Pudukkottai

News August 12, 2024

மாற்றுத்திறனாளிகளின் மனுக்களுக்கு உடனடி தீர்வு

image

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். மேலும் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் பொறுப்பு ரம்யா தனித்துணை ஆட்சியர் சோபா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News August 12, 2024

ரூ.14.24 லட்சம் நிதி வழங்கிய மாணவர்கள்

image

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு புதுக்கோட்டை எஸ்எம்எஸ் பள்ளி மாணவ, மாணவிகள் ரூ.14.24 லட்சம் நிவாரண தொகையை மாவட்ட ஆட்சியர் அருணாவிடம் வழங்கினர். மாவட்ட ஆட்சியர் அருணா மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர், இவர்களை போல் அனைவரும் உதவி செய்ய வேண்டும் என ஆட்சியர் அருணா கேட்டுக்கொண்டார்.

News August 12, 2024

உதயமானது புதுக்கோட்டை மாநகராட்சி

image

புதுக்கோட்டை நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான உத்தரவு ஆணையை முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் வெளியிட்டார். புதுகை நகராட்சியுடன் 11 ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பெருநகரங்களுக்கு இணையான சாலை, குடிநீர், பாதாள சாக்கடை வசதிகளை செய்ய மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News August 12, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த பகுதியில் மின்தடை

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தாமலை, வெள்ளனூர், விராலிமலை உள்ளிட்ட மின்கோட்ட பகுதிகளில் நாளை (ஆக.13) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், புதுநகர், வெள்ளனூர், கிளியூர், மேலூர், நக்கீரர்வயல், இரும்பாளி, விராலிமலை, விளத்துப்பட்டி, உப்பிலிகுடி, காவேரி நகர் ,சத்தியமங்கலம் உள்ளிட்ட பிற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 12, 2024

மாநகராட்சியாக உதயமாகும் புதுக்கோட்டை

image

தமிழகத்தில் புதிதாக மேலும் 4 மாநகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு, அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக புதுக்கோட்டை மாவட்டத்தை மாநகராட்சியாக அறிவிக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி துணை ஆணையர் நாராயணன், புதுக்கோட்டை மாநகராட்சியின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News August 11, 2024

புதுக்கோட்டையில் மக்களுடன் முதல்வர் முகாம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” முகாம் வரும் 13ஆம் தேதி அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், மதியநல்லூர் சமுதாயக் கூடத்தில், கோதண்டராமபுரம், பெருமாநாடு, புதூர், சித்தன்னவாசல், பனம்பட்டி, மதியநல்லூர், ஆரியூர், திருவேங்கைவாசல் ஆகிய ஊராட்சிகளுக்கும் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News August 10, 2024

HCL நிறுவனத்தில் வேலை

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக 2022-2023 மற்றும் 2023-2024 ஆம் ஆண்டுகளில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு படித்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

News August 10, 2024

அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட 32 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, புதுகை, பொன்னமராவதி, அன்னவாசல், ஆலங்குடி, அறந்தாங்கி, விராலிமலை உள்ளிட்ட சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 10, 2024

புதுக்கோட்டையில் தேசியக்கொடி விற்பனை தொடக்கம்

image

புதுக்கோட்டை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவிக்கையில், 78வது சுதந்திரத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்படும் என்றும், இதன் விலை ₹25 ஆகும். மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களில் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

News August 10, 2024

புதுக்கோட்டையில் கல்வி கடன் முகாம்

image

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கிகள் இணைந்து வருகின்ற 17ஆம் தேதி காலை 11 மணியளவில் மாமன்னர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெறுகிறது. இது குறித்த அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. இந்த கல்விக் கடன் முகாமில் 15க்கும் மேற்பட்ட வங்கிகள் கலந்து கொள்கின்றன. இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!