Ramanathapuram

News January 11, 2025

இரவு ரோந்து அதிகாரியின் விவரம் வெளியீடு

image

இன்று (10.01.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ள அட்டவணையை இராமநாதபுரம் காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேரங்களில் மக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் இதில் குறிப்பிட்டுள்ள எண்கள் அல்லது 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 10, 2025

காரில் கடத்தி 240 மது பாட்டில் பறிமுதல்

image

ஏர்வாரி பகுதியில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோத விற்பனைக்காக சென்னை பதிவெண் காரில் கடத்தி வந்த 240 பிராந்தி பாட்டில்களை ஏர்வாடி தர்ஹா காவல் நிலைய தனி பிரிவு காவலர் சேகர் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். இது தொடர்பாக உத்திரகோசமங்கை அருகே ஆலங்குளத்தைச் சேர்ந்த குமார்(33), ராஜா(35), கணபதி(37) ஆகிய 3 பேரை ஏர்வாடி தர்ஹா போலீசார் கைது செய்தனர்.

News January 10, 2025

பள்ளி ஆசிரியர் அதிரடி பணியிடமாற்றம்

image

முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் சரவணன் மாணவிகளிடம் ஆபாசமாக பேசுதல், பாலியல் ரீதியில் பேசி வருவதாக மாணவிகளின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் நேற்று முன்தினம் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சின்னராசு மாணவிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டதன் பின் பணி இடமாறுதலுக்கு உத்தவிட்டார். மேலும் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது

News January 10, 2025

நல்ல பாம்பினை கூண்டில் வைத்து வளர்த்த நபர் கைது

image

திருப்புல்லாணி, பள்ளப்பச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன்(48). இவா் பள்ளப்பச்சேரி அரசு உடல் பயிற்சிக் கூடத்தில் விஷத்தன்மை கொண்ட நாகப்பாம்பை கூண்டுக்குள் அடைத்து வளா்த்து வருவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, வனத்துறையினா் மேற்கண்ட சோதனையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, பாம்பை பறிமுதல் செய்த ராமநாதபுரம் வனத்துறை ராஜேந்திரனை கைது செய்தனர்.

News January 10, 2025

ராமநாதபுர மாவட்ட இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News January 9, 2025

ராமநாதபுரம் காவல்துறை ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(ஜன.09) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News January 9, 2025

ராமநாதபுரம் எஸ்.பி வெளியிட்ட குற்றவழக்குகளின் தொகுப்பு

image

ராமநாதபுரம் எஸ்.பி ஜி.சந்தீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: 2024ம் ஆண்டில் 28 நபா்கள் மீது குண்டா் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது 2023ம் ஆண்டை விட 75% அதிகம். போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக 152 வழக்குகள் பதிவு. இது 2023ஆம் ஆண்டை விட 141% அதிகம். மணல் திருட்டு தொடா்பாக 154 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2024ல் ஜாதிய மோதல்கள் நடைபெறவில்லை. *ஷேர்*

News January 8, 2025

ராமநாதபுரம் எம்பி அமைச்சரிடம் கோரிக்கை

image

இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் நான்கு வழிச்சாலை புதிய பாலத்தை குடியிருப்புகளை பாதிக்காத வகையில் மாற்றியமைக்க கோரி மாண்புமிகு பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ வ வேலு இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான காதர் பாட்சா முத்துராமலிங்கம் அவர்களுடன் சந்தித்து கே நவாஸ்கனி இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர், கோரிக்கை வைத்தார்.

News January 8, 2025

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் மூன்று பவுன் தங்க செயின் பறிப்பு

image

பரமக்குடி பாரதி நகர் சேர்ந்த சரவணன் மனைவி லதா இன்று பரமக்குடி 5 முனை சாலையிலிருந்து 26ம் நம்பர் நகரப் பேருந்தில் ஏறி அவரது சொந்த ஊரான கச்சாத்த நல்லூர் செல்லும் போது மர்ம நபர்கள் லதாவின் கழுத்தில் இருந்த மூன்று பவுன் செயினை பறித்து பேருந்தில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து லதா பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 8, 2025

எஸ் பி அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு முகாம்

image

இராமநாதபுரம் மாவட்டம், பட்டிணம்காத்தானில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று(ஜன.8) குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. அதில் காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்,IPS., பொதுமக்களிடம் வந்த ஏராளமான புகார் மனுக்களை பெற்று உடனுக்குடன் தீர்வு காண அந்தந்த துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.

error: Content is protected !!