Ramanathapuram

News November 16, 2024

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்

image

இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தல் படி பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1,374 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் இன்று நடந்தது. இதன்படி சக்கரக்கோட்டை ஊராட்சி மேலச்சோத்தூரணி நூலக கட்டடம், வாணி, காரிக் கூட்டம் தொடக்கப்பள்ளி வளாகங்களில் நடந்த வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமை சக்கரக்கோட்டை ஊராட்சி தலைவர் யாழினி புஷ்பவள்ளி பார்வையிட்டார்.

News November 16, 2024

கூட்டு பாலியல் வழக்கில் சாட்சி விசாரணை

image

பரமக்குடியில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் நகராட்சி கவுன்சிலர் சிகாமணி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு ராமநாதபுரத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு (நவ.13) விசாரணைக்கு வந்தது. இதில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் நவ. 20 ல் சாட்சிகள் விசாரணை துவங்க நீதிபதி உத்தரவிட்டார்.

News November 16, 2024

பவர்ஸ்டார் சீனிவாசன் வழக்கு ஒத்திவைப்பு

image

தேவிபட்டினத்தைச் சேர்ந்த இறால் பண்ணை உரிமையாளர் முனியசாமியிடம் தொழில் விருத்திக்கு கடன் வாங்கி வருவதாக கூறி ரூ.15 லட்சம் செக் மோசடி செய்ததாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது செக் மோசடி வழக்கு இராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண் 1ல் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று அந்த வழக்கில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் ஆஜராகாத நிலையில் விசாரணையை ஜனவரி 24ம் தேதிக்கு நீதிபதி நிலவேஸ்வரன் ஒத்தி வைத்தார்.

News November 16, 2024

இராமநாதபுரத்தில் இன்று ரேஷன்கடை விடுமுறை

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடை பணியாளர்கள் அக்டோபர் 27ல் வேலை செய்தனர். அதற்கு ஈடாக விடுமுறை விடப்படும் என உணவுப்பொருள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்தது. அதன்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் வேலை நாளான இன்று(நவ.16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாதத்தின் மூன்றாவது ஞாயிறு என்பதால் நாளையும்(நவ.17) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News November 15, 2024

500 கிலோ காய்கறி அலங்காரத்தில் காட்சியளித்த முத்தாலம்மன்

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் காவல் தெய்வமான ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு இன்று அண்ணா அபிஷேக விழாவை முன்னிட்டு 500 கிலோ எடை கொண்ட காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன் பின்பு அம்மனுக்கு மகா தீபாரதனை கட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் காய்கறி அலங்காரத்தில் வீற்றிருந்த முத்தாலம்மனை வழங்கி சென்றனர்.

News November 15, 2024

நாளை வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1,374 வாக்குச் சாவடிகளிலும் நவ. 16,17, 23, 24 ல் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார். 2025 ஜன.1ல் 18 வயது நிரம்பியோர் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல் (https://www.nvsp.in) (அல்லது) கைபேசி செயலி மூலம் வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.

News November 15, 2024

மின்சாரம் தாக்கியதில் வாலிபர் உயிரிழப்பு

image

ராமேஸ்வரத்தில் நேற்று நடந்த திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கு வரவேற்பு பிளக்ஸ் போர்டு, கட்சி கொடி கட்டப்பட்டிருந்தன. விழா முடிந்து இரவு வரை அகற்றப்படாமல் இருந்த கட்சி கொடி அருகே நேற்றிரவு நிறுத்திய சரக்கு வாகன கதவை மீன் கம்பெனி பணியாளர் கோபி கிருஷ்ணன் (27) திறந்து கீழே இறங்கினார். கதவு கொடி கம்பத்தை உரசி அருகிலிருந்த டிரான்ஸ்பார்மர் விழுந்தபோது கோபி கிருஷ்ணன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

News November 15, 2024

இராமநாதபுரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று(நவ.15) 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை 10 மணிக்குள் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 14, 2024

தொழில் கடன் பெறுவர்களுக்கான சிறப்பு முகாம்

image

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் பரமக்குடி மக்கள், வியாபாரிகளுக்கு உணவு மதிப்பு கூட்டுதல் தொடர்பான தொழில் தொடங்க, தொழில் விரிவுபடுத்த 35 சதவீதம் அரசு மானியத்துடன் கூடிய pmfme திட்டத்தில் 1 லட்சம் முதல் 30 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கான சிறப்பு முகாம் நாளை(15.11.24) பரமக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது என மாவட்ட வள அலுவலர் தெரிவித்துள்ளார்

News November 14, 2024

ராமநாதபுரம்: 66 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை குழந்தை திருமணம் தொடர்பாக 90 தொலைபேசி புகார்கள் வந்துள்ளன. உடனடி நடவடிக்கையின் அடிப்படையில் 66 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 18 திருமணங்கள் நடந்து முடிந்த பின்னர் தகவல் கிடைத்ததால் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்ததாக 9 குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!