India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று காலை தொழிலுக்கு சென்ற 2 விசைப்படகுகள், அதிலிருந்த 17 மீனவர்களை தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் நேற்று(டிச.23) அதிகாலை கைது செய்தனர். தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட 17 பேரும் முதற்கட்ட விசாரணைக்குப் பின் படகுகளுடன் மன்னார் மீன் வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
மதுரையில் இருந்து இன்று ராமநாதபுரம் நோக்கி வாழைப்பழம் ஏற்றி சரக்கு வேன் ஒன்று புறப்பட்டது. அப்போது ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பொட்டிதட்டி அருகே ராமேஸ்வரத்திலிருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் பயணித்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு பரமக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பழைய நுழைவு வாயில் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது .மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் பொது மக்கள், அருகில் உள்ள பிரதான நுழைவு வாயிலை உள்ளே வருவதற்கும், வெளியே செல்வதற்கும் பயன்படுத்திக் கொள்ள இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று (22.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ள அட்டவணையை இராமநாதபுரம் காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேரங்களில் மக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் இதில் குறிப்பிட்டுள்ள எண்கள் அல்லது 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்கழி அஷ்டமி பூப்பிரதட்சணத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை நாளை (டிச.23) சாத்தப்படுகிறது. அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறந்து, 3:30 மணி – 4 மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும். காலை 7 மணிக்கு சுவாமி – அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா செய்வதால் காலை 7 மணி – மதியம் 12 மணி வரை கோயில் நடை சாத்தப்படுகிறது. 12 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டு உச்சிகால பூஜை நடைபெறும்.
ராமநாதபுரம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் சரவணபாபு(41). இவரின் தந்தை ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் சண்முகம் 2020இல் இறந்து விட்டார். சரவணபாபு தந்தை இறந்த தகவலை கருவூலத்திற்கு தெரிவிக்காமல் அவரின் ஓய்வூதியத்தை 2 ஆண்டு காலமாக ரூ. 9 லட்சத்தை ஏடிஎம் கார்டு மூலம் எடுத்து மோசடி செய்துள்ளார். கருவூல அதிகாரி சேஷன் புகாரின்படி ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிந்து சரவணபாபுவை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை சென்னை, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் இடையே மையம் கொண்டுள்ளது. இதனால் கடலோர மாவட்டத்தில் சூறாவளியுடன் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த தொலை துார காற்றழுத்த தாழ்வுநிலை எச்சரிக்கையால் நேற்று முன்தினம் இரவு பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
தொண்டி புதுக்குடி கிராமத்தில் ஒரு வீட்டில் ஜெலட்டின் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தொண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் இன்று(டிச.21) தொண்டி போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டிற்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
கமுதி அருகே கோரப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி ராமர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை முறையில் 15 ஏக்கர் பரப்பளவில் வாழை வெண்டை கத்தரி தக்காளி நெல் உள்ளிட்ட பயிர் வகைகளை கால்நடைகளின் சாணங்களை வயலில் உரம் இட்டு இயற்கையான முறையில் விவசாயப் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இயற்கை விவசாயி சாகுபடி முறைகளில் குறித்து ஜப்பான் நாட்டிலிருந்து 4 பேர் கொண்ட குழு நேரில் வந்து பார்வை மேற்கொண்டனர்.
இராமநாதபுரத்தில் ஜேம்ஸ்&கோ வின் 27ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு 5 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் ஓவிய போட்டி “இராமநாதபுரத்தின் சிறப்பு” என்ற தலைப்பில் ஓவியம் வரைந்து ஜேம்ஸ் & கோ இராமநாதபுரம் கிளையில் டிச.27 க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதில், வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
Sorry, no posts matched your criteria.