India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோடைகாலம் நெருங்கும் நிலையில் மின்சார துண்டிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு ஏதேனும் உங்கள் பகுதிகளில் ஏற்பட்டால் மின்சாரம் தொடர்பாக அறிந்து கொள்ள இந்த எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ▶செயற் பொறியாளர் O&M அறந்தாங்கி-04371-271650, ▶செயற் பொறியாளர் O&M கீரனூர்-04339-263330, ▶செயற் பொறியாளர் O&M திருமயம்-04333-274238, ▶செயற் பொறியாளர் புதுக்கோட்டை-04322-221870. உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க
பேராவூரணி அருகே விளங்குளத்தில் அட்சயபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சாமிக்கு விளக்கு ஏற்றி, சிறப்பு அபிஷேகம் செய்தால் நினைத்தது நிச்சயம் நடக்கும் என்பது ஐதீகம். மேலும் இங்கு அட்சய திரிதியை நாளில் வேண்டினால் செல்வம் செழிக்கும், நீண்ட ஆயுள் பெருகும், கல்வி போன்றவற்றில் சிறக்கலாம் என்பது நம்பிக்கையாகும். அட்சய திரிதியை நாளில் உங்கள் நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் SHARE பண்ணுங்க
ராமகவுண்டம்பட்டி வடக்கிபட்டியைச் சேர்ந்தவர் அழகன், தொழிலாளியான இவர், மதுரை-திருச்சி நெடுஞ்சாலையில் ராமகவுண்டம்பட்டி அருகே திங்கள்கிழமை சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார் மோதியதில் அழகன் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அழகன் உயிரிழந்தார். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் சடலத்தை கைப்பற்றி இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று 29-04-2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 டயல் அப் செய்யலாம். என்றும் மக்கள் நலனில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மதுபான கடை மற்றும் மதுபான கூடங்கள் அனைத்தும் டாஸ்மார்க் மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் (மே.1) “உழைப்பாளர் தினத்தை ” முன்னிட்டு மதுக்கடைகள் இயங்காது எனவும் அன்று சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறைக்கு செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 345 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.இந்நிலையில் இதற்கு விண்ணப்பிக்க வரும் 6.5.2025 மாலை 5:45 மணி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.விண்ணப்பங்களை https://pudukkottai.nic.in/ இணையம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கோடைகாலம் நெருங்கும் நிலையில் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு அல்லது குடிநீர் பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அவ்வாறு தங்கள் பகுதிகளில் குடிநீர் குறித்த பிரச்சனைகள் மற்றும் அடிப்படை குடிநீர் குறித்த புகார்களுக்கு நிர்வாக பொறியாளர், RWS பிரிவு, புதுக்கோட்டை – 04322-221521 இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்
புதுகை தலைமை அஞ்சல் அலுவலகங்களில் சித்திரை திருவிழா மெகா ஆதார் சிறப்பு முகாம் நாளையுடன் (ஏப்.30) முடிவடைகிறது. இதில் பெயர், முகவரி, செல்போன் எண் திருத்தம் செய்து கொள்ளலாம். இதற்கு பயோமெட்ரிக் திருத்தம் செய்ய ரூ.100 மட்டுமே கட்டணம் ஆகும். இந்த வாய்ப்பினை மாவட்டத்திலுள்ள 31 துணை அஞ்சலகங்களில் மூலம் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (28.04.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
உங்கள் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை அறிய தமிழக அரசால் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செல்போனில் TamilNilam Geo-Info என்ற செயலியை பதிவிறக்கம் செய்தால் போதும். அதில் நாம் தற்போது எந்த இடத்தில் இருக்கின்றோமோ அந்த கூகுள் மேப்புடன், சர்வே எண் ஆகிய விவரங்கள் தெரியும். இதில் வீடு, மனை உள்ளிட்ட ஆவணங்களை மக்கள் எளிதாக சரிபார்த்து கொள்ளலாம். அனைவருக்கும் Share செய்து பயனடையுங்கள்..
Sorry, no posts matched your criteria.