Pudukkottai

News October 4, 2025

புதுகை: கோவில் அருகே கஞ்சா விற்பனை!

image

திருமயம் அருகே உள்ள லேனா விளக்கு விநாயகர் கோவில் அருகே நாகராஜ் (20),முத்து மணி(31),பாண்டி அழகு (26) ஆகிய மூவரும் நேற்று (அக்.3) கஞ்சா பொருள் விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதனையடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நமண சமுத்திரம் போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 320 கிராம் மதிப்புள்ள கஞ்சா பொருள், ரூ.3300, ஆண்ட்ராய்டு மொபைல் 2-யும் பறிமுதல் செய்தனர்.

News October 4, 2025

புதுகை: மின்சாரம் பாய்ந்து படுகாயம்

image

ஆலங்குடி வ.உ.சி.தெருவில் புதிதாக வீடு கட்டும் பணியில் கட்டிட மேஸ்திரி ரவிக்குமார்(42) ஈடுபட்டிருந்தார். வீட்டின் மேல் தளத்தில் சென்ட்ரிங் கம்பிகளை தூக்கிய போது அருகில் இருந்த ஒயர் மின்சார கம்பியில் பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து ரவிக்குமார் படுகாயம் அடைந்தார். இதையடுத்து சகதொழிலாளர்கள் புதுகை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

News October 4, 2025

புதுகை: வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

image

பொன்னமராவதியை சேர்ந்தவர் சீனிவாசன். 29-ந் தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம ஆசாமிகள் வீட்டில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை திருடி சென்றனர். இந்த சம்பவம் குறித்து பொன்னமராவதி போலீசார் செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்ட போது சந்தேகத்தின் பெயரில் 2 பேரை கைது செய்து விசாரித்தில் இருவரும் தான் நகை, பணத்தை திருடி சென்றதும் தெரியவந்தது

News October 4, 2025

புதுக்கோட்டை ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியீடு

image

புதுக்கோட்டை மாவட்டம் ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நாளை (அக்.,4) பாலன் நகர், கருவாப்பிலான் கேட் தண்டவாளம் பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கேட் மூடி இருக்கும். எனவே பொதுமக்கள் அனைவரும் மாற்றுப் பாதையை பயன்படுத்திக் கொள்ள புதுக்கோட்டை ரயில்வே நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 3, 2025

புதுக்கோட்டை:  இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (அக்.2) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News October 3, 2025

புதுகை மக்களே இதை நோட் பண்ணுங்க

image

புதுகை மக்களே.. பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய 5 ஆவணங்கள் போதுமானது. இந்த <>லிங்கில் கிளிக் செய்து <<>>புதுகை மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன்பெறுங்கள். ஷேர் பண்ணுங்க.

News October 3, 2025

புதுகை: விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

image

புதுகை, கீழகாயம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் இவர் இருசக்கர வாகனத்தில், புதுக்கோட்டையிலிருந்து கீழ காயம்பட்டி பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது குறுக்கே நாய் வந்ததில் மணிகண்டன் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் அனுமதித்த நிலையில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

News October 3, 2025

புதுகை: அம்பேத்கர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

image

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மூலம் திருவள்ளுவர் தின விழா 2025-26 ஆம் ஆண்டிற்கான, Dr. அம்பேத்கர் விருது வழங்குதல் தொடர்பாக தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்கள் ஆகியோர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் புதுகை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News October 3, 2025

புதுகை: கார்மோதி 10 வயது சிறுமி உயிரிழப்பு

image

புதுக்கோட்டை பாலன் நகரிலிருந்து பெருங்கலூருக்கு கருப்பையா (45), கல்பனா (10), பாலமுருகன் (12) ஆகிய மூவரும் பைக்கில் சென்றுள்ளனர். பெருங்களூர் SOC-யில் சாலையை கடக்கும் போது அவர்களுக்கு பின்னால் காரில் வந்த தர்மபாண்டி (21) மோதியதில் சிறுமி கல்பனாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கருப்பையா அளித்த புகாரில் கணேஷ் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

News October 3, 2025

புதுகை: ஆடு, கோழி பண்ணை அமைக்க வேண்டுமா?

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!