Ramanathapuram

News December 15, 2024

ராம்நாட்டில் பலத்த மழை; 3 வீடுகள் சேதம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சீரமம் அடைந்தனர். இந்நிலையில், கருமொழி கிராமத்தை சேர்ந்த லட்சுமி, மச்சூரை சேர்ந்த அக்பர் அலி, பண்ணவயலை சேர்ந்த நாகரத்தினம் ஆகியோரின் வீடுகள் சேதமடைந்தது.

News December 14, 2024

ராமநாதபுரம்: 999 வழக்குகளுக்கு ரூ.7.80 கோடி தீர்வு தொகை

image

ராமநாதபுரத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மெஹ்பூப் அலிகான் தலைமை வகித்தார். நீதிபதிகள் கவிதா, மோகன்ராம், அகிலா தேவி, பிரசாத், நிலவேஸ்வரன், பிரபாகரன், வெர்ஜின் வெஸ்டா வழக்கறிஞர் சங்க தலைவர் ஷேக் இப்ராஹிம் பங்கேற்றனர் . 3,468 வழக்குகள் பரிசீலினைக்கு எடுக்கப்பட்டு தீர்வு கண்ட 999 வழக்குகளுக்கு ரூ.7,80,30,350 நிவாரண தொகை வழங்கப்பட்டது.

News December 14, 2024

இராமநாதபுரத்தில் ஆட்சி மொழி வார விழா அறிவிப்பு

image

தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் இயற்றப்பட்ட 1956 டிச.27ஐ நினைவு கூறும் ஆட்சி மொழி சட்ட வார விழா இந்தாண்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் டிச.18 – 27 வரை ஒரு வார காலம் நடக்கிறது. இந்த நாட்களில் அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்களில் ஒட்டு வில்லைகள் ஒட்டியும் துண்டறிக்கைகள், அனைத்து நிறுவனங்களிலும் தமிழில் பெயர்ப்பலகை தொடர்பான அரசாணை வழங்கியும் கொண்டாடப்பட இருப்பதாக கலெக்டர் அறிவித்துள்ளார்.

News December 14, 2024

ராமநாதபுரத்தில் நாளை செஸ் போட்டி 

image

ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேஷன் சார்பில் 25வது மாவட்ட அளவிலான செஸ் விளையாட்டு போட்டி தேவி பட்டினம் ரோடு செய்யது அம்மாள் கலை, அறிவியல் கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் நாளை (டிச.15) காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது. திரைப்பட நடிகர் அருண்மொழி தேவன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளார். இத்தகவலை ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேஷன் செயலர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

News December 14, 2024

மக்களிடம் மழை வெள்ள பாதிப்புகளை கேட்டறிந்த கலெக்டர்

image

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகாவில் உள்ள எஸ். தாரைக்குடி ஊராட்சியில் இன்று (டிச.14) மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பொதுமக்களிடம் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். அவருடன் அரசு அதிகாரிகள் பலர் உடன் சென்றனர்.

News December 14, 2024

சேரன் கோட்டை பகுதியில் கடலில் மூழ்கிய படகு 

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வானிலை மிக மோசமாக உள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவில்லை. மீன் பிடி அனுமதி சீட்டு மறுக்கப்பட்ட நிலையில், அனுமதி சீட்டு இல்லாமல் கடலுக்கு சென்ற மணிவண்ணன் என்பவரது விசைப்படகின் அடிப்பகுதி பலகை பெயர்ந்து கடலில் மூழ்கியது. உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதால் சக மீனவர்கள் அவர்களை மீட்டனர்.

News December 14, 2024

கடலாடி அருகே இடிந்து விழுந்த ஓட்டு வீடு

image

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கருங்குளம் ஊராட்சி கே. கரிசல்குளம் கிராமத்தில் குடியிருந்து வரும் விவசாயி வேல்முருகன் என்பவரின் ஓட்டு வீட்டின் ஒரு பக்கவாட்டு சுவர் இன்று இரவு (டிச.13) இடிந்து விழுந்தது. இதில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சம்பவ இடத்தில் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும்.

News December 13, 2024

சுவர் இடிந்து விழுந்து பலியான சிறுமியின் குடும்பத்திற்கு நிதியுதவி

image

பரமக்குடி அருகே மேலாய்குடியில் நேற்று நள்ளிரவு பெய்த கனமழையில் இன்று அதிகாலை பால்ராஜ் என்பவரின் ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பால்ராஜின் ஆறு வயது மகள் கீர்த்திகா சம்பவ இடத்திலேயே பலியானார். இதனைதொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜுத் சிங் காலோன் இயற்கை பேரிடர் மேலாண்மை மீட்பு நிதியில் இருந்து 4 லட்சம் ரூபாய்க்கான காசோலையை பெற்றோரிடம் வழங்கி ஆறுதல் கூறினார்.

News December 13, 2024

தொடர் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி பலி

image

பரமக்குடி சுற்று வட்டார பகுதிகளில் பெய்த தொடர் கனமழையில் மேலாய்க்குடி யாதவர் தெருவில் இன்று(டிச.13) காலை பால்ராஜ் என்பவரின் ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பால்ராஜின் மகள் கீர்த்திகா சம்பவ இடத்திலேயே பலியானார். சிறுமியின் உடல் மீட்கப்பட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சிறுமி மேலாய்குடி அரசு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார்.

News December 13, 2024

ராமநாதபுரத்தில் மிகக் கனமழை பெய்த இடம்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று(டிச.12) பெரும்பான்மையான இடங்களில் கனமழை பெய்தது. வாலிநோக்கம், பரமக்குடி, ஏர்வாடி,கீழக்கரை ஆகிய பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. அதில் இராமநாதபுரத்தில் அதிகபட்சமாக கமுதியில் 170 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் மாவட்டத்தில் பெரும்பான்மையான இடங்களில் கன மழை பதிவாகியுள்ளது.

error: Content is protected !!