India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (நவ.,5) திமுக மாநில இளைஞரணி துணை செயலாளர் GP.ராஜா தலைமையில் மதுரையில் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா தலைமையில் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நவ.9 காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இளையோர் திறன் தின விழா நடைபெற உள்ளது. திறன் மேம்பாட்டு 15 நிறுவனங்கள் பங்கேற்க உள்ள இவ்விழாவில் 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ படித்த ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
வண்டி எண் 06103 தாம்பரத்திலிருந்து ராமநாதபுரம் வரை வாரம் மும்முறை செல்லும் ரயில் சேவை மேலும் ஒரு மாதம் கால 30/11/24 வரை நீட்டிக்கப்படுகிறது அதன்ப்படி மறுமார்க்கமாக 06104 ராமநாதபுரத்திலிருந்து தாம்பரம் செல்லும் விரைவு ரயில் 01/12/24 வரை நீட்டிக்கப்படுகிறது தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இலங்கை போலீஸ் நிலையத்தில் போதைப்பொருள் திருடி கடந்த 2020-ம் ஆண்டு தப்பி வந்து தனுஷ்கோடியில் இலங்கை போலீஸ்காரர் பிரதீப்குமார் பண்டாரா (34) கைதானார். திருச்சி முகாமில் தங்கி உள்ள இவர் மீதான வழக்கு ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் நேரில் ஆஜரான நிலையில் அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி குமரகுரு வழக்கினை வரும் 25-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோர் சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கவும் சட்ட ஆலோசனைகள் வழங்கவும் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 18002021989,14566 ஆகிய தொலைபேசி எண்களில் அரசு விடுமுறை நாட்களில் நீங்களாக அலுவலக நேரங்களில் புகார்களை பதிவு செய்யலாம் என இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
இன்று இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இளஞ்செழியன் DSP தலைமையில் காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் நவ.8-ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் மீனவ மக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி பெறலாம். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
உச்சிப்புளி ரயில்வே கேட் நம்பர் 518, எதிர்பாராத பழுது ஏற்பட்டுள்ளது இதனால் அப்பகுதி வழியாக வரும் வண்டிகள் அனைத்தும் மாற்று பாதையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,
ராமேஸ்வரம் to ராமநாதபுரம் (பிரப்பன்வலசை, வழி)
இராமநாதபுரம் to இராமேஸ்வரம் (இருமெனி ரயில்வே கேட் வழி) அனைத்து வாகனங்களும் செல்லும் படி அறிவுறுத்தப்படுகிறது.
ராமநாதபுரம் பெரிய கண்மாய் பகுதிக்கு வைகை ஆற்றின் மழை வெள்ள நீர் வரத்து கடந்த சில நாட்களாக இருந்தது. தொடர் மழையால் நீர் வரத்து அதிகரித்து வினாடிக்கு 50 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது.இதனால் பெரிய கண்மாய் நீர்மட்டம் 3.5 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் ராமநாதபுரத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று (03.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ள அட்டவணையை இராமநாதபுரம் காவல்துறை வெளியிட்டுள்ளது. DSP பாலசுப்பிரமணியம் தலைமையில் இன்று ரோந்து பணி நடைபெறும். வேறு எதாவது தகவல் தேவைப்பட்டால் எண் 100 ஐ டயல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.