Pudukkottai

News March 29, 2024

மயிலை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்

image

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த வடுகப்பட்டி பகுதியில் உள்ள உதய பாரதி என்பவருக்கு சொந்தமான 60 அடி ஆழம் உள்ள கிணற்றில் தவறி விழுந்த தேசிய பறவையான மயில் அதைப்பார்த்த கிராம மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் அவர்கள் மயிலை பத்திரமாக மீட்டு வனத்துறையில் விட்ட கந்தர்வகோட்டை தீயணைப்பு துறையினர்..

News March 29, 2024

புதுக்கோட்டை பெட்டிகடையில் 25 கிலோ புகையிலை பறிமுதல்

image

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தனிப்படை போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொன்னாங்கண்ணப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியன்
என்பவர் மளிகை கடையில்
புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார்
சிவசுப்பிரமணியனை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

News March 29, 2024

இரும்பாளியில் வைக்கோல் போர் தீயில் நாசமானது

image

இரும்பாளியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி, இவருக்கு சொந்தமான வைக்கோல் போரில் நேற்று மார்ச் 28-ந்தேதி மாலை திடிரென தீ பிடித்தது. பின்னர் மலமலவென பிடித்த தீயினால் வைக்கோல் போர் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக சிப்காட் தீயணைப்பு  நிலையத்திற்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினா் போராடி தீயை அணைத்தனர்

News March 29, 2024

புதுக்கோட்டை: கால்வாய்களை சுத்தம் செய்யும் பணி!

image

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்ப்பட்ட தெற்கு மூன்றாம் வீதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணிகளை நேற்று காலை புதுக்கோட்டை மாநகராட்சி துணை மேயர் லியாகத் அலி ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் பொதுமக்கள், மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் உடன் இருந்தனர்.

News March 28, 2024

அதிமுக நிர்வாகி மகனை கைது செய்யக்கோரி சாலை மறியல்

image

புதுக்கோட்டை, அறந்தாங்கியை அடுத்த திருவாப்பாடியில் உள்ள ஏரியில் அப்பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் சடலம் 27 ஆம் தேதி காலை கண்டெடுக்கப்பட்டது. விக்னேஷ் மரணத்திற்கு அறந்தாங்கி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பெரியசாமியின் மகன் தமிழ்வேந்தன் , அவரது நண்பர் யோகேஸ்வரன் ஆகியோர்தான் காரணம் எனக் கூறிய அவர்களை கைது செய்ய வலியுறுத்தி திருவப்பாடியில் விக்னேஷின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News March 28, 2024

புதுக்கோட்டை அருகே விபத்து; 3 பேரின் நிலை?

image

ஆலங்குடி அருகே கம்மங்காடு மேலப்பட்டியை சேர்ந்தவர்
ராஜேஷ் அவரது மகன் ரோகித் இவர்கள் இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் வாரச்சந்தைக்கு சென்று வீட்டு வீட்டிற்கு திரும்பிய போது அந்த வழியாக மேலப்பட்டியை சேர்ந்த தர்மராஜ் அதேபகுதியை குணா ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிளும், ராஜேஷ் வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் ராஜேஷ், ரோகித், விஷ்ணு ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.

News March 28, 2024

புதுக்கோட்டை அருகே துடிதுடித்து மரணம்

image

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (28) இவர் அதே பகுதியில் உள்ள குளத்தில் நேற்று குளிக்கச் சென்றார்.ஆழமான பகுதிக்கு சென்ற அவர் நீரில் மூழ்கினார்.நீச்சல் தெரியாததால் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சமபவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

News March 27, 2024

புதுகை நகர் பகுதியில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு

image

புதுக்கோட்டை நகர் பகுதியில் இன்று அதிமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது இந்த நிலையில் புதுக்கோட்டை நகரில் அதிமுகவினர் கோவில்பட்டி, திருக்கோகர்ணம் பகுதிகளில் மகளிர் அணி நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கு ஆதரவாக வீடு வீடாக துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

News March 27, 2024

புதுகையில் ரூ.60 ஆயிரம் பறிமுதல்

image

புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி, வெள்ளனூர் கால் நிலையம் எல்லைக்குட்பட்ட வாகவாசல் வளைவு அருகில் நேற்று காலை தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, உரிய ஆவணங்கள் இல்லாததால், மளிகைக் கடைக்காரரிடம் இருந்து ரூ.60 ஆயிரத்தை தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.

News March 27, 2024

புதுகை: தேர்தல் விழிப்புணர்வு 

image

இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் வளாகத்தில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் – 2024 தொடர்பாக, புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில், தேர்தல் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை
மாற்றுத்திறனாளிகளுக்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று வழங்கினார்.

error: Content is protected !!