India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுகை, மாத்தூர் அடுத்த தேவாலி ஜார்ஜ் தோட்டத்தில் கடந்த ஜன.4ஆம் தேதி விழுப்புரத்தை சேர்ந்த ராஜா(41) என்பவர், தென்னை மரத்தில் தேங்காய் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மரத்திலிருந்து கீழே விழுந்த அவர், படுகாயமடைந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது சகோதரர் அளித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

மீமிசல் அடுத்த கொளந்திரத்தைச் சேர்ந்தவர் பிரனீத் (13). இவர் 7ம் வகுப்பு படித்து வந்த நிலையில், படிப்பின் மீது ஆர்வமின்மையால் நேற்று கொளந்திரத்தில் உள்ள அவரது இல்லத்தில் தீக்குளித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார். தற்போது, இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணமேல்குடி பகுதியில் கடலோர பாதுகாப்பு குழு போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்தோணியார் புரத்தில் உள்ள நாட்டுப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சாவை கடத்த முயன்றதை கண்டறிந்தனர். இதனை அடுத்து கஞ்சாவை கடத்த முயன்ற ஆரோக்கிய ராகுல் (35), சிவசங்கர் (31) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 110 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!’

புதுகை மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

புதுகை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்கள் தனியார் துறையில் பணி அமர்த்தும் நோக்கில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வரும் 21ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10:00 மணி நடைபெறுகிறது. 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை 18 முதல் 35 வயது உள்ளோர் பயன்படுத்திக்கொள்ள கலெக்டர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்நாடு சுகாதார துறையில், காலியாக உள்ள 999 செவிலியர் உதவியாளர் (தரம்-2) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 999
3. வயது – 18 – 44
4. சம்பளம்: ரூ.15,700-ரூ.58,100
5. கல்வித்தகுதி: 10th & Nursing Assistants Course
6. கடைசி தேதி: 08.02.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

தமிழ்நாடு முதலமைச்சர் இளைய தலைமுறையினரின் சமூக முன்னேற்றம், உடற்கல்வி, விளையாட்டு சமூக இணைப்பு மற்றும் உடல் மன ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் விதமாக 22.01.26 ஆம் தேதி முதல் 08.02.26 வரை ஊராட்சி ஒன்றிய அளவில் மாவட்ட அளவில் “நம்ம ஆட்டம்” 2026 போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டியை சிறப்பாக புதுகை மாவட்டத்தில் அரசு அலுவலர்களும் அனைவரும் உடனிருந்து பணிகளை மேற்கொள்ள கலெக்டர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் இளைய தலைமுறையினரின் சமூக முன்னேற்றம், உடற்கல்வி, விளையாட்டு சமூக இணைப்பு மற்றும் உடல் மன ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் விதமாக 22.01.26 ஆம் தேதி முதல் 08.02.26 வரை ஊராட்சி ஒன்றிய அளவில் மாவட்ட அளவில் “நம்ம ஆட்டம்” 2026 போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டியை சிறப்பாக புதுகை மாவட்டத்தில் அரசு அலுவலர்களும் அனைவரும் உடனிருந்து பணிகளை மேற்கொள்ள கலெக்டர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.