India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நடத்திய மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பயிற்றுனர் அப்துல் காதர் பயிற்றுவித்த திருமயம் மாணவர்கள், 12 தங்கம், 2 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களை பெற்றுள்ளனர். முதலிடம் பிடித்தவர்கள் 12 பேரும் மாநிலப் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பொதுமக்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்க வருகின்றனர். ஷேர் செய்யவும்
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,புதுக்கோட்டை மாநகர், திருக்கோகர்ணம், ஆலங்குடி, திருமயம், அறந்தாங்கி ஆகிய பகுதியில் லேசான மழை பெய்து வருகிறது.
பழங்காலத் தமிழர்களின் மிகச்சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று. பெருங்கரையடி மீண்ட அய்யனார் கோவில் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இது ஆலங்குடி தாலுகாவில் குலமங்கலத்தில் அமைந்துள்ளது. இதன் குதிரை சிலை 33 அடி உயரம் கொண்டது, முன் கால்கள் காற்றிலும் மற்றவை நிலத்திலும் உள்ளன. சிலை தெற்கு நோக்கி உள்ளது.
மணமேல்குடி வட்டாச்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த இளநிலை உதவியாளர் மதன் பணியிட நீக்கம். கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கியதில் ரூ.5.89லட்சம் பணத்தை முறைகேடாக அவரது வங்கி கணக்கில் வரவு வைத்தது கண்டறியப்பட்டது தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் முகாம் இன்று (21.10.2024) திங்கள் கிழமை நடைபெற உள்ளது. ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்ளும் இந்த கூட்டத்தில் பொதுமக்கள், விவசாயிகள் தங்கள் அடிப்படை தேவை உள்ளிட்ட கோரிக்கைகளை அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அருணா அழைப்பு விடுத்துள்ளார். ஷேர் செய்யவும்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தரமான பட்டாசுகள் மிகக்குறைந்த விலையில் காவலர் திருமண மண்டபத்தில் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் வாங்கி பயன்பெறுமாறு புதுக்கோட்டை காவல்துறை சார்பாக அறிவிக்கப்படுகிறது. இடம் : காவலர் திருமண மண்டபம், ஆயுதப்படை வளாகம், புதிய பேருந்து நிலையம் அருகில், புதுக்கோட்டை
பொது போக்குவரத்து வாகனங்கள் இல்லாத அந்த நாளில் புதுக்கோட்டை மக்கள் கால்நடையாகவே பல்வேறு ஊர்களுக்கு சென்றனர். திருச்சிக்கு கால்நடையாக செல்லும் பயணிகள் தங்கி இளைப்பார ரெங்கம்மா சத்திரம், அம்மா சத்திரம், நல்லூர், மாத்தூர் போன்ற இடங்களில் தொண்டமான் மன்னர்கள் சத்திரங்களை கட்டியிருந்தனர். திருச்சி-புதுக்கோட்டை சாலையில் இன்னும் இந்த சத்திரங்களை காணலாம். “காலச்சுவடு”. ஷேர் செய்யவும்….
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (18.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100-ஐ அழைக்கலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரங்களில் ஏதேனும் அசாதாரண சம்பவங்கள் நடைபெற்றால் இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளது.
பொது விநியோகத் திட்டத்தின் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டங்களிலும் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகள் தீர்க்கும் முகாம் நாளை காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை அந்தந்த தாசில்தார் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதில், பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற கலெக்டர் அருணா அறிவுறுத்தியுள்ளார்.
புதுக்கோட்டை சிப்காட், முக்கணாமலைப்பட்டி, கீரனூர், அன்னவாாசல் ஆகிய துணை மின் நிலையத்தில் நாளை (அக்.19) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், சிப்காட் நகர், பாலன் நகர், தைலா நகர், சிட்கோ, காயாம்பட்டி, அன்னவாசல், கீீரனூர், முக்கணாமலைப்பட்டி, வீரப்பட்டி உள்ளிட்ட பிற பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.