Ramanathapuram

News October 9, 2024

இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை

image

பரமக்குடியில் இன்று (அக்,09) சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரின் 100 வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் தமிழக அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், கயல்விழி செல்வராஜ் சட்டமன்ற உறுப்பினர்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன், எம்பி நவாஸ்கனி, மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

News October 9, 2024

நூலகத்தை மூட உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

image

ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் தாலுகா ஆனந்தூரில் 30 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வரும் நூலகம் பழுதடைந்து இடியும் தருவாயில் உள்ளது. ஊர் பொதுமக்கள் வழக்கறிஞர் ஆசிக் உதவியுடன் மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர். நூலகத்தின் புகைப்படங்களை பார்த்த நீதிபதிகள் நூலகத்தினை உடனடியாக மூடி புதிய நூலகம் கட்ட அல்லது புதுப்பிக்க மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்ய உத்தரவிட்டனர்.

News October 9, 2024

ராம்நாட்டில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று(அக்.09) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மதியம் 1 மணிக்குள் மிதமானது முதல் லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 8, 2024

மீனவர்களை விடுவிக்கும் போராட்டத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

image

இலங்கை சிறையில்வாடும் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பாம்பன் பகுதி 35 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குடும்பத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட போலீசார் தீக்குளிக்க முயன்ற பெண் மீது தண்ணீர் ஊற்றி தடுத்து அவரை காப்பற்றினார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

News October 8, 2024

கூட்டு பாலியல் வழக்கில் 5 பேர் ஸ்ரீவி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

image

பரமக்குடியில் 9 ஆம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில்அதிமுக நிர்வாகி சிகாமணி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் சிகாமணிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ஐகோர்ட் ரத்து செய்த நிலையில் சிகாமணி தொடர்ந்த மேல்முறையீட்டில் சுப்ரீம் கோர்ட்டும் ஜாமீனை ரத்தை உறுதி செய்தது. மேலும் 5 பேரும் அக்.25 அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜராக நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.

News October 8, 2024

மனைவியை சுத்தியலால் அடித்து கொண்ற கணவன்

image

ராமேசுவரம் ஏரகாடு பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவருக்கும் இவரது மனைவி தனலட்சுமிக்கும் இடையே நேற்று மதியம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் தர்மராஜ் சுத்தியலால் தனலட்சுமியின் தலையில் ஓங்கி அடித்த நிலையில் அவர் மயங்கினார். பின்னர் கல்லை தலையில் போட்டு கொலை செய்து வீட்டின் முன்பெகுழி தோண்டி புதைத்துள்ளார். போலீசார் தர்மராஜை கைது செய்தனர்.

News October 7, 2024

ராமேஸ்வரத்தில் துறைமுக காவல் நிலையம் திறப்பு

image

தமிழக அரசின் சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள துறைமுக காவல் நிலையத்தினை இன்று(அக்.7) இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் MLA காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் திறந்து வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,மாவட்ட ஆட்சி தலைவர்,மற்றும் கழக நிர்வாகிகள்அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் விழா ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

News October 7, 2024

உலகின் சிறந்த விஞ்ஞானி பட்டியலில் பாம்பன் பேராசிரியர்

image

அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் 2 சதவீதம் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தியது. அதில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனை சேர்ந்த மணி ராஜன் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் பேராசிரியர் பெயர் பட்டியலில் இடம் பெற்றது. இவர் ஆப்டிகல் பைபரை பயன்படுத்தி ஆரம்பத்திலேயை புற்று நோயை விரைவில் குணப்படுத்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

News October 7, 2024

பெண்களுக்கு 50% மானியத்தில் கோழி குஞ்சுகள்

image

ராமநாதபுரம் மாவட்ட கால்நடைத்துறை சார்பில் கிராமத்தில் ஏழை பெண்களில், கணவனை இழந்த பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளித்து ஒரு பயனாளிக்கு 40 கோழிக்குஞ்சுகள் வீதம் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. இதில், பயனடைய விரும்பும் பெண் பயனாளிகள் கால்நடை மருந்தகத்தில் விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

News October 6, 2024

இலங்கைக்கு கடத்த பதுக்கிய 320 கிலோ கஞ்சா பறிமுதல்

image

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே எம்.ஆர். பட்டிணம் கடற்கரை பகுதியில் சுங்கத் துறை கண்காணிப்பாளர் இப்ராஹிம், வேல் முருகன் மற்றும் அதிகாரிகள் ரோந்து சென்ற போது கடற்கரையில் இலங்கைக்கு கடத்தவிருந்த சுமார் 320 கிலோ எடை கொண்ட 10 கஞ்சா மூடைகளை பறிமுதல் செய்துள்ளனர். பதுக்கியவர்கள் யார் என போலீசார் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!