India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் வடக்குத் தெரு பாலமுருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா கடந்த 6-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூச விழாவையொட்டி சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.
பனைக்குளம் – அழகன்குளம் சந்திப்பில் நாடார் வலசை மதுக்கடை ராமநாதபுரம் கலெக்டர் சிமரன் ஜீத் சிங் காலோன் உத்தரவின் பேரில் ஜன.31ல் மூடப்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் மதுவிற்பனை மீண்டும் துவங்கியது. இதைகண்டித்து நாடார்வலசை மக்கள், SDPI,WIM அமைப்பினர் ராமநாதபுரம் தாலுகா அலுவலகம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நாடார் வலசையில் இன்று காலை 2வது நாளாக போராடியவர்களை போலீசார் தடுத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகளில் அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்கள் மேற்படிப்புக்கு கல்வித்தொகை பெற விண்ணப்பிங்கள் வரவேற்க்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் https://umis.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சிம்ரஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
பரமக்குடியில் பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அதிமுக பிரமுகர் சிகாமணி, அன்னலட்சுமி, கயல்விழி, ராஜமுகமது, பிரபாகரன் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிந்தனர். வழக்கை 5 மாதத்திற்குள் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் நேற்று சாட்சி விசாரணை நடைபெற்ற நிலையில் வழக்கு பிப்.12 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
ராமநாதபுரம் காசி விஸ்வநாதர் கோயில், காமன்கோட்டை காலபைரவர் கோவிலில், அஷ்டமியையொட்டி, அதிகாலை முதல் சுவாமிக்கு, 108 வகை நறுமண பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான பழங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, சுவாமிக்கு, 1,008 ஆகம பூஜை, வேத பாராயணம் மற்றும் சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது. சிறப்பு அலங்கார சேவை, மஹா தீபாராதனையை தொடர்ந்து, ராஜ அலங்காரத்தில் காலபைரவர் அருள்பாலித்தார்.
மண்டபம் அருகே உள்ள மைக்குண்டு பகுதியைச் சேர்ந்த பாலசந்தர் கடந்த 18.8.22 அன்று 16 வயது பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இது குறித்து மண்டபம் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர். இந்த வழக்கு இராமநாதபுரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி கவிதா பாலச்சந்தருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.15,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
நாடாளுமன்ற மக்களவையில் விதி 377ன் கீழ் இராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி பேசுகையில்: இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி முழுவதும் அனைத்து கிராமங்கள், நகரங்கள், தெருக்களிலும் ரீசார்ஜ் போர்வெல் உருவாக்கி அதன் மூலம் நிலத்தடி நீரை மேம்படுத்தி குடிப்பதற்கு சுத்தமான குடிதண்ணீர் கிடைக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்த சிறப்பு திட்டத்தினை ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டுமென உரை நிகழ்த்தினார்.
தமிழக அளவில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சக்கரக்கோட்டை,தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயங்கள் ராம்சார் தளங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.இதன் , மூலம் தமிழ்நாடு 20 ராம்சார் தளங்களுடன் இந்தியாவில் முதல்மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.இதனை , செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் சார்பில் வெளியிடபட்டுள்ளது.
இன்று (பிப். 04) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்த 10 நாட்களுக்கு வறண்ட வானிலையுடன் வெப்பம் உயர்ந்து காணப்படும். இரவு, அதிகாலை நேரங்களில் பனிமூட்டத்துடன் காணப்படும். நாளை மட்டும் சற்று வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்.
மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் இயல்பான வெப்பநிலையும் பரமக்குடி கமுதி பார்த்திபனூர் முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என காலநிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.