Pudukkottai

News April 30, 2024

புதுக்கோட்டை அருகே உண்ணாவிரதம்

image

புதுக்கோட்டை மாநகராட்சியில் தங்கள் கிராமங்களை சேர்க்கக் கூடாது என்று புதுக்கோட்டை அருகே உள்ள மேட்டுப்பட்டி, மற்றும் கொப்பரையில் திருமலை சமுத்திரம், திருக்கட்டளை ஊர் பொதுமக்கள் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாநகராட்சியில் தங்கள் கிராமங்களை இணைப்பதால் ஊராட்சி நிர்வாகம் உங்களுக்கு கிடைக்கக்கூடிய சலுகைகள் கிடைக்காது எனக் கூறி இந்தப் போராட்டமானது நடைபெற்று வருகிறது.

News April 30, 2024

அமைச்சர் தலைமையில் பணி ஓய்வு பாராட்டு விழா

image

அறந்தாங்கி இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் தங்களுக்காக அயராது உழைத்த இல்லம் கல்வி அறந்தாங்கி வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் எம் கணேசன்க்கு சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் பணி ஓய்வு பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவை அறந்தாங்கி ஒன்றியத்தின் தன்னார்வலர் பௌலின் நீதி அவர்களின் முன்னேற்பாட்டோடு பணி ஓய்வு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

News April 30, 2024

புதுக்கோட்டை:நாளை மதுபானக் கடைகளுக்கு விடுமுறை!

image

உலக தொழிலாளர் தினமான
நாளை மே 1 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து இந்திய தயாரிப்பு அன்னிய மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களுக்கு(பார்) விடுமுறை என்பதால் மது விற்பனை ஏதும் நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

News April 29, 2024

புதுக்கோட்டை அருகே விபத்து; மரணம் 

image

அறந்தாங்கி அருகே கீழையூரை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன்
லாரி டிரைவர்.நேற்று
இரவு 8 மணிக்கு குரும்பூர் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தபோது அந்த வழியாக சென்ற கார்
எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்தகாயம் அடைந்த வெங்கடேஸ்வரன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 29, 2024

புதுக்கோட்டை அருகே வீடு புகுந்து; எல்லாம் போச்சே

image

கந்தர்வகோட்டை மேல்கரை வீதியில் வசித்து வருபவர் சையது இப்ராஹிம் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார்.நேற்று காலை வீட்டிற்கு சென்று பார்த்த போது 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு கிடந்தன. மேலும் அதில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம், 100 கிராம் வெள்ளிபொருட்கள் , புடவைகள் உள்ளிட்டவை திருட்டு போனது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

News April 29, 2024

புதுக்கோட்டை அருகே வீடு புகுந்து; எல்லாம் போச்சே

image

கந்தர்வகோட்டை மேல்கரை வீதியில் வசித்து வருபவர் சையது இப்ராஹிம் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார்.நேற்று காலை வீட்டிற்கு சென்று பார்த்த போது 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு கிடந்தன. மேலும் அதில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம், 100 கிராம் வெள்ளிபொருட்கள் , புடவைகள் உள்ளிட்டவை திருட்டு போனது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

News April 29, 2024

சோழீஸ்வரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

image

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
உலகில் அமைதி நிலவ வேண்டியும், மழை பெய்ய வேண்டியும் பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரா் கோயில் முற்றோதல் குழுவினரால் நடத்தப்பட்ட நிகழ்வின் தொடக்கமாக நடராஜருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதையடுத்து முற்றோதல் குழுவினரால் திருவாசகம் மற்றும் பன்னிரு திருமுறைகள் படிக்கப்பட்டது.

News April 28, 2024

புதுக்கோட்டை அருகே இருவரை மடக்கிய போலீஸ் 

image

கறம்பக்குடி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கறம்பக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் நேற்று கறம்பக்குடி கடைவீதி பகுதியில் சோதனை நடத்தினர் அப்போது தாணியக்கடை முக்கம் அருகே புகையிலை பொருட்களை விற்ற
அஜித்குமார், முகாசின் ஆகியோரை போலீசார்
கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்

News April 28, 2024

புதுக்கோட்டையில் மாநில அளவிலான மருத்துவ கருத்தரங்கு!

image

புதுக்கோட்டையில் தமிழ்நாடு
மனநல மருத்துவ சங்கத்தின் சார்பில் நேற்று தொடங்கிய 2 நாள் மனநல மருத்துவ கருத்தரங்கிற்கு மாநிலத்தலைவர் டாக்டர் சி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கருத்தரங்க மலரை மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா வெளியிட்டார். இதில் மூத்த மருத்துவர்கள் ராமசுப்பிரமணியன், ஜெயந்தினி , விஜய்சுவாமிநாதன் , அரசு மனநல காப்பகத்தின் இயக்குனர் மலையப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News April 27, 2024

புதுக்கோட்டை: பாம்பு கடித்து சிறுவன் பலி

image

காரையூர், விளாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ்(6) நேற்று மாலை வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த பாம்பு கடித்ததில் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.  அவரை மீட்டு அருகிலிருந்தவர்கள் புதுகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மாதேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து காரையூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். 

error: Content is protected !!