India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளில் அக்டோபர் 2ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார். கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலலினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை (2023-24), தூய குடிநீர் விநியோகம் உறுதி செய்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த A+ ரவுடியை பல்வேறு முயற்சிகள் செய்து கமுதி தனி படையினர் கைது செய்தனர். கைது செய்த கமுதி காவல்துறையினருக்கு ராமநாதபுரம் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஐபிஎஸ் கைது செய்த காவல்துறையினரை இன்று (செப்.27) பாராட்டி வெகுமதி வழங்கினார்.
சமூகநலன் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண்களை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் வகையில் அவர்களது கைபேசியிலிருந்தே புகார் அளிக்கும் வகையில் கியூ ஆர் (QR)கோடு வெளியிடப்பட்டுள்ளது.
ஒளி, ஒலி வாயிலாக தெரிந்து கொள்ளும் வகையிலும், மேலும் ராமநாதபுரம் மாவட்ட கல்வி நிறுவனங்களில் புகார் குழு அமைத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆட்சியர் சிம்ரன்ஜீத்சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் வரும் செப்.28ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறும் திமுக பவள விழா பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். எனவே இராமநாதபுரம் மாவட்ட மாநில திமுக நிர்வாகிகள் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகளும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு காதர் பாட்சா முத்துராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த (செப்.11) அன்று நடைபெற்ற தியாகி இமானுவேல் சேகரன் குருபூஜை பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் 56 பேருக்கு நேற்று (செப்.26) இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஐபிஎஸ் நேரில் அழைத்து பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் குருக்கள் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா இன்று (செப்.26) விசாரித்தனர். அப்போது இந்து சமய அறநிலையத்துறை கோயில்களை முறையாக பராமரிப்பது இல்லை எனவும் வசூல்ராஜா MBBS வேலையை மட்டும் செய்கிறது எனவும் கோயில் கணக்கு வழக்குகளை அறிக்கையாக தாக்கல் செய்ய கோயில் செயல் அலுவலருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
பாம்பன் புதிய ரயில் பாலம் கட்டும் பணி தொடங்கி தற்போது பாலம் பணிகள் முடிந்த நிலையில் நடுவில் துாக்கு பாலத்தை பொருத்தும் இறுதிக்கட்ட பணிகள் நடக்கிறது. இந்நேரத்தில் பாலத்தை கடக்கும் மீனவர்கள் மீது கனரக இரும்பு பொருட்கள் தவறி விழுந்தால் ஆபத்து ஏற்படும் என்பதால் மீனவர்கள் பாலத்தை கடந்து செல்ல ரயில்வே நிர்வாகம் தடை விதித்து எச்சரிக்கை பலகை வைத்துள்ளது. இதையும் மீறி சில படகுகள் கடந்து சென்ற வண்ணம் உள்ளன.
கமுதியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பாரம்பரிய சிறுதானிய ஊட்டச்சத்து உணவு போட்டி நடந்தது. 53 ஊராட்சிகளை சேர்ந்த சுயஉதவி குழு பெண்கள் 200 சிறுதானிய உணவு வகைகள் தயாரித்து வைத்தனர். ஊராட்சி ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் தலைமை வகித்தார். உதவி திட்ட அலுவலர் அழகப்பன் முன்னிலை வகித்தார். நத்தம் ஊராட்சி குழு முதல் பரிசும், மண்டல மாணிக்கம் குழு 2-வதும், சடையனேந்தல் குழு 3-வது பரிசும் பெற்றன.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில்வே குடியிருப்பை சேர்ந்தவர் காளியம்மாள்(58). இவரது மகள் மணிமேகலை(34). இவர்கள் இருவரையும் 2021ல் இலங்கை அகதி சசிக்குமார்(38) என்பவர் நகைக்காக எரித்து கொலை செய்தார். இந்த வழக்கில் சசிக்குமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், உடந்தையாக இருந்த மற்றொரு அகதி சுப்பிரமணியத்திற்கு 3 ஆண்டு சிறையும் விதித்து ராமநாதபுரம் கோர்ட் நேற்று(செப்.,25) தீர்ப்பளித்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (செப்.25) சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா (Mini Textiles Park) அமைப்பது தொடர்பாக மாவட்ட ஜவுளி தொழில் முனைவோர்களுடன் விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது. மதுரை மண்டல துணி நூல் துணை இயக்குநர் திருவாசகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஜவுளி தொழில் முனைவோர்கள் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.