India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (ஜன.26) ராமநாதபுரம் மாவட்டத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி, கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. ஆகவே, உங்கள் பகுதியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்கள், அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் நடைபெறும் குடியரசு தின விழா மற்றும் கொடியேற்ற நிகழ்வுகளை செய்திகளை வே2நியூஸில் பதிவிடுங்கள். உங்கள் ஊர் செய்திகள் வே2நியூஸ் மூலம் அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள்.
ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் தொழில்முறை வல்லுநர் 1 ஆண்டு பணியிடம் (மாதம் ரூ.50,000 தொகுப்பூதியம்) தேர்வு செய்யப்பட உள்ளது. https://ramanathapuram.nic.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்யும் சுய விவர படிவத்தை நிரப்பி மாவட்ட ஆட்சியர், மாவட்டப் புள்ளியல் அலுவலகம், ராமநாதபுரம் என்ற முகவரிக்கு ஜன.28 மாலை 5 மணிக்குள் அனுப்பலாம் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்தார். *ஷேர்
பாம்பன் ரயில்வே தூக்கு பாலத்தில் இன்று(ஜன.25) இந்தியா நாட்டின் 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் பாம்பன் பழைய ரயில் பாலம், புதிய ரயில் பாலம் ஆகிய இடங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பரமக்குடி அரசு ஐடிஐ.,யில் மண்டல அளவிலான தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை ஜன.28இல் நடைபெறவுள்ளது. இதில் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் அரசு, தனியார் துறை முன்னணி தொழில் நிறுவனங்கள் தொழிற்பழகுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். தேர்வாகும் ஐடிஐ பயிற்சியாளர்களுக்கு தேசிய தொழிற்பழகுநர் சான்று, மாதம் ரூ.7,700 – 8,050 வரை உதவித்தொகை வழங்கப்படும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் கொலோன் தெரிவித்துள்ளார்.
தொண்டி பகுதியை சேர்ந்தவர் சபீனா 27. இவரது நகை, பணம் திருட்டு போனது குறித்து புகார் அளித்திருந்தார். இந்நிலையில் நேற்று மதியம் தொண்டி போலீஸ் ஸ்டேஷன் சென்ற சபீனா.’3 நாட்களாகியும் இன்னமும் கண்டுபிடிக்க வில்லை. நான் பிரபல யுடியூப் சேனல் வைத்துள்ளேன். சில நாட்களுக்கு முன் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டரை கதற விட்டேன். என் பின்னால் அனைத்து ஊடகங்களும் உள்ளன. இதையடுத்து சபீனாவை, எஸ்.ஐ., விஷ்ணு கைது செய்தார்.
இன்று(ஜன.24) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
இந்த வருடம் ஜனவரி மாதத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இயல்பைவிட அதிக அளவு மழை பெய்துள்ளது. அதுவும் 172 % இராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதலாக மழை பெய்துள்ளது.ஜனவரி மாதத்தில் மாவட்டத்தில் பெய்யும் இயல்பான மழை அளவு 24.4 மில்லி மீட்டர் ஆகும். மாவட்டத்தில் பதிவான சராசரியான மழை அளவு 66.3 மில்லி மீட்டர் ஆகும்.
நாம் தமிழர் கட்சியின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் நாகூர் கனி நேற்று(ஜன.23) நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் இன்று (ஜன.24) சென்னையில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.
முதுகுளத்தூர் செல்லியம்மன் கோயில் அருகே இயங்கி வரும் அரசு நடுநிலைப்பள்ளி சிறந்த பள்ளி என மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜுத் சிங் காலோன் பாராட்டு சான்றிதழ் தலைமை ஆசிரியரிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் பிரதாப் சிங், தாசில்தார் சடையாண்டி, ஆணையாளர் லட்சுமி ஜானகி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். *ஷேர்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூரைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம், 21 வயது வாலிபர் தவறாக நடந்ததாக மண்டபம் போலீசிற்கு குழந்தைகள் நல அலுவலர் தகவல் தெரிவித்தார். இதன் அடிப்படையில் மண்டபம் பொங்காளி தெருவைச் சேர்ந்த சாகுல் ஹமீது மகன் அபுர் நசீர் (21) என்பவரிடம் குழந்தைகள் நல அலுவலர் ராமேஸ்வரம் மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.