Pudukkottai

News September 12, 2025

புதுக்கோட்டை இளைஞர்களே RBI வங்கியில் வேலை!

image

புதுவை மக்களே இந்த வாய்ப்பை உடனே Use பண்ணுங்க! RBI இந்திய ரிசர்வ் வங்கி (Officers) பணிகளை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது. வங்கி வேலைக்கு செல்ல ஆசை இருக்கா? உடனே Register பண்ணுங்க!
⏩துறை: இந்திய ரிசர்வ் வங்கி
⏩பணி: Officers
⏩மாத சம்பளம்: ரூ. 78,450/-
⏩மொத்தம் பணியிடங்கள்: 120
⏩வயது வரம்பு: 30-க்குள்
⏩கடைசி தேதி: 30.09.2025
⏩இணைய வழியில் விண்ணப்பிக்க: <>Click Here<<>>
மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 12, 2025

புதுக்கோட்டையில் இன்று Power Cut

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று 12.09.2025 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படவுள்ளது. அப்படி புதுக்கோட்டையில் எந்த பகுதிகளில் மின்தடை குறித்து தற்போது காணலாம். ❎ரெங்கநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரா பகுதிகள் ❎கறம்பக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரா பகுதிகள் ❎நெடுவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டாரா பகுதிகள் மின்தடை இருக்காது. SHARE பண்ணுங்க!

News September 12, 2025

புதுக்கோட்டையில் ரேஷன் குறைதீர் முகாம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் தொடர்புடையை தனி வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில் நாளை (செப்.,13) குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை உள்ளிட்டவற்றிற்கான மனுக்களை கொடுக்கலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

News September 12, 2025

கடலில் மிதந்து வந்த கஞ்சா பொட்டலங்கள்: போலீசார் விசாரணை

image

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கடற்கரையில் கடலில் மிதந்து வந்த 20 பார்சல்களை இன்று (செப்.,11) மீன்வளத் துறையினர் கைப்பற்றினர். அதில் 40 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதை போலீசாரிடம் ஒப்படைத்து போலீசார் கஞ்சா மூட்டைகளை கடத்தியது யார்?, அதை கடலில் தூக்கி வீசியவர்கள் யார்? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News September 11, 2025

புதுக்கோட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செப்.,11) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எங்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளனர்.

News September 11, 2025

புதுக்கோட்டை: இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (செப்.11) இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW !

News September 11, 2025

புதுகை : நாளை எங்கெல்லம் முகாம் தெரியுமா?

image

புதுக்கோட்டை ஒன்றியத்தில் பெருங்கொண்டான் விடுதி, குன்றாண்டார் கோவில் ஒன்றியம் வந்தனாக்கோட்டை, அன்னவாசல் ஒன்றியம் வீரப்பட்டி, அறந்தாங்கி ஒன்றியம் சுப்பிரமணியபுரம், அரிமளம் ஒன்றியம் இசேவை மையக்கட்டிடடம், பொன்னமராவதி பேரூராட்சி அம்மன் சமுதாயகூடம் உள்ளிட்ட இடங்களில் நாளை(செப்.12) நடக்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள கலெக்டர் மு.அருணா அழைப்பு விடுத்துள்ளார்.

News September 11, 2025

புதுகை: அம்பேத்கார் உருவ சிலைக்கு முன் திருமணம்

image

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் உருவ சிலைக்கு முன் விடுதலை கட்சி நிர்வாகி சிறுத்தை சிவா தலைமையில், கணபதிபுரத்தைச் சேர்ந்த காதல் ஜோடி மகேஷ்வரன்-பிரியா ஆகியோர் மாலை மாற்றி ஜாதி மறுப்பு திருமணம் செய்தனர். இந்த திருமணத்தில் பங்கேற்று பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

News September 11, 2025

புதுக்கோட்டையில் 20,000 டன் நெல் கொள்முதல் இலக்கு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இவ்வாண்டு 60 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 20,000 டன் நெல்லைக் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார். கடந்தாண்டு 45 நிலையங்கள் மூலம் 15,218 டன் நெல் வாங்கப்பட்டு ரூ.36.78 கோடி விவசாயிகளின் கணக்கில் செலுத்தப்பட்டது. நெல்லை பாதுகாப்பாக சேமித்து பணம் நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

News September 11, 2025

புதுகை: அரசு மருத்துவக் கல்லூரியில் சான்றிதழ் படிப்பு

image

புதுகை அரசு மருத்துவக் கல்லூரியில் +2 தேர்ச்சி பெற்றவர்கள் கார்டியோ நூட்புநர், அவசர சிகிச்சை தொழில்நுட்ப வல்லுநர், டயாலிசிஸ், மயக்க மருந்து தொழில்நுட்ப வல்லுநர் உள்ளிட்ட பல்வேறு ஒரு வருட சான்றிதழ் படிப்புக்கு வரும் 12ஆம் தேதிக்குள் 10,+2 படித்த அசல் சான்று, ஜாதி சான்று, ஆதார் அட்டை, புகைப்படத்துடன் மருத்துவக் கல்லூரி முதல்வரை நேரில் சந்தித்து விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!