India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமாநாதபுரம் மாவட்டம் S.P.பட்டிணம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாகச் சென்ற மீனவர் ஒருவர், அவர் கொண்டு வந்த சாக்கு பையை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார். சாக்கு பையை சோதனையிட்ட போலீசார், அதிலிருந்த தடை செய்யப்பட்ட வெடி மருந்துகளான 405 எண்ணம் ஜெலட்டின் குச்சிகள் & சம்பவ இடத்தில் கிடந்த செல்போனையும் கைப்பற்றி தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 26ம் தேதி மீன்பிடிக்கச் சென்று மீன் பிடித்து விட்டு கரை திரும்பியபோது நடுக்கடலில் படகு மூழ்கி விபத்தானது. இதில் மாயமான மீனவர்கள் எமரிட், வெள்ளைச்சாமி ஆகிய 2 பேரை இராமேஸ்வரம் மீன் வளத்துறை அதிகாரிகள் மீனவர்கள் உதவியுடன் நடுக்கடலில் தேடி வந்த நிலையில் தற்போது மீனவர் எமரிட் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக முதல்வரின் சிறப்பு பணிக்கான அண்ணா காவல் பதக்கம் மற்றும் பத்து லட்சம் வெகுமதி பெற்ற காவல் ஆய்வாளர் லட்சுமி மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரதாப் சிங் ஆகிய இருவரையும் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஐபிஎஸ் இன்று (ஆக.28) நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்தினார்.
ராமேஸ்வரத்திலிருந்து ஆக.,26ல் கடலுக்கு சென்ற விசைப் படகுகள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்தபோது, 1 படகு & அதிலிருந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்றது. மேலும் கச்சத்தீவு அருகே மீன்பிடித்த விசைப்படகு சேதமாகி கடலில் மூழ்கி இருவர் மாயமாகினர். இதையடுத்து சிறைபிடித்த மீனவர்கள், மாயமான இருவரை தேடி மீட்டு தரக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று(ஆக.,28) ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் நரசிங்ககூட்டம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நெகிழி பொருட்களை தவிர்க்கும் வகையில், மாணவர்களுக்கு சில்வர் தட்டு மற்றும் சில்வர் தண்ணீர் பாட்டில்களை அப்பள்ளியின் ஆசிரியர் தன்னுடைய சொந்த செலவில் வழங்கியுள்ளார். ஆசிரியரின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே லட்சுமண குடியிருப்பு கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ பூமாரியம்மன் ஆலயத்தில் 15 ஆம் ஆண்டு பூத்தட்டு திருவிழாவை முன்னிட்டு இன்று(ஆக.,27) அதிகாலை 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூ தட்டுகளை தலையில் சுமந்து, கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திகடன் செலுத்தினர். அதன் பின்பு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை இன்று(ஆக.,27) கைது செய்துள்ளது. தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களின் படைகையும் பறிமுதல் செய்து மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் தொடர் விடுமுறையின் முன்றாம் நாளான நேற்று (ஆக,26) ஏராளமான சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடியில் குவிந்தனர். தொடர்நது, கடல் பகுதி நீரோட்டமும் சுழற்சியும் உள்ள பகுதி என எச்சரிக்கை போர்டு இருந்தபோதிலும் கடலில் இறங்கி குளித்து புகைப்படம் எடுத்தனர். 1964 ஆம் ஆண்டு தனுஷ்கோடி புயலில் அழிந்த நினைவு சின்னங்களையும் பார்வையிட்டு ரசித்து செல்கின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த சசிகுமார் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இன்று (ஆக,26) நடைபெற்ற இறுதி அஞ்சலி நிகழ்வில், அவரது உடலுக்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஐபிஎஸ் நேரில் சென்று மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தி, இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.
ராமநாதபுரம் தங்கச்சிமடம் கடற்கரை அருகே தோப்பில் போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்படி, தனிப்பிரிவு போலீசார் பாலசுப்ரமணியன், ராமமூர்த்தி நேற்று(ஆக.,25) நள்ளிரவு சோதனை நடத்தினர். அப்போது, தலா 30 கிலோ வீதம் 10 பண்டல்களில் பதுக்கிய பீடி இலை பண்டல்களை கைப்பற்றினர். கூரியர் வாகனத்தில் கொண்டு வந்து தோப்பில் பதுக்கியது குறித்து ரமேஷ் என்பவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்
Sorry, no posts matched your criteria.