India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தாலுகா பாம்பன் ஊராட்சி மன்றத்தால் வரிவசூல் செய்யப்பட்டு வாரந்தோறும் ஞாயிற்றுகிழமை தோறும் வாரசந்தை நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த 28ஆம் தேதியன்று கூட சந்தை நடைபெறும் பகுதியில் விபத்து ஏற்பட்டு மூன்று பேர் உயிரிழந்தனர். எனவே சந்தையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய பொதுமக்கள் சார்பாக நேற்று பாம்பன் ஊராட்சி ஓன்றிய அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் பணியாற்றி இன்று 31/7/2024 பணி ஓய்வு பெற்ற காவல்துறை சார்பு ஆய்வாளர் தெய்வேந்திரன் மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகரன் அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் அவர்கள் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பணி பாராட்டு சான்றிதல் வழங்கி பாராட்டினார்.
முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம தொழில் வாரிய துறை அமைச்சருமான ராஜ கண்ணப்பன் பிறந்த நாளை முன்னிட்டு இன்று தமிழக விளையாட்டு துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன், திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வரும் கமலக்கண்ணன் என்பவர் காவல்துறையில் பணிபுரிந்து கொண்டே தனது கடின உழைப்பால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக தேர்தல் பணிக்குழு தலைவரும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம தொழில் வாரிய துறை அமைச்சருமான ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் தனது பிறந்த நாளை முன்னிட்டு இன்று சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சமீபகாலமாகவே ‘கள்’ இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக அண்ணாமலை, சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு ஆதரவு தெரிவிப்பதுடன், பலதரப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகிறது. இந்நிலையில் ‘கள்’ விற்பனை மீதான தடையை நீக்க கோரிய மனுவை அரசு பரிசீலிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ உற்பத்தி செய்யப்படும். குறிப்பாக பனை மரங்கள் நிறைந்து காணப்படும் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் சிவகங்கையில் கள் அதிகளவில் இறக்கப்பட்டது. கள்ளச்சராய பலி & ‘TASMAC’ மதுவின் தாக்கத்தை காட்டிலும் ‘கள்’ பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற கருத்தும் நிலவுகிறது. மீண்டும் ‘கள்’ விற்பனைக்கு வருவது குறித்த உங்கள் கருத்து என்ன?
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(ஜூலை 31) பிற்பகல் 1 மணி வரை லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 2ஆம் தேதி அன்று பிற்பகல் 3:30 மணியளவில் மீனவர்கள் குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் கலோன் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மீனவர்களும் கலந்துகொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக வழங்கி பயன்பெறலாம் என மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
முதுகுளத்தூரில் 15 வயது சிறுமியுடன் வாலிபர் மாயமானது தொடர்பாக முதுகுளத்தூர் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு ராமநாதபுரம் மகளிர் விரைவு கோர்ட்டில் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் இளவரசு ஆஜராகவில்லை. இதனால் நீதிபதி கோபிநாத் இன்ஸ்பெக்டர் இளவரசுவிற்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். இவர் தஞ்சாவூர் அம்மாபட்டி இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
Sorry, no posts matched your criteria.