India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே நம்புதாளையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொழுது போக்கிற்காக போடப்பட்ட ராட்டினம் தொழிலில் முன்விரோதம் காரணமாக பரமக்குடியை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 5 பேர் கொண்ட கும்பல் வெட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த கொலையால் பரபரப்பு தொண்டி போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நவ.3 ஞாயிறு மாலை 3 மணியளவில் ராமநாதபுரம் – தாம்பரம் ஒரு வழி சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கப்பட உள்ளது. திருச்சி சந்திப்பில் இருந்து, கார்ட் லைன் வழித்தடத்தில் செல்லும் இந்த ரயில் நவ.3 இரவு 11:40 மணியளவில் தாம்பரம் ரயில் நிலையம் சென்றடையும். இதன் முன்பதிவு இன்று(நவ.1) காலை 8 மணிக்கு துவங்குகிறது. தீபாவளி விடுமுறை முடிந்து ராமநாதபுரம், பரமக்குடியில் இருந்து சென்னை செல்வோர் இந்த ரயிலில் பயணிக்கலாம்.
தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (நவ.1) திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, ராமநாதபுரம் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நேற்று(அக்.31) முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது கீழே விழுந்து கிடந்த கொடிகம்பத்தை அகற்றும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த பரமக்குடி சார்பு ஆய்வாளர் சரவணன் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் அவர்களுக்கு ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
➤எளிதில் தீப்பற்றும் ஆடைகளை அணிந்து பட்டாசுகளை வெடிக்கக் கூடாது
➤கம்பி மத்தாப்பு, புஸ்வாணம், சங்கு சக்கரம்தானே என வீட்டுக்குள் வெடிக்கக் கூடாது.
➤ வெடிகளை வெடிப்பதற்கு நீண்ட கைப்பிடி கொண்ட ஊதுவத்திகளைப் பயன்படுத்த வேண்டும்
➤ வாளியில் தண்ணீரை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்
➤ தீக்காயம் ஏற்பட்டால் சுயமாக மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் மருத்துவமனையை உடனடியாக அணுக வேண்டும்.
SHARE IT!
முத்துராமலிங்க தேவரின் 117 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 62 ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு இன்று (அக்.30) பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலர் மரியாதை செலுத்தினர். இந்நிலையில் நடிகர் விஷால் மற்றும் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் ஆகியோர் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன்னில் இன்று(அக்.30) முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் தமிழக பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பாஜக முத்த தலைவர் ஹெச்.ராஜா கருப்பு முருகானந்தம் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 117 வது ஜெயந்தி விழா மற்றும் 62 வது குருபூஜை விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவாலயத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் மணிகண்டன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், மாவட்ட செயலாளர் முனியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பசும்பொன்னில் இன்று (அக்.30) முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தி விழா மற்றும் 62ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன், ராஜ கண்ணப்பன், மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், பெரியசாமி, பெரிய கருப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ராஜா ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன்னில் இன்று (அக்.,30) முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தி விழா மற்றும் 62ஆவது குருபூஜை விழா முன்னிட்டு இன்று (அக்.30) பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ராமநாதபுரம் மன்னர் நாகேந்திர சேதுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் ஆத்மா கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.