Pudukkottai

News September 10, 2024

முதல்வர் அறிவிப்புக்கு மூத்த குடிமகன்கள் மகிழ்ச்சி

image

புதுகை மாவட்ட மூத்த குடிமக்களுக்கு புரட்டாசி மாத கட்டணமில்லா ஆன்மீக பயணம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை மதுரை, கோவை திருச்சி, மண்டலங்களில் உள்ள வைணவக் கோவில்களுக்கு 1000 பக்தர்களை கட்டணமில்லா பயணம் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை புதுக்கோட்டை மாவட்ட மூத்தகுடிமக்கள் வரவேற்றுள்ளனர்.

News September 10, 2024

புதுக்கோட்டையில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்

image

சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியின்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்துள்ளனர். புதுக்கோட்டை 1287 தொடக்கப் பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகள் இன்று செயல்படவில்லை. இதனால் பள்ளிகளில் குழந்தைகள் கல்வி கற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

News September 10, 2024

விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

புதுக்கோட்டையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு தொடர்பான முகாம் வரும் 12ஆம் தேதி ஒன்பது மணிக்கு புதுக்கோட்டை அய்யனார் திடலில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.

News September 10, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் தற்கொலை

image

புதுகை மாவட்டம் ஒடுகம்பட்டி கலைச்செல்வி பெற்றோருடன் ஏற்பட்ட மனக்கசப்பு, கரம்பக்குடி அருகே கோட்டைக்காடு ராஜேந்திரன் மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு, ஆலங்குடி அருகே பாச்சிக்கோட்டை மோகன் மகனுடன் ஏற்பட்ட மனக்கசப்பு, வீரப்பட்டி விஸ்வநாதன் மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக நான்கு பேரும் அவரவர் வீட்டிலேயே தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்கள். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News September 10, 2024

திமுக அலுவலகத்தில் எம்பி அப்துல்லா ஆலோசனை

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று பல்வேறு நிகழ்வில் கலந்து கொண்ட திமுக மாநிலங்களவை எம்.பி. எம்.எம். அப்துல்லா, புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைகள் மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் மாமன்ற உறுப்பினருமான ராஜேஸ்வரி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

News September 10, 2024

கல்வி உதவித்தொகை பெற ஆட்சியர் அழைப்பு

image

புதுகை மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 60% மேல் எடுத்து தேர்ச்சி பெற்ற முன்னாள் படை வீரர்களின் மகன் மற்றும் மகளுக்கு 2024-25ஆம் கல்வியாண்டில் தொழில் கல்விக்கான பாரத பிரதமர் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஓராண்டு கல்வி உதவித்தொகையாக மாணவர்களுக்கு 30,000 மாணவிகளுக்கு 36,000 வழங்கப்படும். இதற்கு www.ksb.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News September 10, 2024

புதுக்கோட்டையில் 108 ஓட்டுநர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு EMRI GREEN HEALTH SERVICES நிறுவனம் மூலம் வேலைவாய்ப்பு முகாம் இன்று பழைய அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் தகுந்த முன் அனுபவமுடைய 24 முதல் 35 வயதிற்குட்பட்ட ஆண் மற்றும் பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா தெரிவித்துள்ளார்.

News September 9, 2024

புதுக்கோட்டை மகளிர் சுய உதவிக் குழுவுக்கு வங்கி கடன் வழங்கல்

image

தமிழக முழுவதும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.2723 கோடி வங்கி மூலம் கடன் வழங்கும் விழா மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் சுய உதவி குழுவிற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடன் வழங்கினார். திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கேகே செல்ல பாண்டியன், ஆட்சியர் அருணா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News September 9, 2024

புதுகையில் புதிய வருவாய் அலுவலர் பதவியேற்பு

image

புதுகை மாவட்ட புதிய வருவாய் அலுவலராக ராஜராஜன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். மாவட்ட DRO-வாக இருந்த செல்வி பணி ஓய்வு பெற்ற பிறகு புதுகை மாவட்டத்தில் புதிய டி ஆர் ஓ ஆக ராஜராஜன் செயல்படுவார் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை 10 மணி அளவில் ஆட்சியர் அலுவலகத்தில் அவர் பதவியேற்று கொண்டார்.

News September 9, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் நடைபெற்றதில் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனம் மற்றும் உபகரணங்கள் மாவட்ட ஆட்சியர் அருணா வழங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் உலகநாதன் உடன் இருந்தார்.

error: Content is protected !!