Pudukkottai

News August 17, 2024

புதுக்கோட்டை மீனவர்கள் விடுவிப்பு

image

ஜூலை 1ஆம் தேதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று அவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்கள் நேற்று இரவு சென்னைக்கு விமான நிலையம் வந்து அங்கிருந்து பேருந்து மூலம் புதுக்கோட்டைக்கு வந்தனர். இதனால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஷேர் செய்யவும்

News August 17, 2024

புதுகை பயணிகளுக்கு GOOD NEWS

image

புதுக்கோட்டை ரயில்வே துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் திருநெல்வேலியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் திருநெல்வேலி – பட்னா சிறப்பு ரயிலில் உள்ள முன்பதிவுகளை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவித்துள்ளனர். இந்த ரயிலானது இன்று இரவு இரவு 09:45 மணிக்கு திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். இந்த செய்தியை திருநெல்வேலியில் வசிக்கும் புதுக்கோட்டை மக்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News August 17, 2024

ராகுல் காந்தி சந்தித்த புதுக்கோட்டை முன்னாள் எம்பி

image

புதுக்கோட்டை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சி முன்னாள் மாநில தலைவரும், திருச்சி காங்கிரஸ் கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் இல்ல திருமண விழாவை முன்னிட்டு டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தியை சந்தித்து தனது இல்ல திருமண அழைப்பிதழை வழங்கினார்.

News August 16, 2024

புதுக்கோட்டையில் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

image

புதுக்கோட்டையில் நாளை காலை 8 மணிக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1 மணி நேரம் புறநோயாளிகள் பிரிவு புறக்கணிப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொல்கத்தா பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து படுகொலை செய்ததை கண்டித்து நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.

News August 16, 2024

விளையாட்டுப் போட்டிக்கான ஆலோசனைக் கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அருணா தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட இளைஞர் நலன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு குழு, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பள்ளி, கல்லூரி, பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளாக விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது.

News August 16, 2024

மாநில இளைஞர் விருது: கலெக்டர் பாராட்டு

image

தமிழ்நாடு முதலமைச்சரால் 78வது சுதந்திர தினத்தன்று சமூக நல தன்னார்வலர் விருது கவின் பாரதிக்கு வழங்கப்பட்டது. இதில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதினை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா, இன்று நேரில் காண்பித்து வாழ்த்து பெற்றார். இதில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

News August 16, 2024

புதுகை மாவட்டத்தில் 572 துப்பாக்கிகள்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் விலங்குகளை விரட்டுவதற்கு உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையாளர்கள் ஆட்சியர் அலுவலக சி பிரிவு அலுவலகத்திற்கு பரிசோதனைக்காக எடுத்து வந்தனர். இந்த பரிசோதனை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும். புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 572 துப்பாக்கிகள் உரிமம் பெற்று வைத்துள்ளனர்.

News August 16, 2024

515 கணேசனுக்கு எளியோர் நண்பன் விருது

image

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த சமூக ஆர்வலரும் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வரும் 515 கணேசன் என்பவருக்கு தனியார் தொலைக்காட்சி சார்பில் எளியோர் நண்பன் என்ற விருது வழங்கப்பட்டது. புதுக்கோட்டையை சேர்ந்த 515 கணேசன் என்பவர் அனாதை சடலங்களை தன்னுடைய சொந்த வாகனத்தில் எடுத்து அடக்கம் செய்து பல்வேறு சமூக சேவைகளை செய்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News August 16, 2024

புதுக்கோட்டை அருகே இளம்பெண் மர்ம மரணம்

image

கீரனூர் அருகே ஒள்ளத்துப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி (38) – போதும்பொண்ணு (28) தம்பதி. நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், போதும்பொண்ணு வீட்டில் மயங்கி கிடந்ததாக தெரிகிறது. மயங்கி கிடந்தவரை அவரது பெற்றோர் வந்து எழுப்பிய போது, காதில் ரத்தம் வழிந்து, வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

News August 16, 2024

புதுக்கோட்டை கலெக்டர் வேதனை

image

புதுக்கோட்டை மாவட்டம் பூங்குடி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் அருணா நேற்று கலந்து கொண்டாா். அப்போது, பேசிய அவர், “புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தைகளை கருவிலேயே அழிக்கும் செயல் அதிகமாக உள்ளது” என வேதனையுடன் தெரிவித்தார். மேலும், “இதுபோன்ற சட்டவிரோத செயல்களை யாரும் செய்ய வேண்டாம். பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும் கல்வியை கொடுத்தால் உயர்வார்கள்” என்றார்.

error: Content is protected !!