Pudukkottai

News September 9, 2024

புதுக்கோட்டையில் வேலைவாய்ப்பு: ஆட்சியர் தகவல்

image

புதுக்கோட்டை கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை: 108 அவசர ஊர்திகளை இயக்க ஓட்டுநர்கள் தேவை. இதற்கு தகுதியாக குறைந்தது 10-ஆம் வகுப்பு கல்வியும், ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும். இதேபோல் மருத்துவ உதவியாளருக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பி.எஸ்.சி. நர்சிங் முடித்த ஆண்/பெண் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க புதுக்கோட்டை பழைய மருத்துவமனை வளாகத்தை அணுக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News September 9, 2024

புதுகை மாவட்டத்தில் 361 விநாயகர் சிலைகள் கரைப்பு

image

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 714 விநாயகா் சிலைகள் சனிக்கிழமை மாவட்டம் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதன்படி சனிக்கிழமையே மாவட்டத்தின் 96 இடங்களில் வைக்கப்பட்டிருந்த சிறிய அளவிலான சிலைகள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள நீா்நிலைகளில் கரைக்கப்பட்டன. இதன் தொடா்ச்சியாக புகரப் பகுதிகளிலுள்ள 361 விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டன.

News September 9, 2024

புதுகை மாவட்டத்தில் நாளை மின் தடை

image

விராலிமலை மற்றும் வடுகப்பட்டி துணை மின்நிலையங்களில் நாளை (செப்.10) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் விராலிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள கோமங்கலம், கல்குடி, பொருவாய், அத்திப்பள்ளம், நம்பம்பட்டி, வேலூர், கத்தலூர், குளவாய்பட்டி, முல்லையூர், சூரியூர், ஆலங்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 8, 2024

புதுக்கோட்டை மீனவர்களுக்கு 20ஆம் தேதி வரை காவல்

image

ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 3 படகையும் அதிலிருந்த 14 மீனவர்களையும் நேற்று மாலை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்து இன்று காலை யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இன்று அவர்களை விசாரித்த இலங்கை நீதிமன்றம் வரும் 20ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

News September 8, 2024

திருமயத்தில் ஆயுதப்படை காவலர் பலி

image

திருமயம் பைபாஸ் சாலையில் புதுக்கோட்டை ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வரும் அந்தோணி என்பவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மீது மினி லாரி மோதிய விபத்தில் அந்தோணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட காவல் துறையினர் திருமயம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 8, 2024

14 புதுக்கோட்டை மீனவர்களின் புகைப்படங்கள் வெளியீடு

image

ஜெகதாப்பட்டத்தில் இருந்து மீனவர்கள் சிலர் விசைப்படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இதில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களின் புகைப்படங்களை இலங்கை கடற்படை இன்று வெளியிட்டுள்ளது .

News September 8, 2024

முத்துப்பட்டினத்துக்கு வருகை தந்த ஈ.பி.எஸ்

image

முத்துப்பட்டினம் ராமச்சந்திரன் இல்ல மணவிழாவில் கலந்து கொள்ள தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று வருகை தந்தார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட ஏராளமான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனால் புதுக்கோட்டை-ஆலங்குடி சாலை மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.

News September 8, 2024

திருமயம் அருகே காண்டாமிருகம் கொம்பு பறிமுதல்

image

திருமயம் அருகே காண்டாமிருக கொம்பு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவதாக வனத்துறை தனிப்பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வனத்துறையினர் மற்றும் வனத்துறை தனிப்படையினர் பரளி என்ற இடத்தில் காண்டாமிருகம் கொம்பை கொண்டு சென்ற மூன்று நபர்களை பிடித்து, கொம்பை பறிமுதல் செய்து, காரைக்குடியைச் சேர்ந்த மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News September 8, 2024

விராலிமலை அருகே 10 பவுன் நகை திருட்டு

image

மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சேசுராஜ். இவரும் இவரது மனைவியும் அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளனர். பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு 10 பவுன் நகை, 250 கிராம் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 7, 2024

புதுக்கோட்டையில் இரவு பணியில் ஈடுபடும் காவல்துறை

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி DSP கௌதம் கோட்டைப்பட்டினம் டவுன் ரமேஷ் கந்தர்வகோட்டை சுகுமாரன் இன்ஸ்பெக்டர் அறந்தாங்கி ராஜகோள்பால் பொன்னமராவீதி சக்திவேல். மேலும் பொதுமக்கள் புகார் செய்ய 949801800730 என்ற எண்னை தொடர்பு கொள்ளவும்.

error: Content is protected !!