India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இராமநாதபுரம் ஆட்சியர் விஷ்னு சந்திரன் பெயரில் போலி பேஸ்புக் ஐடி உருவாக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் விஷ்னு சந்திரன் தெரிவித்துள்ளர். அவர் தெரிவித்தாவது, போலி பேஸ்புக் ஐடி தொடங்கியவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடபட்டுள்ளது. அதன் செயல்பாட்டையும் தடை செய்யவும் பரிந்துரைக்கபட்டுள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் பேஸ்புக் ஐடியை பின்தொடர வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
ராமேஸ்வரம் மீனவர்கள் பிடித்து வரும் இறால் மீன்களுக்கு உரிய விலை வழங்க வேண்டும், அரசே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும், தனியார் நிறுவனங்களின் சிண்டிகேட் முறையை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் (ஜூலை.8) கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 யூனியனில் 76 இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் கூட்ட நெரிசலை குறைத்திடும் வகையில் இருக்கைகள் அமைத்திடவும். பொதுமக்கள் சிரமமின்றி வந்து செல்ல ஏதுவாக வசதிகள் செய்திடவும், இன்டர் நெட் வசதி தொய்வின்றி கிடைத்திடவும் அப்பகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மக்களுடன் முதல்வர் திட்டத்தை, ஊரகப்பகுதிகளில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயப் பணி, மண்பாண்ட தொழிலுக்கு வண்டல், களிமண் எடுக்க 1,128 கண்மாய், ஊரணிகளின் பட்டியல்கள் மாவட்ட அரசிதழில் வெளியீடபட்டுள்ளது.
இதன்படி வண்டல், களிமண் எடுக்க விரும்பும் விவசாயிகள், மண் பாண்ட தொழிலாளர்கள் www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு குழந்தைகளுக்காக மிஷன் வாத்சல்யா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வங்கி முகவரியில் பணம் செலுத்தலாம் என ராமநாதபுரம் ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.
Bank of Maharashtra, A/C: Ramanathapuram, District Orphan child, A/C No: 60488699946, IFSC code: MAHB0002134, MICR Code: 623014002.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மத்திய அரசு உடனடியாக மீட்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசு தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய மீனவர்களாகவே கருதுவதில்லை. முதல்வரின் கடிதத்திற்கு மத்திய அரசு செவி சாய்ப்பதாக தெரியவில்லை” என குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு மீனவர் நலவாரிய உறுப்பினர் சேர்ப்பு சிறப்பு முகாம் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள மீனவ கிராமங்களில் ஜூலை 8 முதல் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி, அதனைச் சார்ந்த தொழிலாளர்கள், மீனவர் மகளிர் கூட்டுறவு சங்க உறுப்பினர் அனைவரும் மீனவர் நல வாரிய உறுப்பினராக சேர்ந்து பயன்பெறலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் குற்றவாளிகள் குறித்தும் கள்ளச்சாராயம் காய்ச்ச முயற்சி செய்பவர்கள் குறித்து, குற்றத்தை தடுக்கும் பொருட்டு காவல் துறை மூலமாக நடவடிக்கை எடுப்பதற்காக கட்டணமில்லா தொலைபேசி மூலமாக 8300175888 என்ற எண்ணை எந்த நேரமும் (24X7) தொடர்பு கொண்டு தகவல்கள் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.
பாம்பன், நம்புதாளையில் இருந்து சென்ற 25 நாட்டுப்படகு மீனவர்களை நேற்று இலங்கை கடற்படை கைது செய்தது. இந்நிலையில், 25 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்காவிடில் 5ஆம் தேதி பாம்பன் பாலம் முற்றுகையிட இருப்பதாக அறிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.