India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் வன உயிரின குற்றத்தடுப்பு வனக்குழு ஆர்.எஸ். மங்கலம் அருகே முள்ளிக்கொடி வயல்வெளியில் 180 கிலோ கடல் அட்டைகளை வேக வைத்து கொண்டிருந்த தேவிபட்டினத்தை சேர்ந்த 2 பேரை பிடித்தனர். கைப்பற்றிய கடல் அட்டைகளை ராமநாதபுரம் வன உயிரின சரக அலுவலகத்தில் நேற்று (செப்.4) ஒப்படைத்தனர். எதிரிகள் 2 பேரையும் திருவாடானை குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தி ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழா செப்.7 அன்று நடைபெற உள்ளது. இதற்காக ராமநாதபுரத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற உள்ளது. இந்த சிலைகள் செல்லும் வழித்தடங்களை இன்று மாலை ராமநாதபுரம் எஸ்பி. சந்தீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உதவி போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர்.
தனுஷ்கோடி அரிச்சல்முனையில் காற்றின் திசையால் நீரோட்டம் மாறுவதால் வடக்கு கடல் பகுதியில் உருவாக்கிய மணல் பரப்பில் நடந்து சென்று கரையோரத்தில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர். ஆண்டுக்கு நான்கு மாதங்கள் மட்டுமே வடக்கு கடல் மணல் பரப்பில் உருவாகும் இயற்கையின் மாயாஜாலத்தின் அழகினை சுற்றுலா பயணிகள். ரசித்து வருகின்றனர்.
அழகப்பா பல்கலைகழக கல்லூரிகளுக்கு இடையேயான செஸ் போட்டியானது குஞ்சார்வலசை ராஜா கலை, அறிவியல் கல்லூரியில் செப்.3,4ல் நடைப்பெற்றது. கல்லூரி நிறுவனர் ராஜா துவக்கி வைத்த இதில் 36 கல்லூரிகளைச் சேர்ந்த 152 மாணவர்கள் பங்கேற்றனர். ஆடவர் பிரிவில் அழகப்பா பல்கலை கல்லூரி, மகளிர் பிரிவில் அழகப்பா அரசு கலை கல்லூரி முதலிடம் பிடித்தனர். வென்ற அணியினருக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார் பரிசு வழங்கினார்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் ரூ.550 கோடி மதிப்பீட்டில் அமைந்து வரும் புதிய ரயில் பாலத்தில் செங்குத்து பாலம் இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது எதிர்காலத்தில் மின்சார ரயில் இயக்குவதற்காக மின்கம்பங்கள் அமைத்து உயர் மின்னழுத்த வயர்களை இணைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மாட்டு சாணத்தின் மூலம் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து ஒன்று அடியில் விநாயகர் சிலைகள் தயார் செய்து மண்டபம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விற்பனை செய்து வருகின்றனர். இயற்கைக்கு உகந்த வகையில் சிலைகள் தயார் செய்வதால் பொதுமக்கள் அதனை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 10 ஆசிரியர்கள் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், மண்டபம் முகாம் அரசு மேல் நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஜெயக்குமார், அறிஞர் அண்ணா நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் குணசேகரன், நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மஸுன் பர்வீன், செங்கபடை அரசு ஆதிதிராவிடர் உயர் நிலைப்பள்ளி ஆசிரியர் லட்சுமணன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் வசந்த நகரை சேர்ந்தவர் ராம்குமார் (38). அரண்மனை பகுதியில் உள்ள இவரது மதுபான பாரில் பசும்பொன் நகர் விக்னேஸ்வரன்(24), எம்எஸ்கே நகர் அரவிந்த்(26), தாமரை ஊரணி முகேஷ் கண்ணன்(24) ஆகிய 3 பேர் வந்து பணம் கொடுக்காமல் மது கேட்டு தகராறில் ஈடுபட்டு, அங்குள்ள பொருட்களை சேத படுத்தியுள்ளனர். இது தொடர்பாக ராம்குமார் புகாரின்படி பஜார் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
ராமநாதபுரம் சேதுபதி நகர் 4 ஆவது தெருவை சேர்ந்வர் பூமிநாதன்(50). இவரிடம், ரூ.2.10 கோடி மதிப்பில் நில மோசடி செய்தது தொடர்பாக மான்குண்டு பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி, ஜான்சிராணி தம்பதியினரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். இந்நிலையில், இதுதொடர்பாக நேற்று சோட்டாசாமி(65) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அபர்ணா, காவேரிதாசன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(செப்.03) மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் உயிர்கோள காப்பகத்திற்கான ஒருங்கிணைந்த திட்டங்கள் மேற்கொள்வது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜகதீஷ் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு ஆகியோர் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.