India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்ற நிலையில் பெஞ்சல் புயல் காரணமாக பாம்பனில் உள்ள கடல்சார் வாரிய துறைமுக அலுவலகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தற்போது புயல் புதுச்சேரி இடையை நேற்று இரவு கரையை கடந்ததால் துறைமுகத்தில் ஏற்றப்பட்ட மூன்றாம் எண் புயல் கூண்டு இன்று காலை (டிச.1) இறக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், சம்பா நட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அருளம்மாள். இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் தொண்டியில் உள்ள ஏ.வி.கே ஆஸ்பத்திரியில் பரிசோதித்த போது வயிற்றில் கட்டி இருப்பதை கண்டறிந்தனர். டாக்டர் சேகர் ஆலோசனைப்படி டாக்டர்கள் சதீஷ், மயக்க மருந்து டாக்டர் ரஜினி ஆகியோர் அறுவை சிகிச்சை செய்து 5 கிலோ நீர்க் கட்டியை வெற்றிகரமாக அகற்றினர அகற்றினர்.
நம்புதாளையில் கடந்த நவ.1-ல்ராட்டின உரிமையாளர் முத்துக்குமார் 29. ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார்.இதில் திருவாடானை கடம்பாகுடிசொக்கு என்றஉலகநாதன் உட்படபலர்கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில்ராமநாதபுரம்போலீஸ்எஸ்.பி.சந்தீஸ்பரிந்துரையின்பேரில்கலெக்டர்சிம்ரன்ஜீத்சிங்காலோன்சொக்கு என்றஉலகநாதனை குண்டர்சட்டத்தில் கைதுசெய்ய உத்தரவிட்டதின் பேரில்தொண்டி போலீசார்அவரை கைது செய்துமதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் ராமநாதபுரம் திருப்புல்லாணி அருகே 200 ஏக்கர் உப்பளங்கள் வெள்ள நீர் புகுந்து மூழ்கியது உப்பள தொழிலாளர்கள் கூறியதாவது: திருப்புல்லாணி, காஞ்சிரங்குடி, ஆனைகுடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் உப்பளங்கள் உள்ளன. தற்போது பெய்த மழையால் பெருவாரியான உப்பளங்களில் மழை வெள்ள நீர் புகுந்துள்ளது. மிதமிஞ்சிய வெள்ள நீர் கொட்டகுடி ஆற்றின் வழியாக கடலில் கலக்கிறது என்றனர்.
திருப்புல்லாணியில் ஆதிஜெகநாத பெருமாள் கோயில் பத்மாஸனித்தாயார் அலங்காரத்திற்கான தங்க நகைகள், ஆபரணங்கள் பாதுகாப்பு அறையில் இருந்தது. இதில் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் மாயமானது. திவான் புகாரில் ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் நகைகளின் பொறுப்பாளரான கோயில் ஸ்தானிகர் சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். ராமநாதபுரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஜாமீன் மனு வந்த நிலையில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு சார்பில் செல்போன் பழுது நீக்கும் இலவச பயிற்சி காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை 30 நாட்கள் இராமநாதபுரத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் ராமநாதபுரம் கிராமம், பஞ்சாயத்து சார்ந்த ஆண்கள், பெண்கள் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள டிச.7 வரை முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 8825954443, 8056771986 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
மதுரை கே.கே நகரைச் சேர்ந்த வாசுதேவன் (40), மனைவி அனிதா (33) இவர்களது மகன் கனிஷ்கர் (15) அருண்மொழி (14) ஆகியோர் சொந்த காரில் இன்று அழகன்குளம் வந்தனர். ராமநாதபுரம் கருங்குளம் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதியது. இதில் அனிதா, கனிஷ்கர் இறந்தனர். காயமடைந்தோருக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
ராமநாதபுரம் அருகே பாப்பாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அ.மணக்குடியில் விஏஓ வாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் வா.து.நடராஜனுக்கு சொந்தமான 6.5 ஏக்கர் நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் புகாரில் விசாரணை செய்த கோட்டாட்சியர் விஏஓ மணிகண்டன் போலி பத்திரம் மூலம் மோசடி செய்தது தெரிய வந்ததை அடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ராமநாதபுரத்திலிருந்து சென்னை கிளாம்பாக்கத்திற்கு ULTRA DELUXE (2×2) பேருந்து தினமும் இயக்கப்படுகிறது. இதன்படி ராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு மாலை 6 மணி, ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து இரவு 7.30 மணிக்கும், சென்னையிலிருந்து ராமநாதபுரத்திற்கு இரவு 7.15 மணிக்கும் புறப்படுகிறது என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டம் காரைக்குடி மண்டலம் ராமநாதபுரம் புறநகர் கிளை தெரிவித்துள்ளது,
தாம்பரம் – ராமநாதபுரம் தாம்பரம் இடையே நவம்பர் வாரம் 3 முறை இயங்கிய சிறப்பு ரயில் டிசம்பர் மாதம் வரை வாரம் 2 முறை மட்டுமே இயங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதன் இதன்படி – ராமநாதபுரம் வ.எண்: 06103 டிச.05 முதல் 28 வரை வியாழன் & சனி, ராமநாதபுரம் – தாம்பரம் வ.எண்: 06104 டிச.06 முதல் 29 வரை வெள்ளி & ஞாயிறு என வாரம் இரு முறை மட்டும் இயங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.