India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(அக்.21) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் வீடுகளில் தனிநபர் நூலகம் அமைத்து பராமரிப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு விருந்துக்கு விண்ணப்பிக்களம் என இராமநாதபுரம் மாவட்ட நூலக அலுவலர் பாலசரஸ்வதி தெரிவித்துள்ளார். இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தனிநபர் நூலகம் வைத்திருப்போர் dloramnad@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட நூலக அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
ராமநாதபுரம் அருகே களத்தாவூர் பகுதியை சேர்ந்தவர் பாலு மகன் இளையராஜா(36). ராமநாதபுரம் மின்வாரிய வடக்கு பிரிவில் கேங்மேன் பணியாற்றி வரும் இவர் சூரங்கோட்டை சேர்ந்த 22 வயது மனநிலை பாதிக்கப்பட்ட வாய் பேச முடியாத பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். அக்கம் பக்கத்தினர் அவரை மடக்கி பிடித்து அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் இளையராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இன்று இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை டி.எஸ்.பி இளஞ்செழியன் தலைமையில் காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
பரமக்குடி அருகே மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று கோவையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த காரும், ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடி நோக்கி வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதின. இதில், பரமக்குடியைச் சேர்ந்த நாகராஜன், சந்தோஷ் ஆகிய இளைஞர்கள் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் நாளை காலை 8.30 வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 65% கூடுதலாக பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த 18 முதல் 60 வயதுக்கு மிகாதோரை வாரிய உறுப்பினராக சேர்த்தல், புதுப்பித்தல் & நலத்திட்ட உதவி கோரும் மனு பெறும் முகாம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்நாள் அக்.24 காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை அரங்கில் நடைபெற உள்ளது. உரிய தகுதியுடைய சீர்மரபினர் இனத்தை சார்ந்தோர் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளராக ஏனாதியை சேர்ந்த வெற்றிமுருகன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். நியமனம் செய்த முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கும் பரிந்துரை செய்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் மாவட்ட செயலாளர் தர்மருக்கும் நன்றி தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2024-25ஆம் ஆண்டு ராபி பருவ தோட்டக்கலை பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி வெங்காயம், கொத்தமல்லி பயிர்களுக்கு 17.01.2025, வாழை பயிருக்கு 28.02.2025, மிளகாய் பயிருக்கு 31.01.2025 வரை காப்பீடு பிரீமியம் தொகை செலுத்தி பதிவு செய்து பயன் பெறலாம் என ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு கமுதியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் டிஎஸ்பி இளஞ்செழியன் கூறியதவது; அக்.30ல் தேவர் ஜெயந்தி குருபூஜை, அரசு விழாக்களில் போலீஸ் அறிவிப்புகளை மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி அச்சுறுத்தும் வகையில் டூவிலரில் வருபவர்களை பிடித்து வழக்குப்பதிந்து வாகனங்களை பறிமுதல் செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
Sorry, no posts matched your criteria.