Ramanathapuram

News November 19, 2024

தமிழக ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை இயக்குனர் வருகை

image

ஆறாவது நிதிக்குழுத் தலைவர் அர்விந்த் பனகாரியா தலைமையிலான குழு ராமநாதபுரம் நகர் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து நாளை ஆய்வு செய்ய உள்ளனர். இக்குழுவினருடன் இணைந்து ஆய்வு செய்ய தமிழக ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை இயக்குனர் பொன்னையா இன்று ராமநாதபுரம் வந்தார். அவரை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் சந்தித்தனர். கூடுதல் இயக்குனர் சுமதி, கூடுதல் ஆட்சியர் வீர் பிரதாப் சிங் உடனிருந்தனர்.

News November 19, 2024

ஆறாவது நிதிக்குழுவினரின் பயணத்திட்டம்

image

நாட்டின் 6 ஆவது நிதிக் குழுத்தலைவர் அர்விந்த் பனகாரியா தலைமையில் குழுவினர் நாளை (நவ.20) ராமநாதபுரம் வருகின்றனர். இக்குழுவினர் இன்றிரவு 7 மணியளவில் ராமநாத சுவாமியை தரிசனம் செய்கின்றனர். நாளை காலை 6 – 8 மணி வரை தனுஷ்கோடி செல்கின்றனர். 10:15 – 11:15 மணி வரை ராமநாதபுரம் நகராட்சி வளர்ச்சி திட்டப்பணிகள், மதியம் 12:45 மணியளவில் கீழடி அகழாய்வு பணிகளை ஆய்வு செய்ய உள்ளனர்.

News November 19, 2024

ரூ.10.20 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

image

கூட்டுறவுத்துறை சார்பில், 71 ஆவது கூட்டுறவு வார விழா இன்று(நவ.19) ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது. இதில் ரூ.10.20 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார். எம்எல்ஏக்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன், ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம் இணைப்பதிவாளர் ஜினு உள்பட பலர் பங்கேற்றனர்.

News November 19, 2024

இராமநாதபுரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று(நவ.,19) 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால் இராமநாதபுரம் மாவட்ட மக்கள் முன்னேற்பாடு செய்து கொள்வது நல்லது. SHARE IT.

News November 19, 2024

பயிர் காப்பீட்டு திட்டம் குறித்து கலெக்டர் தகவல்

image

இராமநாதபுரம் 1ன் கீழ் கமுதி, கடலாடி, முதுகுளத்தூர், பரமக்குடி, சத்திரக்குடி ஆகிய வட்டாரங்களுக்கு எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லி.,நிறுவனம், 2-ன் கீழ் இராமநாதபுரம், திருப்புல்லானி, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடாணை, நயினார்கோவில், மண்டபம் ஆகிய வட்டாரங்களுக்கு பஜாஜ் அலையன்ஸ் பொது காப்பீட்டு நிறுவனத்திற்கும் அரசாணை வழங்கி பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

News November 19, 2024

இராமநாதபுரத்தில் இன்று அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சி

image

இராமநாதபுரத்தில் இன்று (நவ.19) தமிழக பால் வளத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரிய துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பரக்கத் திருமண மஹாலில் காலை 10 மணியளவில் 71வது அனைத்திந்திய கூட்டுறவு சங்க வார விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

News November 19, 2024

தனுஷ்கோடி ரோடு கடைகளால் ஆக்கிரமிப்பு

image

தனுஷ்கோடிக்கு தினமும் ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு சுற்றுலாப் பயணிகளுக்காக 20 மீனவ பெண்கள் பழங்கள் விற்றனர். காலப்போக்கில் இவர்களுக்கு போட்டியாக 120க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு ரோட்டோரங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகமாயுள்ளது. மேலும் உணவு கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில், பாலிதீன் பைகள் தனுஷ்கோடி கடலோரம் வீசப்படுவதால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

News November 18, 2024

இராமநாதபுரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம் 

image

இன்று (நவ.18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ள அட்டவணையை இராமநாதபுரம் காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேரங்களில் மக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் இதில் குறிப்பிட்டுள்ள எண்கள் அல்லது 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 18, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நவ.22 அன்று காலை 10.30 மணியளவில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளும் விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட பொருள்களை விவாதிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 18, 2024

வைகை ஆற்றுக்குள் இருந்து பெண்ணின் உடல் மீட்பு

image

ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் பகுதியைச்சேர்ந்த காளீஸ்வரி என்பவர் பரமக்குடி ஜீவா நகரில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி தைராய்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று(நவ.17) இரவு மர்மமான முறையில் தரைப்பாலம் வைகை ஆற்றில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்த தகவலின் பேரில் எமனேஸ்வரம் போலீசார்கள் காளீஸ்வரியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!