India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 21-ந் தேதி காலை 10.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். இந்த தகவலை விவசாய நண்பர்களுக்கு பகிருங்கள்…
மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <
புதுகை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் தொழில் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் பிரிவை சேர்ந்த மாணவ, மாணவிகள் PM YASASVI திட்டத்தின் கீழ் தங்களது மேற்படிப்புக்காக கல்வி உதவித் தொகை பெறலாம். மேலும், கல்லூரியில் மூன்றாண்டு படித்தவர்கள், முதுகலை பாலிடெக்னிக் போன்றவற்றில் படிக்கும் மாணவ மாணவியர் இதற்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் நொய்யல் வீதி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு கணித ஆசிரியராக பணிபுரியும் சுந்தர வடிவேலு (48) என்பவர் மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக சைடு லைனில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் மீது திருப்பூர் கே.வி.ஆர் நகர் மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தலை மறைவான அவரை திருப்பூர் தனிபடை போலீசார் புதுகையில் நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
புதுகை, செப்பிளாந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி ராஜ்குமார் (29) என்பவரை, ஜோயல் (21), கார்த்திக் (24), சிவா (24) ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்கி, ஜோயல் ராஜ்குமாரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் மாத்தூர் போலீசார் ஜோயலை கைது செய்து, தலைமறைவாக இருந்த கார்த்திக் மற்றும் சிவா ஆகிய இருவரையும் போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று கார்த்திக்கை கைது செய்தனர்.
புதுக்கோட்டை, திருப்புனவாசலை சேர்ந்த 11 பேர் சரக்கு மினி வேன் ஒன்றில் பழனிக்குச் சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்போது இவர்கள் சென்ற வாகனம் ராமநாதபுர மாவட்டம் திருவாடானை தாலுகா மங்கலக்குடி அருகே சென்றபோது சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது மோதியதில் 11 பேர் காயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் காயமடைந்தவர்கள் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. கிரஷார் ஏற்றும் பொருட்களுக்கு டிரான்சிட் பாஸ் கட்டணம் இல்லாமல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தம் நடைபெறுவதால் அனைத்து டிப்பர் லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டு இன்று வேலையை நிறுத்த ஈடுபட உள்ளனர்.
தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் தினம் ஒவ்வொரு ஆண்டும் இரு சுற்றுக்களாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி வருகின்ற 17ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த குடற்புழு நீக்க மாத்திரை உட்கொள்வதன் மூலம் ரத்த சோகை சரி செய்யப்பட்டு குழந்தையின் ஊட்டச்சத்து நிலையில் முன்னேற்றம் என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவிப்பார்.
புதுக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த காட்டுப்பட்டியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.9) மற்றும் இலுப்பூர் வட்டம் திருநல்லூரில் செவ்வாய்கிழமை (பிப்.11) ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை மாநில அரசின் கால்நடை பராமரிப்புத் துறையின் அரசுச்செயலர் சத்யபிரதசாகு நேற்று வெளியிட்டுள்ளார்.
புதுகை மாவட்டம் மண்டையூர் காவல் நிலைய பெண் காவலர் விமலா சமீபத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் அவருடன் பணியில் சேர்ந்த பெண் காவலர்கள் வாட்ஸ் ஆப் குழு மூலம் அவரின் குடும்பத்துக்காக ரூ.16,65,421 நிதி திரட்டினர். இந்த நிதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக்குப்தா மூலம் நேற்று மறைந்த விமலாவின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.