Pudukkottai

News January 2, 2025

கிளை அஞ்சலக அலுவலர் ராஜேஸ் பணியிடை நீக்கம்

image

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டியில் அஞ்சலக அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் ராஜேஷ் என்பவர் பொதுமக்கள் சேமிப்பு கணக்கில் செலுத்தும் பணத்தை வரவு வைக்காமல் 40 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார் அளித்த நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அஞ்சல் அதிகாரி ஷாலினி தகவல் தெரிவித்துள்ளார்.

News January 2, 2025

மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டத்தில் 5 MPகள் பங்கேற்பு 

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மதியம் 3:30 மணி அளவில் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கரூர் MP ஜோதிமணி, திருச்சி MP துரை வைகோ, ராமநாதபுரம் MP நவாஸ் கனி, சிவகங்கை MP கார்த்தி சிதம்பரம், திமுகவின் MP MM அப்துல்லா உள்ளிட்ட பாராளுமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க இருப்பதாக மாவட்ட நிர்வாகம் இன்று காலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News January 2, 2025

டிப்பர் லாரி மோதி பெண் படுகாயம்!

image

பெருஞ்சுனை-யை சேர்ந்த அஞ்சலிதேவி தனது இரு சக்கர வாகனத்தில் நேற்று மாலை 7:30 மணி அளவில் புதுகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியே வந்து கொண்டிருந்தார். அடையாளம் தெரியாத டிப்பர் லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டவர் பலத்த காயம் அடைந்தார் 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் அவர் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோகர்ணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 1, 2025

சிவகங்கை எம்.பி. தலைமையில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தலைமையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நாளை (ஜன.2)  மாலை 3.30 மணி அளவில் நடைபெற உள்ளது என காங்., தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொள்வார்கள்.

News January 1, 2025

பல லட்சம் கையாடல் -நடவடிக்கை எடுக்க கோரிக்கை

image

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டி தபால் நிலையத்தில் பொதுமக்களிடம் பல லட்சம் கையாடல் செய்த அஞ்சலக அதிகாரி மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர கோரி வலையபட்டி தபால் நிலையம் முன்பு நாளை (2-1-2025)காலை 11 மணிக்கு பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

News January 1, 2025

புதுகை மாவட்டத்தில் மின்நுகர்வோர் கூட்டங்கள் அறிவிப்பு

image

புதுகை மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டங்கள் புதுகை செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாதந்தோறும் முதல் வியாழக்கிழமையும், கீரனூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் 3 வது வியாழக்கிழமையும், திருமயம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் 4 வது வியாழக்கிழமையும், ஆலங்குடி செயற்பொறியாளர் அலுவலகத்தில் 3 வது செவ்வாய்க்கிழமையும் நடைபெறும் என மேற்பார்வை பொறியாளர் த.அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

News January 1, 2025

புதுகையில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

image

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய மின் பகிர்மான வட்ட கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (02.01.25) நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை இக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறையை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மேற்பார்வை பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

News December 31, 2024

புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியினர் கைது

image

 புதுக்கோட்டைசின்ன பூங்கா எதிரே நாம் தமிழர் கட்சியினர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை புதுக்கோட்டை காவல் துறையினர் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் இப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

News December 31, 2024

புதுகை மாவட்ட எஸ்.பி. ஆக அபிஷேக் குப்தா நியமனம்

image

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த வந்திதா பாண்டே திண்டுக்கல் டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா  நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதுகை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக அபிஷேக்குப்தா விரைவில் பதவியேற்க உள்ளார்.

News December 31, 2024

புதுக்கோட்டையில் சைக்கிள் போட்டி

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் புதுக்கோட்டையில் சைக்கிள் போட்டி வருகின்ற 4ம் தேதி நடைபெற உள்ளது. இதில் மாணவ மாணவிகள்  13,15,17 பிரிவில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் போட்டியில் பங்கு பெற புதுக்கோட்டை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம் என கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!