2024

ராமநாதபுரத்தில் கனமழை

image

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முற்பகலில் புயலாக மாறக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன் நகரும் வேகம் குறைந்து உள்ளதால், புயலாக உருவாவதில் தாமதம் ஆனது.இந்நிலையில் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News November 29, 2024

விடுதியை பதிவு செய்ய உத்தரவு

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெண்கள் விடுதிகள், தற்காலிகமாக நடத்தும் விடுதிகள், காப்பகங்கள் அனைத்தும் கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டும். உரிய ஆவணங்களுடன் https://tnswp.com என்ற இணையதள முகவரியில் டிசம்பர் 15ம் தேதிக்குள் பதிவு செய்யவும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரக வளாகத்தினுள் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும் (அ) 04567230466 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News November 29, 2024

விழிப்புடன் இருக்க எஸ்பி அறிவுரை

image

சமூக வலைதளத்தில் பிரத்தியேகமாக உள்ள GRINDR போன்ற செயலிகளில் ஓரினச்சேர்க்கை (ம) பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தி இரவு நேரங்களில் தங்களை தனிமையில் சந்திப்பதாக கூறி மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதிகளுக்கு அழைத்து உங்களிடம் பணம் (ம) உடைமைகளை பறித்துச் செல்லும் குற்றங்கள் பிற மாவட்டங்களில் அதிகமாக நடைபெறுவதால் ராமநாதபுரம் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்கு எஸ்பி அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!