Ramanathapuram

News September 16, 2024

திருமாவளவன் மீது பாஜக நிர்வாகி பாய்ச்சல்

image

இராமநாதபுரத்தில் இன்று செய்தியாரிடம் பேசிய பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி. செல்வம், விசிக தலைவர் திருமாவளவன் வரும் தேர்தலில் திமுகவிடம் அதிக சீட்டுகளைப் பெறவே மது ஒழிப்பு நாடகத்தை நடத்தி வருகிறார். மது ஒழிக்கப்பட வேண்டும் என அவர் உண்மையில் நினைத்தால் திமுக கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும். இந்நேரம் திமுகவினர் நடத்தி வரும் மது ஆலைகள் முன் போராட்டம் நடத்தியிருக்க வேண்டும் என குற்றம் சாட்டினார்.

News September 16, 2024

இராமேஸ்வரம்: விடுமுறை நாட்களில் குவிந்த பக்தர்கள்

image

இராமேஸ்வரத்தில் கடந்த இரண்டு நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இந்நிலையில் நேற்று(செப்.15) ஏராளமான பக்தர்கள் புனித நீராடி 21 புன்னிய தீர்த்தங்களில் நீராட நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி தரிசனம் செய்தனர்.

News September 16, 2024

காணாமல் போன படகில் சடலம்

image

ராமேஸ்வரம் ஓலைக்குடாவைச் சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவர், தனது பைபர் படகு கடந்த செப்., 11-ம் தேதி காணாமல் போனதாக புகார் அளித்தார். இப்படகு புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி கடல் பகுதிகளில் மர்மநபர் ஒருவர் இறந்த நிலையில் சென்றுள்ளது. அங்குள்ள மீனவர்கள் பத்திரமாக படகினை மீட்டு காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இறந்த நபர் குறித்து ராமேஸ்வரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 15, 2024

இராமநாதபுரத்தில் 999 வழக்குகளுக்கு தீர்வு

image

ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, திருவாடானை, கடலாடி, கமுதி உள்ளிட்ட பகுதிகளில் 10 இருக்கைகள் அமைக்கப்பட்டு குடும்ப நல வழக்கு, மோட்டார் வாகன விபத்து வழக்கு, வங்கி வாராக் கடன் வழக்கு, சிவில் என 4172 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டு 999 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் 8 கோடியே 73 லட்சத்து 91 ஆயிரத்து 507 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டு வழக்காளர்களுக்கு வழங்கப்பட்டது.

News September 14, 2024

ராம்நாடு டிஎன்பிஎஸ்சி தேர்வு : 3,752 பேர் ஆப்சென்ட்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் 47 மையங்களில் 56 அறைகளில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ முதல்நிலைத் தேர்வு இன்று(செப்.14) நடந்தது. இந்த தேர்விற்கு விண்ணப்பித்த 15,657 பேரில் 11,905 பேர் மட்டும் பங்கேற்றனர். கண்காணிப்பு அலுவலர்கள் 2 பேர் தலைமையில் 55 தேர்வு மைய பார்வையாளர்கள் பணியில் ஈடுபட்டனர். 13 நடமாடும் கண்காணிப்பு குழு, 2 பறக்கும் படை குழு தேர்வு மையங்களை கண்காணித்தனர்.

News September 14, 2024

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கல்லூரியில் ஆய்வு

image

இராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் இன்று(செப்.14) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி II/IIA (Group-II/IIA) முதல்நிலைத்தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தேர்வர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

News September 14, 2024

ராமநாதபுரம் மாவட்ட கலைப் போட்டிகள் தொடக்கம்

image

கலை பண்பாட்டுத் துறை, ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில் ராமநாதபுரம் DD விநாயகர் தொடக்கப் பள்ளியில் மாவட்ட அளவிலான 5-8, 9-12, 13-16 வயதிற்குட்பட்டோர் கலைப்போட்டிகள் இன்று காலை தொடங்கியது. ஆயிர வைசிய மகாசபை தலைவர் ஜெயராமன் தொடங்கி வைத்தார். பரதம், ஓவியம், பாட்டு, கிராமிய நடனப் போட்டியில் மாணாக்கர் பங்கேற்றனர். ஆசிரியர்கள் முனீஸ்வரி, அனந்தமுத்துமாரி, பாலாஜி, ஆகாஷ், தனசேகரன் போட்டிகளை நடத்தினர்.

News September 14, 2024

TNPSC தேர்வு மையங்களில் கலெக்டர் ஆய்வு

image

ராமநாதபுரம் சேதுபதி அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரி, செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் இன்று(14.09.24) TNPSC குரூப் 2, 2A தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேர்வு மையங்களான இக்கலூரிகளில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நேரில் சென்று ஆய்வில் ஈடுபட்டார். உடன் அரசு அதிகார் இருந்தனர்.

News September 14, 2024

ராம்நாடு பிரபல ரவுடி ஆந்திரா சிறையில் அடைப்பு

image

ராமநாதபுரம் தமிழர் தேசம் கட்சி நிர்வாகியை கொலை செய்ய வந்த 4 பேரை முன்னதாக போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக எஸ்.மாரியூர் மாந்தா லோகேஷ் என்ற ரவுடியை தேடிவந்தனர். சமீபத்தில், 8 கிலோ கஞ்சாவுடன் அவர் ஆந்திராவில் கைதானார். தகவலறிந்த ராமநாதபுரம் போலீசார் அங்கு சென்று, இங்குள்ள 3 வழக்கிற்காக மாந்தா லோகேசை கைது செய்து ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் நேற்று ஆந்திரா சிறையில் அடைத்தனர்.

News September 14, 2024

ராம்நாடு அருகே ரூ.100 Xerox எடுத்த நபர் கைது!

image

ராமநாதபுரம் அருகே சத்திரக்குடியில், A4 பேப்பரில் ரூ.100 Xerox அடித்து எடுத்துச் சென்ற இளைஞர் கார்த்திக்(25) என்பவர் நேற்று(செப்.13) போலீசாரால் கைது செய்யப்பட்டார். மொத்தம் இவரிடம் எழுபத்தெட்டு A4 பேப்பர்களில் நான்கு 100 ரூபாய் என ரூ.31,200 Xerox அடித்துள்ளார். அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!