Pudukkottai

News September 3, 2024

ஆதனக்கோட்டையில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு

image

ஆதனக்கோட்டை அடுத்த வண்ணாரபட்டியை சேர்ந்த வீராச்சாமி என்பவர் இன்று தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அங்கு வந்த ஓசுகப்பட்டி முத்துசாமி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த வீராச்சாமி ரத்த வெள்ளத்தில் அலறியுள்ளார். பின்னர் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News September 3, 2024

புதுக்கோட்டை முன்னாள் அமைச்சர் கடும் கண்டனம்

image

அருப்புக்கோட்டையில் போராட்டத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை கண்காணிப்பாளர் காயத்ரியை போராட்டககாரர்கள் தலை முடியை இழுத்து தாக்க முயன்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. உடனடியாக, சம்பந்தப்பட்டவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுப்பதோடு, இதுபோன்று இனி எங்கும் நிகழாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது X வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

News September 3, 2024

புதுக்கோட்டை கலெக்டர் அறிவிப்பு

image

நவராத்திரி கொலு பண்டிகையை முன்னிட்டு வரும் 21ஆம் தேதி முதல் அடுத்த மாதம் ஆறாம் தேதி வரை சென்னையில் கண்காட்சி நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினர் தயாரிக்கும் மெட்டி பனைவெல்லம் மண் பாண்ட பொம்மைகள் உள்ளிட்ட பொருட்கள் ஆகியவை கண்காட்சியில் இடம்பெற
https://exhibition.mathibazaar.com/login என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

News September 3, 2024

புதுகை: பெண்ணின் முகத்தில் சூடான குழம்பு

image

ஆலங்குடி அருகே
தோப்புப்பட்டியை சேர்ந்தவர்
ஆனந்தி (38). இவரது
உறவினர் கருப்பையா (50). இருவருக்கும் இடையே சொத்து பிரச்னையில் வாக்குவாதம் ஏற்பட்டபோது மது போதையில் இருந்த கருப்பையா அடுப்பில் வைத்திருந்த சூடான குழம்பை எடுத்து ஆனந்தி முகத்தில் ஊற்றினார்
இதில், படுகாயமடைந்த ஆனந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News September 3, 2024

புதுக்கோட்டையில் 5 இளம்பெண்கள் மாயம்

image

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அகல்யா (25) என்ற பெண் கடந்த 1ஆம் வீட்டில் இருந்து கடைக்கு சென்றவர் மாயமானார். இதுவரை வீடு திரும்பவில்லை. அதேபோன்று, புதுகை மாநகரில் செவிலியர் வைஷ்ணவி (19), சத்தியா (22), என்ற இளம்பெண், வெள்ளாளவிடுதியை சேர்ந்த சண்முகப்பிரியா (23), விராலிமலையை சேர்ந்த பிரேமா (20), ஆகியோர் நேற்று மாயமாகினர். ஒரே நாளில் 4 பேர் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News September 3, 2024

13 வயது சிறுமி மாயம்

image

தேக்காட்டூர் கிராமத்தில் இலங்கை மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் சந்திரகுமார் (41). இவரது மகள் 13 வயது சிறுமி லெம்பலக்குடி அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து நமணசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர். 

News September 2, 2024

புதுக்கோட்டை பொதுமக்களை சந்தித்த எம்.பி.

image

புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் இன்று திமுக அயலக அணிச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான எம்.எம்.அப்துல்லா, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திமுக நிர்வாகிகளையும், பொதுமக்களையும் சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார். இந்த நிகழ்வின் போது ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

News September 2, 2024

அமைச்சர் ரகுபதி சுற்று பயண விபரம்

image

பொன்னமராவதி வட்டம், அரசமலை கூட்டுறவு கடன் சங்கத்தின் புதிய அங்காடி கிளையினை அமைச்சர் ரகுபதி நாளை காலை 9மணி அளவில் காரையூரில் திறந்து வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில், பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாவிற்கான ஆணைகளை வழங்க உள்ளார்.

News September 2, 2024

விநாயகர் சதுர்த்தி விழா குறித்த முன்னேற்பாடு கூட்டம்

image

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு சட்டம், ஒழுங்கு பராமரிப்பு தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ரம்யாதேவி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News September 2, 2024

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்கு பொதுமக்கள் இன்று குவிந்துள்ளனர். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று இலவச வீட்டு மனை பட்டா மற்றும் உடல் ஊனமுற்றோர் தங்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் இட பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு மாவட்ட ஆட்சியர் அருணாவிடம் மனு அளித்தனர்.

error: Content is protected !!