Ramanathapuram

News February 12, 2025

133 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்

image

ராமேஸ்வரம் தெற்கு கரையூரில் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் இன்று (பிப்.12) நடந்தது. இதில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 133 பயனாளிகளுக்கு ரூ. 42.14 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வழங்கினார். ராமேஸ்வரம் நகர் மன்றத்தலைவர் நாசர்கான் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.

News February 12, 2025

ஹூப்ளி – ராமேஸ்வரம் வாராந்திர ரயில் சேவை ரத்து

image

ஹூப்ளி – ராமேஸ்வரம் (வ.எண் 07355) ராமேஸ்வரம் – ஹூப்ளி (வ.எண் 07356) வாராந்திர சிறப்பு விரைவு ரயில் போக்குவரத்து சேவை வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் ஏப்ரல் 26ஆம் தேதி வரை முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இவ்விரு ரயில்கள் மண்டபம் – ஹூப்ளி – மண்டபம் வரை தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

News February 12, 2025

இனி சாலைகளில் கால்நடைகள் திரிந்தால்.. அதிரடி

image

திருவாடானை யூனியனில் உள்ள 47 கிராம ஊராட்சியில் பொது மக்களுக்கு இடையூறாகவும் விபத்துக்களை ஏற்படுத்தும் விதமாகவும் சாலை மற்றும் தெருக்களில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆரோக்கியமேரி சாராள் சாலையில் திரியும் கால்நடைகளுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளார்.

News February 12, 2025

ராமநாதபுரம் காவல்துறை ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(பிப்.12) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News February 12, 2025

ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் 250 கிலோ கஞ்சா பறிமுதல்

image

ராமநாதபுரம் – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த காரில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினர் இன்று அதிகாலை சோதனையிட்டனர். அதில் தலா 125 கிலோ வீதம் 2 பண்டல்களில் 250 கிலோ கஞ்சா இருந்தது. இதனை கைப்பற்றிய போலீசார் கஞ்சா கொண்டு வந்த கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 12, 2025

ராமநாதசுவாமி கோயிலில் வேலைவாய்ப்பு

image

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தமிழ்புலவர், பிளம்பர், காவலர், கருணை இல்ல காப்பாளர், துப்புரவு பணியாளர், தூர்வை, கால்நடை பராமரிப்பாளர் பணிகளுக்கு 76 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 12.03.2025.(சம்பளம் – ரூ.10,000 – ரூ.58,600) விவரங்களுக்கு rameswaramramanathar.hrce.tn.gov.in . *ஷேர் செய்யுங்கள்.

News February 12, 2025

ராமேஸ்வரத்தில் நாளை மக்கள் தொடர்பு திட்ட முகாம்: கலெக்டர் பங்கேற்பு

image

வருவாய், பேரிடர் மேலாண் துறை சார்பில் ராமேஸ்வரம் வட்டம், தெற்கு கரையூர் கிராமத்தில் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமையில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நாளை (12.02.2025) காலை 10:30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட முன் மனுக்கள் மீதான பரிந்துரைப்படி அரசு நலத்திட்ட உதவி வழங்கப்பட உள்ளது.

News February 12, 2025

ராமநாதசுவாமி கோயில் நடைஅடைப்பு

image

ராமநாதசுவாமி கோயிலில் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு(பிப்.12) இன்று காலை 10 மணியளவில் கோயிலில் இருந்து ராமநாதசுவாமி, பரிவதவர்த்தினி அம்பாள் புறப்பாடானதும் கோயில் நடை சாத்தப்படும். அதன்பின்னர் கோயில் தீர்த்தங்களில் புனித நீராட பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்தார். *ஷேர்

News February 11, 2025

ராமநாதபுரம் காவல்துறை ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(பிப்.11) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளது.

News February 11, 2025

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

image

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்துக்கு தனது இரு குழந்தைகளுடன் வந்த சோனியா என்பவர் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குடுவையை எடுத்து, குழந்தைகள் மீதும், தன் மீதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை கண்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். விசாரணையில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக போலீசாரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இதனை செய்ததாக கூறினார்.

error: Content is protected !!