Pudukkottai

News September 6, 2024

ஆலங்குடி அருகே அரசு பேருந்து மோதி வாலிபர் பலி

image

ஆலங்குடி அருகே கீரமங்கலம் செரியலூர் ஜெமின் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி மகன்வெங்கடேசன் (26). இவர் கீரமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அறந்தாங்கியில் இருந்து கறம்பக்குடி செல்லும் அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் இன்று உயிரிழந்தார். கீரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 6, 2024

அறந்தாங்கி அருகே கல்லால் அடித்து வாலிபர் கொலை

image

அறந்தாங்கி அருகே அழியாநிலை கிராமத்தில் கண்ணன், நாச்சியப்பன் ஆகியோர் நேற்று இரவு (செப்.5) ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் கண்ணன் பீர் பாட்டிலால் நாச்சியப்பனை தாக்கியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நாச்சியப்பன் அருகில் கிடந்த கல்லை எடுத்து கண்ணன் தலையில் போட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News September 6, 2024

முன்னாள் படை வீரர்களுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

முன்னாள் படை வீரர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திறன் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து மறு வேலைவாய்ப்பு பெறாமல் உள்ள முன்னாள் படை வீரர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற 043222 36593 என்ற எண்ணிலும், முன்னாள் படை வீரர்கள் நல அலுவலக உதவி இயக்குநரை நேரில் அணுகியும் பயன் பெறலாம் என புதுக்கோட்டை கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

News September 6, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு: ஆட்சியர்

image

புதுக்கோட்டை மாவட்ட காலநிலை மாற்ற இயக்க குழுவில் அலுவலக பணிகளை மேற்கொள்ள தொழில்நுட்ப உதவியாளர் தேர்வு செய்யப்பட உள்ளார். தற்காலிகமாக 12 மாதங்களுக்கு மட்டுமே இருக்கும் இப்பணிக்கு மாத ஊதியமாக ரூ.20,000 வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு மச்சுவாடியில் உள்ள வன அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

News September 6, 2024

உடற்கல்வி ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது

image

புதுக்கோட்டை மாவட்டம் நச்சாந்துப்பட்டி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றும் ராக்கேஷ் இன்று சென்னையில் நடைபெற்ற டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் விழாவில் நல்லாசிரியர் விருதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மொழிகளிடமிருந்து பெற்றார். நல்லாசிரியர் விருது பெற்ற உடற்கல்வி ஆசிரியருக்கு பள்ளி மாணவர்கள் வாழ்த்துக்கள்

News September 6, 2024

புதுக்கோட்டை தனியார் பள்ளி ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது

image

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சென்னையில் நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பாக கலந்து கொண்டு புதுக்கோட்டை மாலையீடு அருகில் இயங்கிவரும் மவுண்ட் சீயோன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் கிருபாவிற்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கி பாராட்டினார்.

News September 5, 2024

அன்னவாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

image

அன்னவாசல் ஒன்றியம் மதியநல்லூர் கிராமத்தில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் அருணா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். கண்காணிப்பாளர் சுந்தரவல்லி பொதுசுகாதாரத்துறை அலுவலர் மருத்துவர் ராம்கணேஷ் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் உடன் இருந்தனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் அப்பகுதி கிராமத்து பொதுமக்கள் பரிசோதனை செய்து பயன்பெறுகிறார்கள்.

News September 5, 2024

கல்லூரியில் படிக்கும் இளம் பெண் மாயம்

image

மண்டையூர் அருகே கீழ மேடு கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன். இவரது 17 வயது மகள் திருச்சியில் உள்ள பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த மூன்றாம் தேதி வீட்டில் இருந்து கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து மண்டையூர் காவல் நிலையத்தில் தந்தை ராமகிருஷ்ணன் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 5, 2024

அரசு மருத்துவமனை நடந்து வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

image

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் இயங்கி வரும் அரசு பொது மருத்துவமனையில் நடந்து வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அருணா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுந்தரவல்லி பொது சுகாதாரத்துறை மாவட்ட அலுவலர் மருத்துவர் ராம்கணேஷ் மற்றும் மருத்துவர்கள் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News September 5, 2024

வட்டார வளர்ச்சி புதுக்கோட்டை ஆட்சியர் ஆய்வு

image

விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் எ.சுந்தரவல்லி, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா தலைமையில் இன்று (04.09.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

error: Content is protected !!