Ramanathapuram

News August 5, 2024

வெளியுறவு துறை அமைச்சருடன் மீனவ சங்கத்தினர் சந்திப்பு

image

ராமேஸ்வரம் மீனவ சங்கத்தினர் இன்று (ஆக.05) டெல்லியில் வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கையை உடனே நிறுத்த கோரியும், இலங்கையில் உள்ள படகுகளை உடனடியாக விடுவிக்ககோரியும், சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரியும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தரணி முருகேசன் தலைமையில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

News August 5, 2024

மத்திய அமைச்சரிடம் தமிழக மீனவர்கள் முறையீடு

image

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தலைமையில், மாநில மீனவரணி தலைவர் முனுசாமி, ராமநாதபுரம் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் & நாட்டுப்படகு, விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதிகள் புதுடில்லியில் இன்று மாலை சந்தித்தனர். ஆக.1 ல் இலங்கை கடற்படை படகு மோதி மாயமான மீனவர் ராமச்சந்திரன், இலங்கை கடற்படை சிறை பிடித்துச் சென்ற தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரினர்.

News August 5, 2024

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரகத்தில் குறைதீர்ப்பு கூட்டம்

image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (05/08/24) மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் கலோன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தகோவிந்தராசு ஆகியோர் தலைமை வகித்தனர். பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

News August 5, 2024

ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு ஜில் நியூஸ்

image

தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு இன்று (ஆக.05) இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழையும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு லேசான மழையும் இரவு 10 மணி வரை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 5, 2024

தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி

image

ராமநாதபுரம் மாவட்டம் மங்களக்குடி முதல் ஊமை உடையான்மடை வரையிலான சாலை மிகவும் சேதமடைந்ததால் புதியதாக சாலை அமைக்கக்கோரிய மனு மீதான விசாரணை இன்று (ஆக.05) மதுரை ஐகோர்ட் கிளையில் நடைபெற்றபோது, இலவசம் வழங்க அரசிடம் போதிய நிதி உள்ளது. ஆனால் சாலைகள் அமைக்க அரசிடம் நிதி இல்லையா என கேள்வி எழுப்பி ஆட்சியர் விரிவான பதில் மனு தாக்கல் செய்யக்கோரி வழக்கின் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

News August 5, 2024

ராமநாதபுரத்தில் அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி

image

பார்த்திபனூரில் நாளை (ஆக.06) காலை 9.30 மணியளவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து காலை 10.30 மணியளவில் பொது சுகாதாரத் துறையின் மூலம் புதிதாக கட்டப்பட்ட மருத்துவமனை கட்டிடங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் ராஜகண்ணப்பன் ஆகியோர் பங்கேற்று திறந்து வைக்கின்றனர்.

News August 5, 2024

ராமேஸ்வரம் பள்ளியில் அக்னிபாத் விழிப்புணர்வு கூட்டம்

image

ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று இந்திய பாதுகாப்பு படையில் அக்னி பாத் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர் சேர்வது குறித்த விழிப்புணர்வு கூட்டம் தலைமை ஆசிரியர் கணேசபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். சென்னை தாம்பரம் இந்தியன் விமானப்படை அலுவலர் சார்ஜன்ட் கணிக்குமார் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News August 5, 2024

1,290 கிலோ மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்

image

மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினம் தென் கடற்கரை அருகே மன்சூர் அலி என்பவரது வீட்டில் தலா 30 கிலோ வீதம் 43 மூட்டைகளில் இருந்த 1,290 கிலோ மஞ்சள் மூட்டைகளை தனிப்பிரிவு போலீஸார் இன்று காலை கைப்பற்றினர். இந்த மஞ்சள் மூட்டைகளை படகு மூலம் கடத்த மரைக்காயபட்டினம் முஹமது மைதீன் என்பவர்பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 4, 2024

ராமநாதபுரம்: திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

image

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதியில் பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் எஸ்டிபி கட்சியை சேர்ந்தவர்கள் உட்பட சுமார் 30-க்கும் மேற்பட்டோர் தங்களை இன்று திமுகவில் இணைந்து கொண்டனர். அப்போது, ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக செயலாருமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

News August 4, 2024

ராமநாதபுரத்தில் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் பருவ மழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகின்றது. இந்நிலையில், ராமநாதபுரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று இரவு 8.30 மணி வரை இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இடையிடையே 30-40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!