India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டு போட்டியில் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் அருணா நேற்று அழைப்பு விடுத்துள்ளார். இப்போட்டி தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு இணையாக நடைபெறுகிறது. எனவே இதில் அதிக அளவு வீரர்கள் கலந்து கொள்ள வேண்டும். மேலும் தொடர்புக்கு புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் 74017 03498 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார். SHAREIT
தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் நடக்கும் பல்வேரு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதில் திருவரங்குளம் தனியார் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் மற்றும் கீழாத்தூரில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் 1000 கல்வி உதவித்தொகை வழங்கும் “தமிழ் புதல்வன்” திட்டத்தை துவங்கி வைக்கிறார். ஷேர் செய்யவும்
திருச்சி முன்னாள் காங்கிரஸ் கட்சி எம் பி முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவரும் முன்னாள் மத்திய மாநில அமைச்சருமான திருநாவுக்கரசர் வருகின்ற 10ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். அது குறித்த நிகழ்ச்சியின் அறிவிப்பை காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிட்டுள்ளனர். புதுக்கோட்டை நகரப் பகுதி மற்றும் பல்வேறு இடங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.
சிவபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ் புதல்வன் திட்டத்தினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று துவக்கி வைக்க உள்ளார். இதில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மாணவர்களின் பெற்றோர்கள் அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுதில்லி ககோரி எதிர்ப்பின் நூற்றாண்டு தொடக்க விழாவில் சுகாதார பாதுகாப்பு குழந்தைகள் பாதுகாப்பு பேரிட நிவாரணம போன்றவற்றில் 10 ஆண்டுகளாக மக்கள் சேவை பாராட்டி தென்னிந்தியருக்கான சிறப்பு விருதினை மத்திய அமைச்சர்கள் முன்னால் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் புதுக்கோட்டை Dr.R G ஆனந்துக்கு வழங்கினர்
ஆலங்குடியில் நாளை தமிழ் புதல்வன் திட்டத்தினை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைக்கிறார். கீழாத்தூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். பின்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், மாணவர்களின், பெற்றோர்கள் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை பி. ஆர் ஓ அலுவலகம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் – 2024 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்பதற்கான முன்பதிவை https://sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரும் 25-ஆம் தேதிக்குள் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்கள் அனைவரும் தவறாமல் பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் இந்திய அரசியலமைப்பு சங்கம் (Constitution Club of India -New delhi )ல் நடைபெற்ற சிறந்த ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான விருது வழங்கும் விழாவில்,
பஞ்சாயத் ராஜ் அமைச்சர் S.P. சிங் பாகேல் அவர்களிடம் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்கான விருதை ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர்பெற்றுக் கொண்டார்.
தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 34 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி புதுக்கோட்டையில் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டங்களிலும், ஆகஸ்ட் 2024-ஆம் மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை வரும் 10-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை குடும்ப அட்டைகள், நியாய விலைக்கடை தொடர்பான குறைகள் தீர்க்கும் முகாம் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் தொடர்புடைய தனி வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர்கள், முன்னிலையில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.