India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் முக்கனி கோ ஆப் டெக்ஸ் அரசுத்துறை நிறுவனத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகை நவம்பர் இறுதியில் வருவதால் தள்ளுபடி விற்பனை டிசம்பர் மாதம் கடைசி வரை நடைபெறும் எனவும் மக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கோ – ஆப்டெக்ஸ் மேலாளர் பாண்டியன் தெரிவித்தார்.
புதுகை மாவட்டத்தில் கடந்த 24 மணி (இன்று காலை 6:30 நிலவரப்படி) நேரத்தில் 774.5 மில்லிமீட்டர் மழை பெய்ததாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. அதன்படி திருமயத்தில் மிக அதிகளவாக 95.00 மில்லி மீட்டர் மழையும், மிகக் குறைந்த அளவாக பொன்னமராவதியில் 1.20 மில்லி மீட்டர் மழை பெய்ததாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
கலசமங்கலம் – சிங்கங்கலம் என்ற பெயருடன் விளங்கிய புதுகை நகரப் பகுதி 1680-1730இல் புதுகை சீமையை ஆண்ட ரகுநாதராய தொண்டமான் புதிய கோட்டை கொத்தளங்களை கட்டினார். அது முதல் புதுகை என பெயர் பெற்றது. இக்கோட்டை தற்போதைய அடப்பன்குளத்தில் வடக்கு பகுதியில் அமைந்திருந்தது. தஞ்சை மராட்டியர் படை எடுப்பால் அழிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. 1700இல் புதுகை என பெயர் வழங்கியதற்கு ஆதாரம் உள்ளன. “காலச்சுவடு”
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திருமயம் பகுதிகளில் புதிய கலையரங்கம், மின்மாற்றி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, அங்கன்வாடி ஆகியவற்றை திறந்து வைக்க உள்ளார். அறந்தாங்கியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம், 12 இடங்களில் RSS சார்பில் ஆலோசனைக் கூட்டம், TVK 5 இடங்களில் கொடிஏற்று விழா, DMK 75 ஆம் ஆண்டு பவள விழாவை முன்னிட்டு 16 இடங்களில் இருசக்கர வாகன பேரணி நடைபெறவுள்ளது.
புதுக்கோட்டை, TVS கார்னரில் CPI-M சார்பில் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தும் போரை உடனடியாக நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம், நவராத்திரி விழா முன்னிட்டு மாவட்ட முழுவதும் முக்கிய ஆலயங்களில் நவராத்திரி நான்காம் நாள் விழா, புதுக்கோட்டை மாவட்டத்தில் கிரிக்கெட், கபாடி 17 போட்டி இடங்களில் நடைபெற உள்ளது. காங்கிரஸ், CPI-M, சார்பில் ஆலோசனை கூட்டம், TNTJ ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (05.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு புதுக்கோட்டை, சாமிலா, தேவி, அறந்தாங்கி, கௌரி, கீரனூர், சிக்கந்தர், பாட்ஷா, ஆலங்குடி, ரவி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அவசர உதவிக்கு 100 தனி பிரிவு அலுவலகம் 9498100730 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
பிரதம மந்திரி கிசான் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சாமான் திட்டம் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் செயல்பட்டு வருகிறது. சொந்தமாக விவசாய நிலங்களை வைத்திருக்கும் விவசாய குடும்பங்கள் உதவித்தொகை 3 மாதங்களுக்கு ஒரு முறை 2000 விகிதம் ஆண்டுக்கு 6 ஆயிரம் வழங்கப்படுகிறது. வங்கி கணக்கு வைப்பவர்கள் ஆதார் எண்ணை இணைக்கும் படி புதுகை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான மண்டல அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 9ஆம் தேதி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் தங்களது பெயரை பதிவு செய்யலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஆணைக்கிணங்க வரும் 8ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளனர். திமுக அரசால் பொதுமக்கள் படும் இன்னல்களை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து விராலிமலை எம்எல்ஏ சி விஜயபாஸ்கர் போராட்டம் நடைபெறும் இடங்களை தெரிவித்துள்ளார். அதன்படி புதுகை, விராலிமலை, அறந்தாங்கி, திருமயம் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.
ஆலங்குடி அருகே கருக்கா குறிச்சியில் நமது பகுதி வணிகர்கள் சங்க காலத்தில் ரோமநாடு வணிகர்களுடன் வணிக தொடர்பு கொண்டிருந்தனர். இதற்கு ஆதாரமாக ரோமன் நாட்டு பொன் நாணயங்கள் கருக்கா குறிச்சியில் கண்டெடுக்கப்பட்டு புதுகை அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளன. பல்லவர் பாண்டியர் சோழர் விஜயநகர மன்னர்கள், தொண்டமான் மன்னர்களும் இப்பகுதியை ஆண்டுள்ளனர். இவர்களின் வரலாறு கல்வெட்டுகளில் கிடைத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.