India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமேஸ்வரம் கோவில் ஊழியர்களின் சேமநலநிதி கணக்கில் ரூ.1கோடி மோசடி நடந்தது. சிபிசிஐடி போலீசார் இணை ஆணையர் செல்வராஜ், கணினி ஆபரேட்டர் சிவனருள்குமரன், அவரின் தந்தை கோபால், கணக்கர் ரவீந்திரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் 4 பேர் மீதான விசாரணை நேற்று ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் வந்தது. விசாரணை நடத்திய நீதிபதி ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
தூத்துக்குடி கடலோர காவல்படையினர் கடந்த மாதம் எல்லை தாண்டி வந்த இலங்கை படகை பறிமுதல் செய்து மீனவர்கள் 7 பேரை கைது செய்தனர். பின்னர், ராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நேற்று வந்தது. அதில் 7 பேருக்கும் வரும் ஜூலை 26ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு வழங்கி நீதிபதி மோகன்ராம் உத்தரவிட்டார்.
ராமநாதபுரம்: பிரப்பன்வலசை, தெற்குவாடி , கீழ்க்குடி, கலையூர், செங்கற்படை, மாரந்தை , ஆலங்குளம், பகவதிமங்கலம் ஆகிய இடங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நாளை (13/7/24) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் ரேஷன் கார்டுகளில் பிழைதிருத்தம் , பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம், புதிய, நகல் ரேஷன் கார்டு கோரி மனு அளித்து பயன் பெறலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 5 மணி வரை ) ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தினமும் 1000 க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அங்கு செயல்படும் தலைக்காய சிகிச்சைப் பிரிவுக்கு சிறப்பு மருத்துவா் பணியிடத்தை நிரப்பக் கோரி கலந்தா் ஆசிக் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்தார். தலைக்காய சிகிச்சைப் பிரிவுக்கு 2 மாதங்களுக்குள் சிறப்பு மருத்துவரை தமிழகஅரசு நியமிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.
அம்பேத்கர், கருணாநிதி பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணாக்கருக்கு ஜூலை 18, 19 இல் பேச்சுப் போட்டி முஹமது சதக் தஸ்தகீர் பி.எட்., கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற உள்ளது.
இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 3 பரிசுகள் வழங்கப்படஉள்ளது. இதில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவர் இருவருக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படை அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு ஆள்சேர்ப்பு முகாம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற உள்ளது. இதில் தகுதிவாய்ந்த திருமணம் ஆகாத ஆண், பெண்கள் ஜூலை.28 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் நடப்பாண்டில் சம்பா பருவத்தில் நெல், சிறுதானியம், எண்ணெய் வித்துக்கள் 1 லட்சத்து 85 ஆயிரம் எக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட உள்ளது. இதில் 2 ஆம் போக சாகுபடி 540 எக்டேர் பரப்பில் நடைபெற்று வருகிறது. இதில் 7,377 டன் உரங்கள் இருப்பபில் உள்ளது. உரம் விற்பனை செய்யும் போது ஆதார் பெற்று ரசிது வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். தெற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல், வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் 55 கிமீ வேகத்தில் காற்றுவீசும். அதேபோல் தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக் கடல், மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக் கடலில் சூறைக்காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி அரசு ஐடிஐ-களில் அரசு ஒதுக்கீடு இடங்களில் 2024-25ம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கை ஜூலை 15 வரை நீட்டிக்கப்பட்டு ஓராண்டு, ஈராண்டு தொழிற்பிரிவுகளுக்கு மாணவர் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. இதில் சேர விரும்புவோர் மதிப்பெண், சாதி சான்றிதழ், டிசி, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டோ, மின்னஞ்சல் முகவரியுடன் நேரில் சென்று சேரலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.