Pudukkottai

News May 6, 2024

புதுக்கோட்டையில் மாணவ, மாணவிகள் 93.79% தேர்ச்சி

image

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மொத்தம் 94.56 % இதில் புதுக்கோட்டையில் பயின்ற மாணவ, மாணவிகள் 93.79% தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுக்கோட்டையில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டும் மாணவிகளே அதிகம் தேர்ச்சியும் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

News May 6, 2024

புதுக்கோட்டை:கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது

image

ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்லாலங்குடி ஐ.டி காலணியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுத்தி சுற்றித்திரிந்தார். இதை பார்த்த போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

News May 6, 2024

புதுக்கோட்டை:கோயில்களில் பிரதோஷ வழிபாடு!

image

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கோயில் முன்பு உள்ள நந்திக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான, அபிஷேகங்கள் செய்யப்பட்டு
சிறப்பு அலங்காரம், ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைப்போன்று வேந்தன்பட்டி நெய்நந்தீஸ்வரர் , திருக்களம்பூர் கதலிவனேஸ்வரர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News May 5, 2024

புதுக்கோட்டை: மாதா கோயில் தேர்பவனி!

image

புதுகை, திருக்கோகர்ணம் கோவில்பட்டி அருகே அமைந்துள்ள மாதா ஆலய 21 ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன்
முக்கிய நிகழ்வான தேர் பவனி நேற்று இரவு எஸ்எம்எஸ் பங்கு ஆலய வளாகத்திலிருந்து தொடங்கியது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர் பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்று புதுகை மாதா ஆலயத்தை சென்றடைந்தது. அங்கு கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

News May 5, 2024

புதுக்கோட்டை அருகே பயங்கர தீ விபத்து; நாசம் 

image

கறம்பக்குடி அருகே கோட்டைகாடு கிராமத்தை சேர்த்த விவசாயிக்கு சொந்தமான தைல மர காட்டில் நாணல் சருகுகள்
தீ பிடித்து எறிவதாக கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு வந்த
தகவலையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று எறிந்து கொண்டிருந்த தைல மரக்காடு முழுவதும் எரிவதற்குள் தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

News May 5, 2024

புதுக்கோட்டை அருகே திடீர் தீ விபத்து 

image

விராலிமலை அருகே கொடும்பாளூர் கிராமத்தில் நேற்று அய்யன்குளத்தின் கரையின் ஒரு பகுதியில் இருந்த புளிய மரத்தி லிருந்து நேற்று கரும் புகை வெளியேறியது.
அதனைக்கண்ட அப்பகுதி மக்கள் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு கொடுத்தனர் அதற்குள் அந்த மரத்தில் தீ
பரவியது. இதையடுத்து, இலுப்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்

News May 4, 2024

தந்தையை அடித்துக்கொன்ற மகன் கைது

image

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள கீழக்குறிச்சியில் கணேசன் என்பவரை இன்று அவரது மூத்த மகன் வினோத்குமார் இரும்பு கம்பியால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அன்னவாசல் போலீசார் கிணற்றில் பதுங்கியிருந்த வினோத்குமாரை தீயணைப்புதுறையினர் உதவியுடன் கைது செய்தனர்.

News May 4, 2024

புதுக்கோட்டையின் அடையாளம் ஆவுடையார்கோவில் சிறப்பு!

image

திருப்பெருந்துறை ஊரில் உள்ள ஆவுடையார்கோயில் திருவாசகம் பாடப்பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரையில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். 1100 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட இக்கோவில் கட்டடக்கலை வியக்கும் வகையில் அமைத்துள்ளனர். இக்கோவிலுள் உள்ள தேர்ச் சக்கரத்தின் குறுக்களவு 90 அங்குலம் மற்றும் அகலம் 36 அங்குலமாகும். 5000 பேர் சேர்ந்து இத்தேரை இழுக்க முடியும். வியப்பில் ஆழ்த்தும் கற்சிலைகளை இங்கு காணலாம்.

News May 4, 2024

குடிநீா் விநியோக ஏற்பாடுகள்: புதுகை ஆட்சியா் ஆய்வு

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோடைக்கால குடிநீா் விநியோகப் பணிகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஐ.சா.மொ்சி ரம்யா வெள்ளிக்கிழமை அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இயல்பைவிடவும் அதிக வெயில் அடித்து வருவதால் நீா்நிலைகளில் தண்ணீா் இருப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது. அதனை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்.

News May 4, 2024

புதுக்கோட்டை அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம் 

image

புதுக்கோட்டை கீரனூா் அருகே ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழந்தாா். பாலகிருஷ்ணபுரத்தைச் சோ்ந்தவா் சுப்பையா இவா், கீரனூா் அருகே கிருஷ்ணபாரப்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்தாா். சென்னை- காரைக்குடி பல்லவன் ரயில் மோதி அவா் இறந்தாா். இதுகுறித்து திருச்சி ரயில்வே போலீஸாரும், கீரனூா் காவல் நிலைய போலீஸாரும் விசாரித்து வருகின்றனா்.

error: Content is protected !!