India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு, மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் விழிப்புணர்வுக்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று நேரில் பார்வையிட்டார் உடன் தனி வட்டாட்சியர் உடன் இருந்தார்.

கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 167 விசைப்படகுகளில் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான TN 08 MM 1418 என்ற விசைப்படகில் தினேஷ், முரளி, செல்வம் மற்றும் மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆகிய நான்கு பேருடன் சுமார் 32 நாட்டிக்கல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது எல்லை தாண்டி தாக இலங்கை அரசு கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்த பிரச்சார பேரணி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இன்று (04.09.2024) கொடியசைத்துத் துவக்கி வைத்து, குடிநீர் பரிசோதனைக் கருவியின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு கேட்டறிந்தார்.

புதுக்கோட்டை மாவட்ட துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற இரண்டு விசைப்படகையும் அதிலிருந்த 9 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு கடல்பகுதியில் வைத்து கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். யாழ்ப்பாண மீன்வளத் துறையிடம் நாளை காலை ஒப்படைக்க உள்ளனர்.

அறந்தாங்கி வழியாக இயங்கி கொண்டிருக்கும் வண்டி எண் 06070 திருநெல்வேலி – சென்னை எழும்பூர் சிறப்பு ரயிலை (12.09.2024 முதல் 28.11.2024) மூன்று மாதங்கள் நீட்டித்தும், மறுமார்கத்தில் வண்டி எண்:06069 சென்னை எழும்பூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில் (13.09.2024 முதல் 29.11.2024) மூன்று மாதங்கள் நீட்டித்தும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அரச மலைப் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா. இவர் அரசமலையில் மாடு குத்தியதில் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் மாடுகளை கண்டு அச்சமடைந்து வருகின்றனர். இதுகுறித்து காரையூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மின்னணுவாக்கு இயந்திரங்களை மாவட்ட ஆட்சி தலைவர் அருணா இன்று ஆய்வு செய்து, இயந்திரங்கள் பாதுகாப்பு கருதி சீல் வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் காங்கிரஸ் நகர பொறுப்பாளர் இப்ராஹிம் பாபு அரசு அதிகாரிகள், மாற்றுக்கட்சியினர் கலந்து கொண்டனர்.

ஈரோட்டில் 17 வயதுக்குட்பட்ட மாநில அளவிலான சப் ஜூனியர் மாணவ மாணவியர்கள் இரட்டையர் இறகு பந்து போட்டி நடைபெற்றது. இதில் தமிழக முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் புதுக்கோட்டை பள்ளி மாணவி திவ்யா வெற்றி பெற்றார். மேலும் மாணவிக்கு பள்ளி தாளாளர், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அரச மலைப் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா. இவர் அரசமலையில் மாடு குத்தியதில் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் மாடுகளை கண்டு அச்சமடைந்து வருகின்றனர். இதுகுறித்து காரையூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை ஒன்றியம் மேலப்பட்டி மகேஸ்வரன் (அறிவியல்), புதுக்கோட்டை டிஇஎல்சி பள்ளி யுனைசிகிரிஸ்டி ஜோதி (தமிழ்), அன்னவாசல் நிலையபட்டி ஆசிரியர் கலைவாணி, அசோக் நகர் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பழனிச்சாமி (அறிவியல்), திருமயம், காட்டுபாவா பள்ளிவாசல் பள்ளி வசந்த மலர் (ஆங்கிலம்) 5 பேருக்கும், 2024ஆம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது கிடைத்துள்ளது என தொடக்கக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.