India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 35 பேரை ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை புத்தளம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மன்னார் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவர்கள் 35 பேரை நேற்று முன்தினம் இலங்கை கடற்படை கைது செய்தது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 429 கிராம ஊராட்சிகளிலும் ஆக.15ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. வேண்டும். இதில் பொது நிதி செலவு, தூய குடிநீர் விநியோகம், 100 நாள் வேலை, தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் இயக்கம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க மக்கள் பங்கேற்று தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை இன்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்களையும் வெளியிட்ட கலெக்டர் குடிநீர் பரிசோதனை ஆய்வகத்தையும் பார்வையிட்டார். இதில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜுலு, உதவி ஆட்சியர் முகம்மது இர்ஃபான், விவசாய இணை இயக்குனர் கண்ணையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை தெரிவித்தனர்.
ராமநாதபுரம் குளத்தூர் பகுதியைச் சேர்ந்த லெனின் என்பவர் தனக்கு வந்த குறுஞ்செய்தியை நம்பி, தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.95 ஆயிரம் முதலீடு செய்துள்ளார். இதன் பிறகு தனக்கு லாபமாக வந்த பணத்தை எடுக்க முடியாமல் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரித்த சைபர் கிரைம் போலீசார் ரூ.95,000 பணத்தை மீட்டு உரியவரிடம் எஸ்.பி. முன்னிலையில் ஒப்படைத்தனர்.
இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பணிபுரியும் அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் பணிமாறுதல் வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் இன்று (ஆக.08) உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் ஊராக வளர்ச்சி முகமையில் பணியாற்றிய 48 பேர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரத்தில் கடந்த சில தினங்களாக லேசான மழை பெய்து வரும் நிலையில், இன்றும் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனை சேர்ந்த 7 மீனவர்களை கடந்த ஜூலை 1ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்தது. இந்நிலையில், இன்று(ஆக.08) பாம்பன் மீனவர்கள் 7 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
இலங்கையிலிருந்து ராமேஷ்வரத்துக்கு ரூ.3 கோடி மதிப்பிலான தங்கத்தை மர்ம கும்பல் கடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கல்பிட்டி தீவு அருகே ரோந்து பணியிலிருந்த இலங்கை கடற்படையினர் சந்தேகத்துக்கிடமான படகை நிறுத்துமாறு கூறியுள்ளனர். படகிலிருந்தவர்கள் பார்சலை கடலில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். வீசப்பட்ட தங்கத்தை இலங்கை கடற்படையினர் நேற்று மீட்டனர். இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள 25 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தேனி உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்கு இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இன்று காலை முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.