Pudukkottai

News August 29, 2025

புதுகை: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

புதுகை மக்களே, முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!

News August 29, 2025

புதுகை: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வேண்டுமா?

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <>https://tnuwwb.tn.gov.in<<>>/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில், Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News August 29, 2025

புதுகை: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

image

மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது . இதற்கு 18 வயது நிரம்பிய B.Sc, B.E. ,B.Tech, M.Tech. ME படித்தோர் விண்ணபிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ30,000 முதல் ரூ1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து செப் 17க்குள் விண்ணபிக்க வேண்டும். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.

News August 29, 2025

புதுகை மாவட்டத்தில் நாளை மின்தடை

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (ஆக.30) பல்வேறு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக தொண்டைமான் நல்லூர், திருமயம், புதுக்கோட்டை, கீரனூர், சிப்காட், குடுமியான்மலை, அன்னவாசல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News August 29, 2025

புதுகை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று(ஆக.28) இரவு 10 மணி முதல் இன்று(ஆக.29) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம். அல்லது 100ஐ அழைக்கவும். மற்றவர்களுக்கும் இதனை ஷேர் செய்யுங்கள்.

News August 28, 2025

புதுகை மக்களே.. இலவச சட்ட உதவிகள் வேண்டுமா?

image

புதுகை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு புதுகை மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை (04322-220585) தொடர்பு கொள்ளலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!

News August 28, 2025

புதுக்கோட்டை மக்களே.. இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

புதுகை மக்களே… தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் வீடு மற்றும் நிலம் இல்லாதவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்ட இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை (4322-221663) தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணவும்.

News August 28, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆக. 29ம் தேதி வெள்ளிக்கிழமை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளார். ஆதனக்கோட்டை, அரிமளம், வாார்பட்டு, தேங்காய்த்தின்னிப்பட்டி இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 28, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆக. 29ம் தேதி வெள்ளிக்கிழமை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளார். ஆதனக்கோட்டை, அரிமளம், வாார்பட்டு, தேங்காய்த்தின்னிப்பட்டி இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 28, 2025

புதுகை மாவட்ட கூட்டுறவுத் துறையில் வேலை!

image

கூட்டுறவு துறையின் கீழ் புதுகை மாவட்டத்தில் காலியாக உள்ள ’29’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து, இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 – ரூ.96,000 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.29) கடைசி நாளாகும். சொந்த ஊரில் அரசு வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!