Pudukkottai

News August 20, 2024

தபால் துறையில் உத்தேச பட்டியல் வெளியீடு

image

நாடு முழுவதும் தபால் துறையில் 44,228 காலிப்பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, புதுகை மாவட்டத்தில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர், கிராமின் டாக் சேவக் ஆகிய 120 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியானது. முழு விவரங்களை https://indiapostgdsonline.gov.in/# என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

News August 20, 2024

சிபிசிஐடி போலீசாருக்கு ஒரு மாத கால அவகாசம்

image

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்கு தொட்டியில் மனித கழிவுகள் கலந்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய ஒரு மாத கால அவகாசம் கேட்டு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிபிசிஐடி போலீசாருக்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

News August 19, 2024

ஈ.பி.எஸ் உடன் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

image

சென்னையில் இன்று நடைபெற்ற லண்டன் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையின் கல்லீரல் அறுவை சிகிச்சை பேராசிரியர் டாக்டர். முகமது ரேலாவின் இல்லத் திருமண நிகழ்வில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். அவருடன் புதுக்கோட்டை அதிமுக மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

News August 19, 2024

சிறுபாண்மை பெண்களுக்கு நிதியுதவி

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (19.08.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில், இஸ்லாமிய பெண்களுக்கு சிறுதொழில் தொடங்கும் வகையில் நிதி உதவித்தொகைக்கான காசோலைகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இன்று வழங்கினார். உடன், மாவட்ட வருவாய் (பொ) தாஸூகி ஆர்.ரம்யாதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News August 19, 2024

புதுகை அருகே விபத்து – இருவர் படுகாயம்

image

ஆலம்பட்டியை சேர்ந்தவர் சிவந்தி (29). இவரது மகன் ஸ்ரீதரன் (4). இருவரும் இன்று காலை மோட்டார் சைக்கிளில் இலுப்பூர் புறவழிச்சாலையில் சென்ற போது அவ்வழியாக வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு, தந்தை, மகன் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கீழக்குறிச்சியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

News August 19, 2024

புதுக்கோட்டை: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

image

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலை சேர்ந்தவர் செல்வராஜூ. இவர், தனது உறவினர் இறந்த நிலையில், 16ஆம் நாள் காரியத்திற்காக விராலிமலை சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 2 சிறுமிகளுக்கு செல்வராஜ் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சிறுமிகளின் பெற்றோர் புகார் அளித்த நிலையில், இலுப்பூர் மகளீர் போலீசார் செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.

News August 18, 2024

மக்களுடன் முதல்வர் முகாம்: ஆட்சியர் அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில், ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி கரம்பக்குடி ஊராட்சி மருதகோன் விடுதியிலும், விராலிமலை ஒன்றியத்தில் விளாப்பட்டி கிராமத்திலும், அன்னவாசல் ஒன்றியத்தில் முக்கண்ணாமலைப்பட்டி கிராமத்திலும் நடைபெற உள்ளது. இதில் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

News August 18, 2024

புதுகை காவல்துறைக்கு அறிவுறுத்தல்

image

புதுக்கோட்டை மாவட்ட காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றறிக்கை விடுத்துள்ளார். இதில், வேற்று மத வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அருகில் சிலை வைக்க கூடாது. விநாயகர் சிலைகளை சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் வேதிப்பொருட்களை கொண்டுசெய்யக் கூடாது. பிறமதத்திற்கு எதிராக முழக்கமிடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.

News August 18, 2024

புதுகை மண்டலத்தில் ரூ.14.27 கோடி வருவாய்

image

தமிழ்நாடு போக்குவரத்து கழக புதுகை மண்டல அலுவலகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் இரா.பொன்முடி செயல் திறன் மிக்க ஓட்நனர், நடத்துனர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, ‘புதுகை மண்டலத்தில் முதல்வரின் விடியல் பயணம் தினசரி சராசரியாக 1.02 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப் படுகின்றன. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் புதுகை மண்டலம் ரூ 14.27 கோடி வருவாய் ஈட்டியுள்ளது” என்றார் பொன்முடி.

News August 17, 2024

புதுக்கோட்டையில் டிஎஸ்பிகள் பணியிட மாற்றம்

image

தமிழ்நாடு முழுவதும் 33 டிஎஸ்பிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி டிஎஸ்பி ஆக இருந்த பால்ராஜ் திண்டுக்கல் மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணைய டிஎஸ்பியாகவும், புதுக்கோட்டை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கத்துறை டிஎஸ்பியாக இருந்த செந்தில் இளைஞரணி மதுரை சிவில் சப்ளை டிஎஸ்பி ஆகவும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!