India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இராமநாதபுரம் மாவட்டம் தமிழ் புலிகள் கட்சியின் எழுத்தாளர் தோழர் தமிழ்வாணன் எழுதிய “ஆதித்தமிழ் நிலமும் அருந்ததியர் வரலாறும்” நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. தமிழ் புலி கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் இந்நூலை வெளியிட்டார். சிறப்பு அழைப்பாளராக தமுமுக மாநில துணை பொது செயலாளர் சலிமுல்லாஹ்கான் கலந்துகொண்டு சனாதானத்தை ஒழித்த இஸ்லாம் தலைப்பில் சிற்றுரை நிகழ்த்தினார்.
பாஜக தலைவர் அண்ணாமலை நாளை(ஆக.5) டெல்லிக்கு பயணம் செய்ய உள்ளார் நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கரை சந்திக்க உள்ளார். அதில் ராமநாதபுரம், புதுகை பகுதி மீனவர்களுடன் மத்திய அமைச்சர் சந்திகவுள்ளதாகவும், அதில் தமிழக மீனவர்களின் பிரச்சனை குறித்து வெளியுறவுத்துறை அமைச்சரிடம் முறையிடவுள்ளதாக தகவல் வெளியகியுள்ளது.
இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் யரும் இல்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடல், திருவிழா, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது, காதல், சண்டை என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் நாம் செய்த சேட்டைகள் பல உண்டு. அந்த வகையில் உங்க நண்பன் பெயர்,அவருடன் நீங்கள் செய்த சேட்டையை கீழே கமெண்ட் பண்ணி, நண்பனுக்கு சேர் செய்யுங்க.
தமிழ்நாடு சிறப்பு பொது விநியோகத்திட்டத்தில் 2.23 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதந்தோறும் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது. ஜூன்.2024 மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாத அட்டை தாரர்கள் ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 398982 அட்டை தாரர்களில் ஜூலையில் பொருட்கள் பெற இயலாதவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று(ஆக.4) கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது. வழக்கமாக பகல் 1 மணி நடை சாத்தப்படும் நிலையில் இன்று சாத்தப்படாமல் பகல் முழுவதும் தரிசனத்திற்காக திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கே நடை சாத்தப்படும். நாளை(ஆக.5)அம்பாள் மேலத்தெருவில் எழுந்தருளுவதால் மாலை 4 மணி முதல் இரவு வரை பக்தர்கள் தரிசனம் மற்றும் தீர்த்தமாட அனுமதி இல்லை.
தமிழகத்தில் தற்போது பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் இன்று ராமநாதபுரம், கடலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து வெளியே செல்பவர்கள் எச்சரிக்கையோடு இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதை கண்டும் காணாமல் உள்ள பாஜக அரசு மற்றும் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரில் ஆகஸ்ட் 6 தேதி அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த ஜூலை 31ஆம் தேதியன்று மீன்பிடிக்க கடலுக்கு சென்ற படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் நான்கு மீனவர்கள் கடலில் முழங்கினர். இதில் உயிரிழந்த இராமேஸ்வரம் மீனவர் மலைச்சாமியின் உடல் இன்று(ஆக.03) அதிகாலை 4 மணியளவில் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது.
ராமநாதபுரத்தில் இருந்து மதுரை செல்லும் பயணிகள் ரயில் 5 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து காலை 11 மணிக்கு மதுரைக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் மற்றும் மதுரையில் இருந்து மதியம் 12:30 க்கு ராமநாதபுரத்திற்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் ஆகஸ்ட் 5, 6, 8, 9, 11 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஆக.2) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீனவர் குறைகள் தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது. இதில் துறை சார்ந்த அதிகாரிகளும், மீனவ சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதில் மீனவர்கள் தங்களது குறைகளை ஆட்சியரிடம் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.