Ramanathapuram

News July 29, 2024

3100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் 

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்ட வழங்கல் அலுவலர் நேற்று பரமக்குடியில் நடத்திய வாகன சோதனையில், ஒரு பொலீரோ வாகனத்தின் ஓட்டுநர் தப்பி ஓடியுள்ளார். பின்னர் வாகனத்தை சோதனை செய்த போது அதில் 3100 கிலோ ரேசன் அரிசி மூட்டை மூட்டையாக இருந்தது. மேலும் அலுவலர் புகாரின் பேரில் குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு துறை போலீசார் தப்பியோடிய சிக்கல் வீரமணி(30) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News July 29, 2024

பைக் மீது புல்லட் மோதி 3 பேர் உயிரிழப்பு 

image

பாம்பன் விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் தேவஜீவன். இவர் நேற்று மாலை தனது தங்கையுடன் புல்லட்டில் அக்காள்மடம் சென்றார். அப்போது அக்காள்மடம் அருகே சரோஜினி(46), அவரது மகள் அகில் வதனா(16) எலக்ட்ரிக் பைக்கில் சாலையை கடக்க முயன்றனர். இந்நிலையில் எலக்ட்ரிக் பைக் மீது புல்லட் மோதியதில் படுகாயமடைந்த தேவஜீவன் இறந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரோஜினி, அகில் வதனா ஆகியோரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

News July 29, 2024

மக்களுடன் முதல்வர் முகாம் இடம் மாற்றம்

image

ராமநாதபுரம் கலெக்டர் செய்தி குறிப்பு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டாரம் மக்களுடன் முதல்வர் முகாம் நாளை 29ஆம் தேதி பொந்தம்புளி கிராம ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற இருந்தது. நிர்வாக காரணங்களால் நாளை பெருநாழி எஸ்பி கே திருமண மண்டபத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  பொதுமக்கள் தங்களது மனுக்களை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

News July 28, 2024

எரிவாயு முகவர்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அறிவிப்பு

image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில்
எரிவாயு முகவர்களுடன் குறை தீர் கூட்டம் நாளை (29.7.24) மாலை 4 மணிக்கு
மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் எரிவாயு உபயோகிப்போர், தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர், பொதுமக்கள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

News July 28, 2024

புதிய ஆட்சியருக்கு அமைச்சர் வாழ்த்து

image

ராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள சிம்ரன்ஜித் சிங் கலோன் என்பவரை இன்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம தொழில் வாரியத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் இன்று சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

News July 28, 2024

மக்களுடன் முதல்வர் முகாம் இடமாற்றம்

image

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டாரத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் பொந்தம்புளி பஞ்சாயத்து அலுவலகத்தில் நாளை ( 29.7.2024) நடைபெற இருந்தது. இம்முகாம் நிர்வாக காரணங்களுக்காக பெருநாழி ஊராட்சி பெருநாழி எஸ்பிஜே மஹாலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

News July 27, 2024

மண்டபம் தெற்கு கடற் பகுதியில் நாளை மின்பிடிக்க தடை 

image

மன்னார் வளைகுடா கடல் பகுதியான தென்கடலில்   காற்றின் வேகம் நாளை 45 முதல் 55 கி.மீ. வரையிலும் அதிகபட்சமாக 65 கி.மீ. வரை வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆதலால் மண்டபம் பகுதி நாட்டு படகு, விசைப்படகு மீனவர்கள் தென் கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்தனர். மேலும் படகுகளை பாதுகாப்பாக கடலில் நிறுத்த அதிகாரிகள் உத்தரவுயிட்டனர் .

News July 27, 2024

பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா 

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து இன்று 28 பழங்குடியின குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்ட வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பரமக்குடி வைகையாற்றுக்குள் வசிக்கும் 13 குடும்பங்களுக்கும், லீலாவாதி நகரில் வீட்டுமனையற்ற 15 குடும்பத்திற்கும் தலா 3 செண்ட் வீதம் இலவச வீட்டு மனை பட்டாக்களை சார் ஆட்சியர் அபிலாக் வழங்கினார். 

News July 27, 2024

ராமநாதபுரம் அருகே இருவர் கைது

image

ராமநாதபுரம் சக்கரக்கோட்டை முனீஸ்வரர் கோவில் அருகே நகர் போலீஸ் எஸ்.ஐ சரவணன் தலைமையிலான பாேலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்பகுதியில் உள்ள புதர் பகுதியில் நின்ற ராமநாதபுரம் யானைக்கல் வீதி ஹரிஹரசுதன்( 20), லெட்சுமிபுரம் சுசீந்திரன் (23) ஆகியோரை பிடித்து விசாரித்த போது போதை மாத்திரை விற்பனை செய்வது தெரியவந்தது. அவர்களிடமிருந்த ரூ,4 ஆயிரம் மதிப்பிலான மாத்திரைகளை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

News July 27, 2024

ராம்நாடு: இலங்கை மீனவர்கள் விடுதலை

image

தூத்துக்குடி கடலோர காவல்படையினர் கடந்த மே மாதம் எல்லை தாண்டி வந்த இலங்கை படகை பறிமுதல் செய்து மீனவர்கள் 7 பேரை கைது செய்தனர். ராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், அரசின் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி கலெக்டர் பரிந்துரையின் பேரில் 7 பேரையும் ராமநாதபுரம் நீதிபதி மோகன்ராம் நேற்று விடுதலை செய்து உத்தரவிட்டார்.

error: Content is protected !!