Ramanathapuram

News February 8, 2025

ராமநாதபுரம் காவல்துறை ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(பிப். 08) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News February 8, 2025

பாம்பன் பாலம் திறப்பின் இறுதி கட்ட ஆய்வு – ஒத்திகை

image

சுமார் ரூ.540 கோடி செலவில் கட்டப்பட்ட பாம்பன் புதிய ரயில் பாலம் விரைவில் திறக்கப்பட இருப்பதால் அதன் இறுதி கட்ட ஆய்வு மற்றும் ஒத்திகை நிகழ்வு இன்று (பிப்-8) நடைபெற்றது. தென்னக ரயில்வே மண்டல மேலாளர் சரத்ஸ்ரீ வஸ்தவா ஆய்வு செய்து கொடியசைத்தார். ஒரே நேரத்தில் 2 பாலங்கள் திறந்து கப்பல் மற்றும் இரயில் கடந்த நிகழ்வை சுற்றுலா பயணிகள் கண்டுரசித்தனர்.

News February 8, 2025

உலக சாதனையில் ராமநாதபுரம் சாரண இயக்க மாணவர்கள்

image

திருச்சி மணப்பாறை சிப்காட் வளாகத்தில் ஜன-28 முதல் பிப்-2 வரை பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா நடந்தது. மலேசியா, சவுதி அரபியா, நேபாளம் ஆகிய வெளிநாடுகள், வெளி மாநில சாரணியர் இயக்கம் மாணவர்கள் பங்கேற்றனர். ஒரே இடத்தில் 20,000 சாரணர்கள் ஒன்று கூடி உலக சாதனை படைத்துள்ளனர். இதில் ராமநாதபுரம் மாவட்ட சாரண, சாரணியர் இயக்கம் சார்பில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 24 பேர் பங்கேற்றனர்.

News February 8, 2025

பட்டா மாறுதலுக்கு 37 ஆயிரம் லஞ்சம் வி.ஏ.ஓ கைது

image

ஆர்.எஸ்.மங்களம் , குமிழேந்தல் விவசாயி தனது பெயரில் உள்ள சொத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வது சம்மந்தமாக பகவதி மங்களம் குரூப் VAO  பார்த்திபன் சந்தித்து விவரம் கேட்டுள்ளார். அதற்கு VAO பட்டா பெயர் மாற்றம் செய்யரூ.37000 தனக்கு தனியாக வேண்டும் என கேட்டுள்ளார் லஞ்சம் கொடுக்க விரும்பாத மனுதாரர் லஞ்ச ஒழிப்பில் புகார் செய்தார். VAO பார்த்திபனை  கைது செய்து மற்றொருவரை தேடி வருகின்றனர்.

News February 7, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (பிப். 07) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News February 7, 2025

ராமேஸ்வரம் மீனவர் 13 பேர் விடுதலை

image

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து டிச. 24 அன்று தொழிலுக்குச் சென்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 2 விசைப்படகுகளில் 17 மீனவர் சிறை பிடிக்கப்பட்டனர். இந்த வழக்கு மன்னார் நீதிமன்ற நீதிபதி ரபீக் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி 17 மீனவரில் 2ஆவது முறையாக கைதான இருவருக்கு தலா 2 ஆண்டு சிறை, எஞ்சிய 13 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் (இலங்கை பணம்) அபராதம் விதித்தார்.

News February 7, 2025

அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் போர்ட் 

image

தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்பப் பள்ளி, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகள் அனைத்திற்கும் அரசு சார்பில் ( திறன் பலகை) ஸ்மார்ட் போர்ட் வழங்கப்பட்டுள்ளது. திருவாடானை தாலுகாவில் நம்புதாளை துவக்கப்பள்ளிக்கு நான்கு ஸ்மார்ட் போர்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மணற்கேணி செயலியை பதிவிறக்கம் செய்து இன்றைய சூழலுக்கு ஏற்ப மாணவர்களுக்கு பாடம் எடுக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News February 7, 2025

ராம்நாடு மாவட்டத்தில் நாளை சிறப்பு முகாம்

image

ராம்நாடு மாவட்டத்தில் நாளை(பிப்.8) 9 தாலுகாவிலும் ரேசன் பொருட்கள் வினியோகம் குறித்த குறைத்தீர் முகாம் நடைபெறுகிறது. அதன்படி, ராம்நாடு-பேராவூர், ராமேஸ்வரம்-சந்தை, திருவாடானை-காரங்காடு, பரமக்குடி-மென்னந்தி, முதுகுளத்தூர்-கீழக்கொடுமலூர், கடலாடி-கீழமுந்தல், கமுதி-கீழராமநதி, கீழக்கரை-திருவள்ளுவர் நகர், ஆர்.எஸ் மங்கலம்-அரியான் கோட்டை கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்துகொள்ளலாம்.

News February 6, 2025

ராமநாதபுரம் அருகே விபத்து; 10 பேர் படுகாயம்

image

உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ராமேஸ்வரத்தில் இருந்து சென்ற அரசு பஸ், பரமக்குடியில் இருந்து ராமேஸ்வரம் வந்த சுற்றுலா வேன் இன்று மாலை நேருக்கு நேர் மோதின. இதில் வேனில் வந்த 10 பேர் படுகாயமடைந்தனர். இவர்களை உச்சிப்புளி போலீசார் துரிதமாக மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

News February 6, 2025

ராமநாதபுரம் காவல்துறை ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(பிப். 06) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.

error: Content is protected !!