Ramanathapuram

News January 17, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News January 17, 2025

ராமநாதபுரத்தில் நாளை மாலை முதல் மழை

image

இந்திய பெருங்கடல் பகுதியில் வளிமண்டல மேலெடுக்க சுழற்சி நிலவி வருவதன் காரணமாக ஜன.18 நாளை  மாலை முதல் அடுத்த 2 நாட்களுக்கு ராமநாதபுரத்தில் நாளை மாலை முதல் கடலோர ஒட்டிய பகுதியிலான ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தேவிபட்டினம், தொண்டி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் உள்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை அமைப்பு அறிவித்துள்ளது. *ஷேர்

News January 17, 2025

மண்டபம் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்

image

தைப்பொங்கல் 2025 விழாவின் போது வெளியூர் மற்றும் சுற்றுலாவிற்கு செல்லும் பயணிகள் அதிகரித்த வேளையில், அதன் தேவையை பூர்த்தி செய்ய, ஒரு வழி சிறப்பு ரயில் மண்டபத்திலிருந்து சென்னை எழும்பூர் வரை இயக்கப்பட இருக்கிறது. வரும் ஜன19 ஞாயிறு இரவு 10.00 மணிக்கு மண்டபத்தில் புறப்பட்டு, 10.30 மணிக்கு ராமநாதபுரத்திலும் 11 மணிக்கு பரமக்குடியிலும் நின்று செல்லும். *ஷேர்

News January 17, 2025

இராமநாதபுரத்தில் நண்பகல் ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஜன.17) நண்பகல் 2 மணிமுதல் மாலை 4 மணிவரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட ரோந்து காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் அவசர உதவிக்கு 100 அழைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 17, 2025

சென்னை சிறப்பு ரயில்: முன்பதிவு இன்று துவக்கம்

image

பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை செல்ல ஜன.19 இரவு 10 மணிக்கு மண்டபம் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (வ: எண் 06048) கிளம்புகிறது. ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, கல்லல், காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழி செல்லும் இந்த ரயிலின் முன்பதிவு இன்று (ஜன 17) 8 மணிக்கு IRCTC தளத்தில் தொடங்க உள்ளது.

News January 16, 2025

இராமநாதபுரம் இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஜன.16) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசர உதவிக்கு 100 அழைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்ட இரவு ரோந்து அதிகாரியாக டிஎஸ்பி முருகாதாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர்*

News January 16, 2025

ராமநாதபுரத்தில் 18,19ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

image

ராமநாதபுரத்தில் வரும் ஜனவரி 18ம் தேதி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜனவரி 19ம் தேதி, தஞ்சாவூர்,திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

News January 16, 2025

மீனவர்கள் 6 பேர் விடுதலை; இருவருக்கு 6 மாதம் சிறை

image

மண்டபத்திலிருந்து டிச.8ல் மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் இரு படகையும், அதில் இருந்த 8 மீனவர்களையும் இலங்கை கடற்படை வீரர்கள் கைது சிறையில் அடைத்தனர். நேற்று மீனவர்களை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி இரு படகின் டிரைவர்கள் யாசின், பத்திரப்பன் ஆகியோருக்கு தலா 6 மாதம் சிறை தண்டனையும், தலா ரூ.11.60 லட்சம் அபராதமும் விதித்தனர்.மற்ற 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

News January 16, 2025

இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விபரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஜன.15) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவசர தேவைக்கு 100 அழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்ட இரவு ரோந்து அதிகாரியாக டிஎஸ்பி சுதிர்லால் நியமிக்கப்பட்டுள்ளார்.‌ இதனை காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 15, 2025

மது போதையில் இளைஞர் கொலை

image

ராமேசுவரம் அருகே சேரான் கோட்டை & தெற்கு கரைய பகுதியில் உள்ள இரு பிரிவினரை சேர்ந்த சிலருக்கு முன்விரோதம் இருந்த நிலையில், நேற்று நள்ளிரவு மதுபோதையில் மீண்டும் இருதரப்பினர் மோதிக்கொண்டனர். அப்போது ஒரு பிரிவை சேர்ந்த கும்பல் நண்டு வலைக்கு பயன்படும் கத்தியை எடுத்து சரமாரியாக தாக்கியதில் நம்பு குமார் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார். கொலைக்கு காரணமான 7 பேரை பிடிக்க தனிப்படை தீவிரம்.

error: Content is protected !!