Pudukkottai

News February 25, 2025

புதுகை: செல்வமகள் சேமிப்பு திட்டம் 5 நாட்களுக்கு சிறப்பு முகாம்.

image

புதுக்கோட்டை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை கோட்டத்தில் பொன்மகன் சேமிப்பு கணக்குகள் தொடங்குவதற்கு வசதியாக 24ம் தேதி (நேற்று) முதல் 28ம் தேதி வரை 5 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இதற்காக அஞ்சலகங்களில் சிறப்பு கவுன்டர்கள் செயல்படுகின்றன என்று கூறினார்.

News February 25, 2025

புதுக்கோட்டையில் வேலை வாய்ப்பு

image

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் தொழிற்பயிற்சிக்கான 4,000 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ஊதியமாக ரூ.12,000 முதல் ரூ.15,000 வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச்.11 ஆகும். இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். SHARE NOW.

News February 25, 2025

எலி ஸ்பிரே வைத்து விளையாடிய சிறுவர்கள் GHஇல் அனுமதி

image

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே மண்ணவேலாம்பட்டி கிராமத்தில் எலிக் கொல்லி ஸ்பிரேயை 4 குழந்தைகள் விளையாட்டாக முகத்தில் அடித்துக் கொண்ட நிலையில், அச்சமடைந்த அவரது பெற்றோர்கள் நான்கு குழந்தைகளையும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து அவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

News February 24, 2025

புதுகை கபடி விளையாட்டு வீரர் திடீர் மரணம்

image

புதுகை மலையப்ப நகர் கபடி விளையாட்டு வீரர் சிலம்பம் மாஸ்டர் சிவகணேசன் இயற்கை எய்திவிட்டார் . திருமயம் பகுதி மாணவர்களுக்கு சிலம்பம் கற்றுக் கொடுத்து வந்தார். இவரது இறப்புக்கு மாணவர்களும் பொதுமக்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரது உடல் இன்று மாலை 4 மணியளவில் புதுகை மலையப்பன் நகர் அவரது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்படும் எனகுடும்பத்தினர் சார்பாக அறிவிக்கப்படுகிறது

News February 24, 2025

தபால் ஆபிசில் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். புதுக்கோட்டையில் மட்டும் 32 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் இங்கு<> <கிளிக்> <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். SHARE பண்ணுங்க..

News February 23, 2025

ஜெகபர் அலி கொலை வழக்கில் 3 பேர் மீது குண்டாஸ்

image

வெங்களூர் திருமயம் ஜகபர் அலி கொலை வழக்கில் கைதாகி உள்ள ஐந்து பேரில் குவாரி உரிமையாளர்கள் ராசு, ராமையா, லாரி உரிமையாளர் முருகானந்தம் ஆகியோர் மீது பாய்ந்தது குண்டாஸ். போலீசார் பரிந்துரையின் பெயரில் மாவட்ட ஆட்சியர் அருணா சம்பந்தப்பட்ட மூன்று பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து மூன்று பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

News February 22, 2025

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில்ப பாலாலயம்

image

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பாலாலயம் செய்யப்பட்டது. தொடர்ந்து தேர் திருவிழா மாசி திருவிழா கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சமரச் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், காப்பு கட்டு, சாமிபுறப்பாடு, தேரோட்டம், முளைப்பாரி, குதிரை எடுப்பு, மண்டகப்படிதாரர்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் ஆகிய நிகழ்ச்சிகள் குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

News February 22, 2025

63,170 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுகிறார்கள்- கலெக்டர்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கான அரசு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது. இதில் அரசு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் மாவட்டத்தில் 63,170 மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வு எழுத உள்ளதாக மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News February 21, 2025

முயல்களை வேட்டையாட முயன்ற 3 பேர் கைது

image

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முயல்கள் அதிக அளவில் வேட்டையாடப்படுவதாக பொன்னமராவதி வனச்சரகருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி, வனச்சரகர் இராமநாதன் தலைமையில் வனவர் சரவணன் மற்றும் வனக்காப்பளர் கனகவள்ளி ஆகியோர் ரோந்து பணி சென்றனர். அப்போது கம்பி வலைகளை கொண்டு முயல்களை வேட்டையாட முயன்ற 3 பேரை கைது செய்தனர்.

News February 19, 2025

புதுகை மாவட்டத்தில் பீர் விற்பனை கடும் சரிவு 

image

புதுகை மாவட்டத்தில் டாஸ்மார்க் கடைகளில் பீர் விற்பனை கடந்த ஆண்டை விட 25% குறைந்துள்ளது. இதுகுறித்து டாஸ்மார்க் அதிகாரி தெரிவிக்கையில் மாவட்டத்தில் 130 டாஸ்மார்க் கடைகள் உள்ளன. தினமும் 3 கோடி 50 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடைபெறுகிறது. பீர் 2500 பெட்டிகள் விற்பனையாகிறது. கடந்த ஆண்டு விட இவ்வாண்டு பீர் விற்பனை 25% குறைந்துள்ளது. இதனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

error: Content is protected !!