Ramanathapuram

News February 8, 2026

ராமநாதபுரம்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

ராமநாதபுரம் மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். SHARE

News February 8, 2026

ராமநாதபுரம்: ரூ.15,000 கோடி கடன் வழங்க இலக்கு

image

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வங்கியாளர்களுக்கான மாவட்ட ஆலோசனை குழு கூட்டத்தில் 2026 – 27 ஆம் ஆண்டின் முன்னுரிமை துறைகளுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையினை ஆட்சியர் வெளியிட்டார். அதன்படி நுண், சிறு மற்றும் குறு தொழில்களுக்கான கடன் ரூ.1,351 கோடி, பிற முன்னுரிமை துறைகளுக்கு ரூ.1,771 கோடி, வேளாண்மைக்கு ரூ.12,200 கோடி கடன் வழங்க மதிப்பிடப்பட்டுள்ளது.

News February 8, 2026

இராமநாதபுரம் மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (பிப்.07) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

News February 7, 2026

ராம்நாடு: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.

News February 7, 2026

இராம்நாடு: 15 லட்சம் தனிநபர் லோன் பெற விண்ணப்பியுங்க!

image

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பாக தனிநபர் கடன் ரூ.15 லட்சம் வரை பெறலாம். பிற்படுத்தபட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் 18 – 60 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டம் மூலம் கடன் பெறலாம். இங்கு<> க்ளிக் <<>>செய்து விண்ணபிக்கலாம். மேலும் தகவல்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவகத்தை அனுகவும். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News February 7, 2026

இராம்நாடு: அரசு அலுவலகத்தில் லஞ்சம் கேட்டால்..!

image

நில அளவை, பட்டா மாற்றம், வரி வசூல், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற நாம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய தேவை உள்ளது. இந்நிலையில் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் தங்கள் பணியை சரியாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால், இராம்நாடு மாவட்ட மக்கள் 04567-230036 or 94450-48893 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 7, 2026

இராம்நாடு: நிலம் வாங்குபவர்கள் கவனத்திற்கு

image

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. இராம்நாடு மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய இங்கே <>கிளிக்<<>> செய்து நிலத்தின் உரிமையாளரின் பெயர் அல்லது சர்வே நம்பர் கொடுத்து உடனே தெரிந்து கொள்ளலாம். SHARE IT

News February 7, 2026

இராம்நாடு: கெட்டுப்போன 55 கிலோ மீன்கள் அழிப்பு

image

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் மீன் மார்க்கெட் மற்றும் தனியார் மீன் பதப்படுத்தும் கம்பெனிகளில் நேற்று (பிப்.06) திடீர் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறையினர் விற்பனைக்காக மீன் மார்க்கெட் மற்றும் கம்பெனிகளில் வைக்கப்பட்டிருந்த 55 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அளித்தனர்.

News February 7, 2026

இராம்நாடு இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

image

மதுரை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த ராமநாதபுரம் மாவட்டம் கமுதி இளைஞர் கார்த்திக்(18), உடல் உறுப்புகள் 7 பேருக்கு பொருத்தப்பட்டன. பின்பு இளைஞரின் உடல் மதுரை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் குமரவேல், ஆர்.எம்.ஓ.,க்கள் சரவணன், முரளிதரன் தலைமையில் ஊழியர்கள் மரியாதை செலுத்தினர். பின்னர் உறவினர்களிடம் இளைஞரின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

News February 7, 2026

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில், இன்று (பிப்.06) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!