India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி வரும் 9ஆம் தேதி புதன்கிழமை மற்றும் 15-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாட்களில் புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் நடைபெற உள்ளது. எனவே மாணவர்கள் பங்கு பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அருணா தகவல் தெரிவித்துள்ளார்.
கந்தர்வகோட்டை பகுதியில் தனியாருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் சலூன் கடை நடத்துபவர் மிதுன். இவர் நேற்று காலை அங்குள்ள கழிவறையில் ரகசிய கேமராவை பொருத்தி ஆபாச படங்கள் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வணிக வளாகத்தில் உரிமையாளர் நேற்று மாலை அளித்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மிதுனை கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
புதுகை மாவட்டத்தில் 1950க்கு முன் 26 வகையான நெல் வகைகள் பயிரிடப்பட்டது. கருடன் சம்பா, ராமன் சம்பா, காரையூர் சம்பா, ராகாபும் சம்பா, பாகன் சம்பா, நெல்லூர் சம்பா, ரெங்கமன்னார், புளூதிசம்பா, மூங்கில் சம்பா, ஈக்கி சம்பா, மிளகு சம்பா, கார்த்திகை சம்பா, சீராக சம்பா, முத்து வெள்ளை, பாவமணியன் உள்ளிட்ட 26 வகையான நெல்மணிகள் பயிரிடப்பட்டுள்ளது. இவை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள வாய்க்காலில் ஒருவர் இறந்த நிலையில் கிடைப்பதை பார்த்து அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புதுக்கோட்டை வயலோகம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவிலுக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான வீட்டை அறநிலைத்துறையிடம் தானமாக வழங்கிய பெண்மணிக்கு அறநிலையத்துறையின் அதிகாரி முத்துராமன் உள்ளிட்ட அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். வீட்டை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேளாங்கண்ணி என்ற பெண் கோரிக்கை வைத்தார். கிராம மக்கள் வழக்கறிஞர்கள் உடன் இருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் Way2News நிறுவனத்தின் ‘மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்’ ஆக பணிபுரிய ஆட்களை தேர்வு செய்ய உள்ளோம். 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத ஊதியமாக ரூ.18,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 9965860996, 9443764621, 9791731249 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அருணா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் துவங்கியது. மாவட்டத்திலுள்ள 13 ஒன்றியங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கி வருகின்றனர். இந்நிகழ்வில் அனைத்து துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை, குளத்தூர், மாத்தூர், மேலத்தானியம், நகரப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (அக்.8) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி, கம்பன் நகர், பெரியார் நகர், மறைமலை, திருவரங்குளம், சத்தியமங்கலம், நார்த்தாமலை, புதுப்பட்டி, அரசமலை, நல்லூர் உள்ளிட்ட பிற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்னவாசலை சேர்ந்தவர் சேக்சையது இவர் ஒரு ஆட்டோவில் நேற்று முகமதுஉசேன்,
ஆமீனா பானு, ஜாஸ்மீன் ஆகியோருடன் புதுக்கோட்டை சென்றபோது பின்னால் புதுக்கோட்டையை சேர்ந்த குணசேகரன் என்பவர் ஓட்டி வந்த கார் ஆட்டோ மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் காரில் இருந்த சித்ரா, சரவணன், சந்திரா, நடராஜன் மற்றும் ஆட்டோவில் சென்றவர்கள் உள்ளிட்ட 9 படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி கயத்தாறு ஒன்றியசெயல் வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், “அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.2000 உரிமைத் தொகை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கட்சி ஆரம்பிக்கும் நடிகர்களால் ஆட்சியை பிடிக்க முடியாது” என அவர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.