Pudukkottai

News March 25, 2024

கார் கண்ணாடிகளை உடைத்து செல்போன், மடிக்கணினி திருட்டு

image

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நேற்று நடந்தது. இதில் பட்டுக்கோட்டை களத்தூரை சேர்ந்த பாலமுருகன் புதுக்கோட்டை சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஆகியோர் குடும்பத்துடன் கார்களில் வந்திருந்தனர். பின்னர் அவர்கள்
சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்தனர். அப்போது 2 கார்களின் கண்ணாடிகளை உடைத்து அதில் இருந்த செல்போன்கள், மடிக்கணினி, ரூ.700 ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

News March 25, 2024

கார்த்திக் சிதம்பரம் வேப்பமனு தாக்கல்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சிவகங்கை லோக்சபா தொகுதியில் காங். சார்பில் போட்டியிட கார்த்திக் சிதம்பரம் தனது வேட்புமனுவை கலெக்டரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆஷா அஜித்திடம் வழங்கினார். அருகில் அமைச்சர்கள் ரகுபதி, பெரியகருப்பன், மெய்யநாதன் ஆகியோர் உள்ளனர்.

News March 25, 2024

புதுக்கோட்டை அருகே பயங்கர தீ விபத்து; நாசம் 

image

அறந்தாங்கி சந்தைப்பேட்டை சாலையில் உள்ள கடையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ள பட்டாசுக்கடையில்   பிடித்த தீ அருகில் உள்ள நகைக்கடை, பாத்திரக்கடையில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்து வருகின்றனர். இதில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News March 25, 2024

தேர்தல் விழா: வேட்புமனு தாக்கல்

image

மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20-ல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News March 25, 2024

புதுகை: அலகு குத்தி பெண்கள் சிறப்பு வழிபாடு

image

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலையில் மிகவும் பிரசத்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நேற்று நடந்தது. இதையொட்டி புதுக்கோட்டை, கீரனூர், குளத்தூர், அன்னவாசல், நார்த்தாமலை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமமக்கள் பால்குடம் காவடி எடுத்து வழிப்பட்டனர் பெண்கள் அலகுகுத்தி தங்களது நேர்த்திகடனை செலுத்தி வழிபாடு நடத்தினர்.

News March 24, 2024

புதுகை: SDPI கட்சியின் அலுவலகத்தில் வேட்பாளர்

image

புதுக்கோட்டையில் அஇஅதிமுக-SDPI கூட்டணியின் திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கருப்பையா SDPI கட்சியின் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட அலுவலகத்திற்கு வருகை தந்து புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தலைவர் ஸலாஹுத்தீன் உள்ளிட்ட நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். இந்நிகழ்வில் SDPI கட்சியின் நிர்வாகிகள் மற்றும் அஇஅதிமுக கழக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

News March 24, 2024

புதுகை ஆட்சியர் அறிவுறுத்தல்

image

தோ்தல் விதிமீறல்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும் படை உள்ளிட்ட குழுவினா், ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான பணத்தைக் கைப்பற்றும்போது, உடனுக்குடன் பிரத்யேக செயலியில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ஐ.சா.மொ்சி ரம்யா நேற்று அறிவுறுத்தினாா். புதுகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு கூட்டத்தில் தெரிவித்தார்.

News March 24, 2024

புதுக்கோட்டை:மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கிய எம்எல்ஏ

image

புதுக்கோட்டை ismart பள்ளியின் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பாக தங்களது திறமைகளை வெளிப்படுத்திய மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார் புதுகை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா.
இந்நிகழ்வின்போது புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் மாநகராட்சி உறுப்பினர் காந்திமதி , வட்டக் கழக செயலாளர் பிரேம் ஆனந்த் மற்றும் கழக நிர்வாகிகளும், பள்ளியின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

News March 23, 2024

புதுகை: நாட்டுப்புற கலைஞர்கள் ஆட்சியரிடம் மனு 

image

புதுகை நாட்டுப்புற கலைஞர்கள் உள்ளிட்டோர் இரவு 7 முதல் 10 மணி வரை கலை நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க ஆட்சியர் மெர்சி ரம்யாவை ஆட்சியரகத்தில் சந்தித்த ஆக்காட்டி ஆறுமுகம் மற்றும் கந்தர்வகோட்டை செல்ல தங்கையா ஆகியோர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். தேர்தல் விதிகளின் அடிப்படையில் தேர்தல் நடைமுறைப்படி ஏழு மணி முதல் 10 மணி வரை நாட்டுப்புற நிகழ்ச்சி நடைபெறவும் காவல்துறை அனுமதி அளிக்கவும் கோரிக்கை மனு அளித்தனர்.

News March 23, 2024

குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

image

வெள்ளாளவிடுதி ஊராட்சியில் குடிநீர் வராததை கண்டித்து நேற்று கறம்பக்குடி- கந்தர்வகோட்டை நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தனர். இதில், சமாதானம் அடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

error: Content is protected !!