Pudukkottai

News October 3, 2025

புதுகை அருகே புதுமாப்பிள்ளை தற்கொலை

image

புதுக்கோட்டை மாவட்டம் ரெகுநாதபுரம் அடுத்த உலாவயலை சேர்ந்தவர் தேவேந்திரன் (30). இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரது மனைவி மீது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக நேற்று (அக்.2) உலாவயலில் உள்ள அவரது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரில் ரெகுநாதபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 3, 2025

புதுகை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறன்பெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ரூ.15 ஆயிரம் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெற்று வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டும் நடைபெற உள்ள போட்டியில் https://tumilvalarchithurai.org/tkm/-ல் நவம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News October 3, 2025

புதுக்கோட்டை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று(அக்.2) இரவு 10 மணி முதல் இன்று(அக்.3) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News October 2, 2025

கதர் அங்காடியில் சேலைகளை ஆய்வு செய்த கலெக்டர்

image

புதுக்கோட்டையில் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு கீழ ராஜ வீதியில் உள்ள கதர் கிராம அங்காடியில் சிறப்பு விற்பனையை இன்று (அக் 2) தொடங்கி வைத்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா விற்பனைக்கு வைக்கப்பட்ட விதவிதமான சேலைகளை பார்வையிட்டார். இந்நிகழ்வில் உடன் மேயர் திலகவதி மற்றும் அரசு துறை அலுவலர்கள் மாநகராட்சி உறுப்பினர்கள் கதர் கிராம தொழில் வாரிய துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

News October 2, 2025

புதுக்கோட்டை: வங்கியில் வேலை APPLY NOW

image

பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள Credit Manager & Agriculture Manager பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. காலியிடங்கள் : 190
3. கல்வித் தகுதி: degree & Agri related degree
4.சம்பளம்.ரூ.64,820–ரூ.93,960
5. கடைசி நாள் : 10.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>இங்கே CLICK செய்க.<<>>
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 2, 2025

புதுகை: பைக்கிலிருந்து தவறி விழுந்தவர் துடிதுடித்து பலி

image

புதுக்கோட்டை மாவட்டம் வடவாளத்திலிருந்து காயாம்பட்டிக்கு மணிகண்டன் (29) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது காயம்பட்டி கிளை சாலையில் பைக்கிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி கோகிலா (29) அளித்த புகாரில் செம்பட்டி விடுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 2, 2025

புதுகை: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். இதனை ஷேர் பண்ணுங்க!

News October 2, 2025

புதுகை: ரயில்வேயில் 8,850 பணியிடங்கள் அறிவிப்பு

image

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 8850 பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு 12th முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் அக்.21-ம் தேதி முதல் www.rrbapply.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்த அற்புத வாய்ப்பை தவறவிடாதீங்க! SHARE NOW

News October 2, 2025

புதுகை: கடன் தொல்லையால் தீக்குளித்து தற்கொலை

image

பொன்னமராவதி, கொப்பனாபட்டி சேர்ந்த ஞானவேல் தனியார் நிறுவனத்தில் வாங்கிய கடனை அடைக்காததால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக நிதி நிறுவனத்தை சேர்ந்த ராஜேஷ் 33, மணி 29 ஆகியோர் ஞானவேல் மனைவியை ராதிகா 37,கடனை கட்ட சொல்லி நெருக்கடி கொடுத்துள்ளனர். இதில் மனம் உடைந்த அவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

News October 2, 2025

புதுகை மாவட்ட மக்கள் கவனத்திற்கு!

image

புதுகை மக்களே (03.09.2025) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் இதோ!
1.புதுக்கோட்டை மாநகராட்சி – அண்ணா மஹால், புதுக்கோட்டை
2.அறந்தாங்கி வட்டாரம் – VRV திருமண மண்டபம், சிலட்டூர் ஊராட்சி, அறந்தாங்கி தாலுகா
3.விராலிமலை வட்டாரம் – வி.ஏ. கமலா பாலா திருமண மண்டபம், விராலிமலை, விராலிமலை ஊராட்சி, விராலிமலை தாலூகா
மகளிர் உதவித்தொகை போன்றவை இதன் மூலம் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!