Pudukkottai

News September 6, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு: ஆட்சியர்

image

புதுக்கோட்டை மாவட்ட காலநிலை மாற்ற இயக்க குழுவில் அலுவலக பணிகளை மேற்கொள்ள தொழில்நுட்ப உதவியாளர் தேர்வு செய்யப்பட உள்ளார். தற்காலிகமாக 12 மாதங்களுக்கு மட்டுமே இருக்கும் இப்பணிக்கு மாத ஊதியமாக ரூ.20,000 வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு மச்சுவாடியில் உள்ள வன அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

News September 6, 2024

உடற்கல்வி ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது

image

புதுக்கோட்டை மாவட்டம் நச்சாந்துப்பட்டி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றும் ராக்கேஷ் இன்று சென்னையில் நடைபெற்ற டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் விழாவில் நல்லாசிரியர் விருதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மொழிகளிடமிருந்து பெற்றார். நல்லாசிரியர் விருது பெற்ற உடற்கல்வி ஆசிரியருக்கு பள்ளி மாணவர்கள் வாழ்த்துக்கள்

News September 6, 2024

புதுக்கோட்டை தனியார் பள்ளி ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது

image

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சென்னையில் நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பாக கலந்து கொண்டு புதுக்கோட்டை மாலையீடு அருகில் இயங்கிவரும் மவுண்ட் சீயோன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் கிருபாவிற்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கி பாராட்டினார்.

News September 5, 2024

அன்னவாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

image

அன்னவாசல் ஒன்றியம் மதியநல்லூர் கிராமத்தில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் அருணா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். கண்காணிப்பாளர் சுந்தரவல்லி பொதுசுகாதாரத்துறை அலுவலர் மருத்துவர் ராம்கணேஷ் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் உடன் இருந்தனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் அப்பகுதி கிராமத்து பொதுமக்கள் பரிசோதனை செய்து பயன்பெறுகிறார்கள்.

News September 5, 2024

கல்லூரியில் படிக்கும் இளம் பெண் மாயம்

image

மண்டையூர் அருகே கீழ மேடு கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன். இவரது 17 வயது மகள் திருச்சியில் உள்ள பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த மூன்றாம் தேதி வீட்டில் இருந்து கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து மண்டையூர் காவல் நிலையத்தில் தந்தை ராமகிருஷ்ணன் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 5, 2024

அரசு மருத்துவமனை நடந்து வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

image

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் இயங்கி வரும் அரசு பொது மருத்துவமனையில் நடந்து வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அருணா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுந்தரவல்லி பொது சுகாதாரத்துறை மாவட்ட அலுவலர் மருத்துவர் ராம்கணேஷ் மற்றும் மருத்துவர்கள் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News September 5, 2024

வட்டார வளர்ச்சி புதுக்கோட்டை ஆட்சியர் ஆய்வு

image

விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் எ.சுந்தரவல்லி, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா தலைமையில் இன்று (04.09.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News September 5, 2024

புதுகை ஆட்சியர் ஆய்வு

image

புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு, மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் விழிப்புணர்வுக்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று நேரில் பார்வையிட்டார் உடன் தனி வட்டாட்சியர் உடன் இருந்தார்.

News September 5, 2024

கைது செய்யப்பட்ட மீனவர்கள் புகைப்படம் வெளியீடு

image

கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 167 விசைப்படகுகளில் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான TN 08 MM 1418 என்ற விசைப்படகில் தினேஷ், முரளி, செல்வம் மற்றும் மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆகிய நான்கு பேருடன் சுமார் 32 நாட்டிக்கல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது எல்லை தாண்டி தாக இலங்கை அரசு கைது செய்தனர்.

News September 4, 2024

புதுகை ஆட்சியர் ஆய்வு

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்த பிரச்சார பேரணி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இன்று (04.09.2024) கொடியசைத்துத் துவக்கி வைத்து, குடிநீர் பரிசோதனைக் கருவியின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு கேட்டறிந்தார்.

error: Content is protected !!