Pudukkottai

News August 24, 2024

அறந்தாங்கி அருகே ஆம்லெட் கேட்டு ஆண் கொலை

image

அறந்தாங்கி அடுத்த வல்லவாரி கிராமத்தில் உள்ள ஹோட்டலில் இன்று சாப்பிட்டுக் கொண்டிருந்த 5க்கும் மேற்பட்ட நபர்கள் ஆம்லெட் கேட்டுள்ளனர். அவர்கள் கேட்ட நேரத்திற்குள் ஆம்லெட் வராததால் ஹோட்டல் உரிமையாளரிடம் சண்டை அடித்துள்ளனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் ‘ஏயா, இப்படி சண்டை போடுகிறீர்கள்’ என்று கேட்டுவிட்டு வந்து சமாதானம் செய்தனர். இதில் சமாதானம் செய்ய வந்த நபர் ஒருவரை தாக்கி அவர்கள் கொலை செய்துள்ளனர்.

News August 24, 2024

புதுக்கோட்டை அமைச்சர் பங்கேற்பு

image

சென்னை மாமல்லபுரத்தில் மார்ட்டின் குரூப் மற்றும் ஸ்போஸ் ஷோன் இந்தியா இணைந்து நடத்திய மிஷின் ரூமி 2024 சாட்டிலைட் லாஞ்சிங் நிகழ்ச்சி கலந்து கொண்ட சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மிஷின் வடிவமைப்பாளர்களை பாராட்டி வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் சாட்டிலைட் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட விஞ்ஞானிகள் பலர் கலந்து கொண்டனர்.

News August 24, 2024

பெண்கள் இனி அச்சமடைய தேவையில்லை

image

திருமயத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக இருக்கும் எந்தப் பெண்ணும் வீட்டுக்குச் செல்ல வாகனம் கிடைக்காமல் போனால், காவல்துறை உதவி எண்களை (1091 மற்றும் 7837018555) தொடர்பு கொண்டு வாகனம் கோரலாம் என்ற இலவசப் பயணத் திட்டத்தை காவல்துறை தொடங்கியுள்ளது. அவர்கள் 24×7 மணிநேரமும் வேலை செய்வார்கள் என்று திருமயம் காவல்துறையினர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

News August 24, 2024

தங்க நாணயம் வழங்கிய அமைச்சர்

image

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலன் சார்பில், திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு தங்க நாணயத்தை சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி இன்று வழங்கினார். இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, மாநகர மேயர் திலகவதி செந்தில், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி தமிழ்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.

News August 24, 2024

சண்டையை தடுக்க சென்றவர் அடித்துக் கொலை

image

அறந்தாங்கியை அடுத்த ஆயிங்குடி மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (24). இவர் நேற்று இரவு வல்லவாரி பகுதியில் நடந்து சென்றபோது, அப்பகுதியில் இருந்த ஓட்டலில் சாப்பிட வந்த சிலர் ஹோட்டல் பணியாளர்களிடம் தகராறு ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை பிரபு சமாதானம் செய்த போது மணமேல்குடியைச் சேர்ந்த ஜான் மற்றும் டேவிட் ஆகியோர் பிரபுவை கல்லால் அடித்ததில் பிரபு உயிரிழந்தார்.

News August 24, 2024

தஞ்சை விரைந்த கந்தர்வகோட்டை எம்எல்ஏ

image

கந்தர்வகோட்டை அருகே மஞ்சப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சமயபுரம் பாதயாத்திரை சென்ற போது விபத்தில் சிக்கினர். இதில், 16 பெண்கள் மற்றும் 6 ஆண்கள் உள்பட 22 படுகாயமடைந்தனர். இதில், கவிதா, சின்னாத்தாள், மாலா, இளஞ்சியம் ஆகிய 4 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இந்நிலையில், கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ சின்னதுரை மருத்துவமனையில் உள்ளவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளாார்.

News August 24, 2024

பாதயாத்திரை சென்ற 22 பேர் படுகாயம்

image

கந்தர்வகோட்டை அருகே மஞ்சப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த 22 பேர் சமயபுரம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றனர். நேற்று நள்ளிரவில் வளம்பக்குடி வழியாக சென்றபோது, தஞ்சையில் இருந்து வந்த மினி வேன் ஒன்று மோதி தூக்கிவீசப்பட்ட நிலையில், 22 பேரும் பலத்த காயமடைந்தனர். இதில், 6 பேர் கவலைக்கிடமான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News August 24, 2024

புதுகையில் 6½ லட்சம் பேருக்கு குடற்புழு மாத்திரை

image

புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க மருந்து வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. முதல் சுற்றில் 1-19 வயதுடைய 5,04,840 மாத்திரைகளும், 20 முதல் 30 வயதுடைய மகளிருக்கு 1,32,271 மாத்திரைகளும் வழங்கப்பட்டுள்ளது. 2வது கட்டமாக வரும் 30ஆம் தேதி குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. மொத்தமாக 6,51,681 பேருக்கு மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது.

News August 23, 2024

அறந்தாங்கிக்கு இந்திய ராணுவம் வருகை

image

அறந்தாங்கியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லுரிக்கு மேற்கு வங்கத்தில் உள்ள ராணுவ வீரர்கள் இன்று வருகை புரிந்தனர். இதில் மாணவர்கள், இளைஞர்கள், பொறியியல் பட்டதாரிகள் ராணுவத்தில் பணிபுரிவதற்கு எண்ணற்ற வேலை வாய்ப்பு பற்றியும், அப்பணியில் பணி புரிவதற்கு பயிற்சி ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. மேலும் மாணவர்களை ராணுவத்தினர் பாராட்டினர்.

News August 23, 2024

திருமயத்தில் பாஜக மாநில செயலாளர் சுவாமி தரிசனம்

image

தமிழக பாரதிய ஜனதாவின் மாநில செயலாளர் வினோத்செல்வம் இன்று திருமயம் வருகை புரிந்தார். அவரை மாவட்ட தலைவர் ஜெகதீசன், மண்டல தலைவர் கண்ணனூர் முருகேசன், ஆதவா செல்வகுமார், மாவட்ட செயலர் ஆறுமுகம் உட்பட நிர்வாகிகள் வரவேற்றனர். பிறகு அவர் திருமயம் சிவன், பெருமாள் குடைவரை கோயில்கள், கோட்டை காலபைரவர் கோயில் ஆகியவற்றுக்கு சென்று வழிபாடு செய்தார். பிறகு அவர் ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றார்.

error: Content is protected !!