Pudukkottai

News October 15, 2024

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு முக்கிய எண்கள் அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழைக்காலங்களில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்த தகவல்களை 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மாவட்ட அவசர கட்டுபாட்டு அறை 1077, 04322-222207 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

News October 15, 2024

குடுமியான்மலையில் புகையிலை விற்ற இருவர் கைது

image

குடுமியான்மலையில் காரில் வந்து பெட்டிகடைகளுக்கு புகையிலை விற்பனை செய்வதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை கொண்டு சென்றது தெரியவந்தது இதனையடுத்து போலீசார் காரில் வந்த பரம்பூரை சேர்ந்த ஹக்கீம் ஒலியமங்களத்தை சேர்ந்த இளையராஜா ஆகியோரை கைது செய்தனர்

News October 14, 2024

புதுகை மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, புதுகை மாவட்டத்தில் அக்.15-ஆம் தேதி (செவ்வாய்) மற்றும் அக்.16-ஆம் தேதி (புதன்கிழமை) ஓரிரு இடங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 40-55 கி.மீ வரை பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 13, 2024

புதுகையில் மழைபாதிப்பு பகுதிகளை ஆட்சியர் ஆய்வு

image

புதுக்கோட்டையில் வடகிழக்கு பருவமழையால் கனமழை பெய்யும் என்று அறிவித்திருந்த நிலையில் நேற்று இரவு 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் மழைநீர் தேங்கிய சாந்தாரம்மன் கோயில், பூமார்க்கெட், வடக்குராஜவீதி, திலகர்திடல், அடப்பன்வயல் உள்ளிட்ட பகுதிகளில் கலெக்டர் மு.அருணா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் செல்ல வழி ஏற்படுத்திதர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News October 13, 2024

புதுக்கோட்டையில் நாளை குறைதீர் கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நாளை திங்கள்கிழமை காலை 10:30 மணிக்கு நடைபெற உள்ளது. அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ள இந்த கூட்டத்தில் விவசாயிகள் தங்களுடைய தேவைகள் பருவமழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவாதிக்க ஆட்சியர் அருணா அழைப்பு விடுத்துள்ளார்.

News October 13, 2024

புதுக்கோட்டையை ஆண்ட மன்னர்கள் ‘காலச்சுவடு’

image

புதுக்கோட்டை சமணர்கள், பௌத்தர்கள், சோழர்கள், பாண்டியர்கள், முத்தரையர்கள், நாயக்கர்கள், கிழவன் சேதுபதி, தொண்டைமான்கள் எனப் பலரும் ஆளப்பட்ட நிலப்பகுதி. தொண்டைமான்களால் இப்பகுதி ஆளப்படுகையில், இந்நிலம் நிலையான ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. அப்போது அவர்கள் ஆண்ட பகுதியைத் தொண்டைமான் சீமை என்றே அழைக்க விரும்பியிருக்கிறார்கள் என ஆவணங்களில் குறிக்கப்பட்டிருக்கிறது. ஷேர் செய்யவும்

News October 13, 2024

புதுகையில் வெளிவந்த இதழ்கள் “காலச்சுவடு”

image

புதுக்கோட்டையில் தாய்நாடு 1941, திருமகள் 1942, சந்திரோதயம் 1933, அணிகலன் 1941, பாலர் மலர் 1942, பாப்பா 1946, கரும்பு 1947, டமார 1946, இன்பம் 1941, கலைவாணி 1944, கலைச்செல்வி 1948 என்னும் செய்தித்தாள் 1908ஆம் ஆண்டு வந்தது. இதற்கான ஆண்டு சந்தா ₹5 ரூபாய் ஆகும். ஜனமித்திரன், தேச ஊழியன் ஆகிய செய்தி தாள்கள் அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவை. இவை புதுகையிலிருந்து வெளிவந்த செய்தித்தாள்கள் ஆகும்.

News October 13, 2024

அன்னவாசல் அருகே மது விற்றவர் கைது

image

அன்னவாசல் சுற்று வட்டார பகுதிகளில் இன்று அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் மாங்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அப்பகுதியில் அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 14 மது  பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

News October 13, 2024

புதுக்கோட்டையில் மழை விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மாலை 7 மணி முதல் 9:00 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் 551.79MM மழை பெய்ததாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டையில் மிக அதிகளவாக 43.50MM மிகக் குறைவாக, மணமேல்குடியில் 2.60MM மழை பெய்ததாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

News October 13, 2024

இலுப்பூர் அருகே பொது இடத்தில் சூதாட்டம் 4 பேர் கைது

image

இருந்திரப்பட்டியில் பொதுஇடத்தில் இன்று பலத்த சத்தத்துடன் சூதாட்டம் விளையாடுவதாக இலுப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதனையடுத்து போலீசார் இருந்திரப்பட்டி முத்துமாரியம்மன் கோவில் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சூதாட்டம் விளையாடிக் கொண்டிருந்த இருந்திரப்பட்டி பகுதியை சேர்ந்த பாண்டியன், துரைச்சாமி, பூபதி, வெள்ளைச்சாமி, ஆகிய 4 பேரை கைது செய்தனர்

error: Content is protected !!